முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு)



 ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும் சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய் உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்கு நன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டை விட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில் சொல்லுகிறேன்.


சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விட திரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின் வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரே சம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்து அப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு வருவது - பின்னணியில் எப்படி வெற்றிகொள்கிறார்கள் என்பதே ஒற்றை வரி. சகோதரிகளாக வரும் சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசனின் வாழ்க்கைப் பின்னணி, அடிப்படையான இயல்புகள், வாழ்க்கைப் பிரச்சனைகள் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறன. இங்கிலாந்தில் வாழும் சுஹாசினிக்கு தன் மகனை போதுமான அளவுக்கு கவனிக்க முடியவில்லை, அவனுக்கு டிஸ்லெக்ஸியா எனும் ஆற்றல் குறைபாடு உள்ளது எனும் குற்றவுணர்வு, அனுவுக்கு நீண்ட கால முயற்சிக்குப் பின்னரும் மகப்பேறு இல்லை எனும் இயலாமை, ஸ்ருதிக்கு தன் விருப்பங்களை தாய் புரிந்து கொண்டு ஆதரிக்கவில்லை எனும் கோபம். உறவுகள் மீதான புரிதல்கள், வாழ்க்கை மீதான நம்பிக்கை, குடும்பத்தின் மீதான பாசம் தோன்றி இவர்கள் நெருக்கடியை கடப்பதே கதை. இதை ஒரு வசனத்தின் மூலம் சாதிக்கிறார்கள் என்பது நம்பும்படியாய் இல்லையென்றால் படத்தில் ஓரளவுக்கு இதை சமாளித்து விடுகிறார்கள். இறுதிக் காட்சியில் அம்மா கோமாவில் இருந்து முழுமையாய் மீண்டும் தனக்கு ஒரு கப் காப்பி வேண்டும் எனக் கேட்பதை பார்வையாளனுக்கு இன்னும் திருப்தி ஏற்படும்படி அமைத்திருக்கலாம் - அம்மாவின் நிலை மோசமாகி பின்னர் எதிர்பாராமல் சீராவதைப் போல அல்லது வேறு விதங்களில் (தேய்வழக்குதான், ஆனால் வேலை செய்யும்.).

இப்படத்தின் ஒளிப்பதிவு, framing, blocking மற்ற படங்களை விட சிறப்பாக உள்ளது. அதாவது மணிரத்னம் ஸ்டைலில், ஒவ்வொரு கடையும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் என்பதைப் போல உள்ளது. .தா., சுஹாசினி தன் அம்மாவை வீட்டில் வைத்து, மருத்துவ கவனிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வதை விரும்பவில்லை; அவர் சற்று எதிர்மறையாக அதிசயங்களில் நம்பிக்கை இல்லாதவராக உள்ளார். இதைக் காட்டுவதற்காக இவர் ஆரம்பத்தில் தோன்றும் காட்சிகளில் சட்டகத்தில் பாதி திறந்த கதவின் பக்கத்தில் நிற்பது போல அமைத்திருக்கிறார்கள். அன்பின் மகத்துவத்தை அவர் புரிந்து கொண்ட பின் அவர் திறந்த சட்டகங்களில் தோன்றுகிறார்.    


 ஸ்ருதி ஐபேட் வழியாக தன் அம்மாவுடன் பேசும் போது அவரது கை மட்டும் சத்தம் வருகிற திசையாக எழுந்து தொட முயலும். இக்காட்சி ஒரு உருவகம் போல உள்ளது - ஒரு சிறு அசைவால் காலம் ஏற்படுத்தும் தொலைவைக் கடந்து எளிதில் அன்பைத் தொட, உணர்த்த முடியும் என்பதற்கான உருவகம். அதை ஒரு நகைமுரணாகவும் (திரையில் தோன்றும் வெர்ச்சுவல் உண்மையை தொட முடியாதே), அவரது ஆசீர்வாதமாகவும் கூட தோன்றுகிறது.


இப்படியான நுணுக்கங்களை மற்ற படங்களில் காண முடியவில்லை. ஒரே குறை நீளமான வசனங்கள். வசனங்களைக் குறைத்தால் படத்தை இன்னும் சிக்கனமாக பண்ணியிருக்கலாம்.


கார்த்திக் சுப்புராஜின் Miracle ஒரு வித்தியாசமான சமூகப் பகடி. அவரது படங்களின் டிப்பிக்கலான ஸ்டைல் அம்சங்களும் உண்டு - பழைய பாடல்களை எதிர்பாராத இடங்களில் ஒலிக்க விடுவது, குறைந்த ஒளியில் அதிரடிக் காட்சிகள், அசமந்தமான நகைச்சுவை என. ஒரே குறை உணர்ச்சி ஆழம் இல்லாதது. படம் முடியும் போது கிளைமேக்ஸ் நம்மை ஆச்சரியப்படுத்துகிறதே ஒழிய திருப்தி அளிக்கவில்லை. சமூகப் பகடி எனும் போது ஒரு சமூகத்தீமையை சித்தரித்து, அதனால் ஏற்படுகிற பாதிக்களை சுருக்கமாய் காட்டி இறுதியில் வில்லன் தமாஷாக இழப்பை சந்தித்து பல்ப் வாங்குவதாய் காட்டலாம். இதில் வில்லனுக்கு இழப்பு நேரும் போது அவன் அதனால் வருத்தப்படுகிறானா இல்லையா, அவன் சாமியாரா அல்லது வட்டிக்கு விட்டு, மக்களை வாட்டி சம்பாதிக்கிற கொடூரனா என்பது தெளிவாக இல்லை. (எல்லா கார்த்திக் சுப்புராஜ் படங்களையும் போல இதிலும் வில்லன் யார், ஹீரோ யார் எனும் குழப்பம் உள்ளது.) கிளைமேக்ஸ்நேரம்”, “சூப்பர் டீலக்ஸ்போன்ற படங்களை நினைவுபடுத்துகிறது.


சுதா கொங்கோராவின்இளமை இதோ இதோரொம்ப பலவீனமான திரைக்கதையைக் கொண்ட படம். பிரதான பாத்திரங்களுக்கு எந்த பெரிய சவால்களும் இல்லை என்பது படத்தை ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பைப் போல படுக்க வைக்கிறது.

அவரும் நானும் - அவளும் நானும்கௌதம் மேனனின் படம் என என்னால் நம்ப முடியவில்லை. அவரது முத்திரை இல்லாத படம்பேத்தி வீட்டுக்கு வந்ததும் அந்த தாத்தா தன் மனத்தடைகளை கடந்து ஏற்கப் போகிறார் என்பது ஒற்றைவரி. ஆனால் இக்கதை முதல் ஐந்து வினாடிகளுக்குள் முடிந்து போகிறது. அதன் பிறகு முழுக்கவே அழுகைப் படலம் தான். ஆனாலும் சில இடங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன, எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


ராஜீவ் மேனனின் Reunion தான் இருப்பதிலே மட்டமான படம் - அது யாருடைய கதை? போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டிய ஆண்டிரியாவின் கதையா? எனில் ஏன் அவ்வளவு நேரத்தை லீலா சேம்சன், குரு சரணில் வீணடிக்க வேண்டும்? ஆண்டிரியா போதைக்கு அடிமையாகக் காரணம் தன் கலை வாழ்வில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்பது. அதுவே அவரது சவால். அதைக் கடப்பதே அவருக்கான அடிப்படை விழைவு. ஆனால் அதை குருசரண் லவ் யூ சொன்னதும், லீலா சேம்சன் அன்புடன் பராமரித்ததும் அவரால் கடந்து விட முடியும் என்பதை நம்ப முடியவில்லை. கிளைமேக்ஸை வேறுவிதமாய் அமைத்திருக்கலாம் - குரோசாவாவின்இகிருபோல.


இக்கதைகளை வீட்டுக்குள் வைத்து எடுத்தது மற்றொரு பிரச்சனை - அது இயல்பாகவே கதைகளை குடும்பத் தளத்துக்குள் முடக்கி விடுகின்றன. இந்த கொரோனா காலத்தில் வெளியே எத்தனையோ பிரச்சனைகள், எதிர்பாரா அனுபவங்கள் ஏற்பட்டதைப் பார்த்தோம். ஊருக்கு நடந்தே போக முயன்று வழியில் செத்துப் போன மக்கள், சிகிச்சைக்காக மாநில எல்லைகளுக்கு, இடையே பாஸ் வாங்கி அலைபாய்ந்த மக்கள், நிறுவனங்களின் ஊழல், மருத்துவர்கள், செவிலியரின் தியாகம், பயணத்தின் போது விடுதியில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளானவர்கள் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்கள் என சமூகவலைதளங்களிலேயே சினிமாவுக்குப் பொருத்தமான எத்தனையோ முக்கியமான ஒற்றை வரிகளைப் பார்த்தோம். எதிர்காலத்தில் இவ்வகையான கொரோனா கதைகளை இயக்குநர்கள் எடுக்க முயல வேண்டும்.



இந்த 5 படங்களில் முதல் மார்க் வாங்கி பாஸ் ஆகிறவர் சுஹாசினி தான். என்னாலே நம்ப முடியவில்லை! இவ்வளவு நல்ல திரைமொழி சுஹாசினியிடம் உண்டா? உண்மையானமிராக்கிள்இதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...