முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைதராபாத் vs பஞ்சாப் அக்டோபர் 8, 2020 - குறிப்புகள்



முதலில் மட்டையாடிய ஹைதராபாத் 201 ஓட்டங்களை இலக்காக வைத்ததுஅடுத்தாடிய பஞ்சாப் 133க்கு ஆல்அவுட் ஆனது,


எப்படி ஹைதராபாத் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தார்கள்?


  1. 160 துவக்க கூட்டணி
  2. பஞ்சாபின் மிதவேக வீச்சாளர்கள் மற்றும் சுழலர்கள் மோசமான லைனை வீசியதுஒருவித பயத்துடன்குழப்பத்துடன் பந்து வீசியது.
  3. பேர்ஸ்டோவின் அதிரடியான அணுகுமுறைதனக்கான இடங்களை தேர்ந்தெடுத்து அவர் அடித்ததுவார்னர் தன் டைமிங் இன்மையை புரிந்து கொண்டு பொறுமையாக பேர்ஸ்டோவுக்கு துணைசெய்தது.

பஞ்சாப் எப்படி மீண்டார்கள்?


ஹைதராபாத் முதல் விக்கெட் வீழ்ந்த பின்னர் பஞ்சாப் வீச்சாளர்கள் தன்னம்பிக்கை பெற்று சுதாரித்தார்கள்நேராக சரியான நீளத்தில் வீசினார்கள்குறிப்பாகரவி பிஷ்னாயின் இறுதி இரு ஓவர்கள் மற்றும் அர்ஷ்தீப்சிங்கின் யார்க்கர்கள்இருவரும் இணைந்து ஓட்டங்களை வறள வைத்து விக்கெட்டுகளை எடுத்து ஓரளவுக்குகாப்பாற்றினார்கள்முஜீபும் சுமாராக வீசினார்கார்ட்டரெல் மற்றும் ஷாமி அணியை கைவிட்டார்கள்ஒருவேளை அவர்களும் சுதாரித்திருந்தால் 170-180க்கு கட்டுப்படுத்தியிருக்கலாம்.


பஞ்சாப்பின் மட்டையாட்டம் எப்படி இருந்தது?


மயங்க் அகர்வால் நன்றாக ஆடினாலும் ராகுலின் பதற்றம் இன்று அவர்களை பின்னுக்கு தள்ளியது - முதலில்மயங்கை ரன் அவுட் ஆக்கினார்அடுத்து பவர் ஹிட்டராக சிம்ரனை முதல் ஆட்டத்தில் இறக்கி விட்டதுஎடுபடவில்லைஆனால் அவரது presence, ஆக்ரோஷமான இருப்புதன்னம்பிக்கைதுடிப்பு எனக்குபிடித்திருக்கிறது


சிம்ரனுக்குப் பிறகு வந்த பூரன் உடனே பவுண்டரிகள்சிக்ஸர்கள் என விளாசி பிரமாதமாக ஆடினார்ஆனால்ராகுல் இதையெல்லாம் உணராததைப் போல மற்றொரு உலகத்தில் இருந்தார்தொடர்ந்து இரு சிக்ஸர்களைபூரம் அடித்த ஓவரிலேயே தேவையில்லாமல் தூக்கி அடித்து வெளியேறினார்மாறாக ஒற்றைஇரட்டைஓட்டங்களில் கவனம் செலுத்தி அவர் பூரனுடனான கூட்டணியை வலுப்படுத்தி இருந்தால் பஞ்சாப் இன்றுவென்றிருக்கும்அடுத்தடுத்து வந்த மேக்ஸ்வெல்மந்தீப்முஜீப் போன்றவர்களும் இந்த அடிப்படையானநடைமுறை புரிதல் இல்லாமலே ஆடி பூரனின் வேகத்துக்கு தடையிட்டனர்இதையும் ஒரு “ராகுல் விளைவு” எனப் பார்க்கலாமா?


மேக்ஸ்வெல்லை தொடர்ந்து மத்திய வரிசையில் ஆட வைப்பது பஞ்சாபுக்கு உதவவில்லை - மிக மோசமானஆட்டநிலையில் அவர் இருக்கிறார்வரும் போட்டிகளில் அவர் இறுதி மூன்று ஓவர்களை மட்டுமே ஆடவேண்டும்அல்லது அவரிடத்தில்  கெயிலை களமிறக்கி ராகுலை 5வது எண்ணில் ஆடச் செய்ய வேண்டும்


ஹைதராபாத்தின் பந்து வீச்சு எப்படி இருந்தது?


ராகுலுக்கு அவர்கள் மிக நன்றாக வீசினார்கள் - நேராக உள்வரும் பந்துகளை சரியான நீளத்தில் வீசினார்கள்


over the wicketஇல் வந்து அவர்களது இடதுகை வேகவீச்சாளர்கள் வீசியதுஅதுவும் பெரிதாய் அடிக்கஇடம்கொடுக்காமல் நேராக வீசியது உதவியதுவரும் ஆட்டங்களில் இந்த யுக்தியை பிற வீச்சாளர்களும் ரூம்கொடுத்து அடித்தாடுகிற மட்டையாளர்களுக்கு பயன்படுத்தலாம்


ஹைதராபாத் வெல்ல வேறெது உதவியது?


களத்தடுப்பு - இரண்டு ரன் அவுட்டுகள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...