முதலில் மட்டையாடிய ஹைதராபாத் 201 ஓட்டங்களை இலக்காக வைத்தது. அடுத்தாடிய பஞ்சாப் 133க்கு ஆல்அவுட் ஆனது,
எப்படி ஹைதராபாத் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தார்கள்?
- 160 துவக்க கூட்டணி
- பஞ்சாபின் மிதவேக வீச்சாளர்கள் மற்றும் சுழலர்கள் மோசமான லைனை வீசியது; ஒருவித பயத்துடன்குழப்பத்துடன் பந்து வீசியது.
- பேர்ஸ்டோவின் அதிரடியான அணுகுமுறை, தனக்கான இடங்களை தேர்ந்தெடுத்து அவர் அடித்தது, வார்னர் தன் டைமிங் இன்மையை புரிந்து கொண்டு பொறுமையாக பேர்ஸ்டோவுக்கு துணைசெய்தது.
பஞ்சாப் எப்படி மீண்டார்கள்?
ஹைதராபாத் முதல் விக்கெட் வீழ்ந்த பின்னர் பஞ்சாப் வீச்சாளர்கள் தன்னம்பிக்கை பெற்று சுதாரித்தார்கள்; நேராக சரியான நீளத்தில் வீசினார்கள். குறிப்பாக, ரவி பிஷ்னாயின் இறுதி இரு ஓவர்கள் மற்றும் அர்ஷ்தீப்சிங்கின் யார்க்கர்கள். இருவரும் இணைந்து ஓட்டங்களை வறள வைத்து விக்கெட்டுகளை எடுத்து ஓரளவுக்குகாப்பாற்றினார்கள். முஜீபும் சுமாராக வீசினார். கார்ட்டரெல் மற்றும் ஷாமி அணியை கைவிட்டார்கள். ஒருவேளை அவர்களும் சுதாரித்திருந்தால் 170-180க்கு கட்டுப்படுத்தியிருக்கலாம்.
பஞ்சாப்பின் மட்டையாட்டம் எப்படி இருந்தது?
மயங்க் அகர்வால் நன்றாக ஆடினாலும் ராகுலின் பதற்றம் இன்று அவர்களை பின்னுக்கு தள்ளியது - முதலில்மயங்கை ரன் அவுட் ஆக்கினார், அடுத்து பவர் ஹிட்டராக சிம்ரனை முதல் ஆட்டத்தில் இறக்கி விட்டதுஎடுபடவில்லை, ஆனால் அவரது presence, ஆக்ரோஷமான இருப்பு, தன்னம்பிக்கை, துடிப்பு எனக்குபிடித்திருக்கிறது.
சிம்ரனுக்குப் பிறகு வந்த பூரன் உடனே பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி பிரமாதமாக ஆடினார். ஆனால்ராகுல் இதையெல்லாம் உணராததைப் போல மற்றொரு உலகத்தில் இருந்தார். தொடர்ந்து இரு சிக்ஸர்களைபூரம் அடித்த ஓவரிலேயே தேவையில்லாமல் தூக்கி அடித்து வெளியேறினார். மாறாக ஒற்றை, இரட்டைஓட்டங்களில் கவனம் செலுத்தி அவர் பூரனுடனான கூட்டணியை வலுப்படுத்தி இருந்தால் பஞ்சாப் இன்றுவென்றிருக்கும். அடுத்தடுத்து வந்த மேக்ஸ்வெல், மந்தீப், முஜீப் போன்றவர்களும் இந்த அடிப்படையானநடைமுறை புரிதல் இல்லாமலே ஆடி பூரனின் வேகத்துக்கு தடையிட்டனர். இதையும் ஒரு “ராகுல் விளைவு” எனப் பார்க்கலாமா?
மேக்ஸ்வெல்லை தொடர்ந்து மத்திய வரிசையில் ஆட வைப்பது பஞ்சாபுக்கு உதவவில்லை - மிக மோசமானஆட்டநிலையில் அவர் இருக்கிறார். வரும் போட்டிகளில் அவர் இறுதி மூன்று ஓவர்களை மட்டுமே ஆடவேண்டும். அல்லது அவரிடத்தில் கெயிலை களமிறக்கி ராகுலை 5வது எண்ணில் ஆடச் செய்ய வேண்டும்.
ஹைதராபாத்தின் பந்து வீச்சு எப்படி இருந்தது?
ராகுலுக்கு அவர்கள் மிக நன்றாக வீசினார்கள் - நேராக உள்வரும் பந்துகளை சரியான நீளத்தில் வீசினார்கள்.
over the wicketஇல் வந்து அவர்களது இடதுகை வேகவீச்சாளர்கள் வீசியது, அதுவும் பெரிதாய் அடிக்கஇடம்கொடுக்காமல் நேராக வீசியது உதவியது. வரும் ஆட்டங்களில் இந்த யுக்தியை பிற வீச்சாளர்களும் ரூம்கொடுத்து அடித்தாடுகிற மட்டையாளர்களுக்கு பயன்படுத்தலாம்.
ஹைதராபாத் வெல்ல வேறெது உதவியது?
களத்தடுப்பு - இரண்டு ரன் அவுட்டுகள்.

கருத்துகள்