முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களும் “பெண்களும்”




பிக்பாஸ் நிகழ்ச்சி செய்கிற ஒரே நல்ல காரியம் பெண்கள் எல்லாரும் சிறப்பாக சமைக்கிற குடும்பப் பாங்கினிகள் எனும் பிம்பத்தை உடைப்பதுதான் - அனிதா தனக்கு காபி, டீ போட வராது எனச் சொல்வதைப் பார்க்க ‘மகிழ்ச்சியாக’ இருந்தது. குக் வித் கோமாளியில் பங்கேற்ற ரம்யா கூட பிக்பாஸ் வந்த பின் ‘சமையலா? அதைக் கத்துக்க நான் இங்க வரல’ எனச் சொல்லி அம்பலப்பட்டுப் போனார். ஏனென்றால் இதே விஜய் டிவியின் தொடர்களில் குடும்பப் பாங்கினிகள் குறித்த சித்திரம் முழுக்க வேறாக இருக்கும்.

 நவீனப் பெண்களில் பத்தில் ஏழு பேருக்கு சமைக்கத் தெரியாது என்பது என் ஊகம். (பிக்பாஸ் பெண் பங்கேற்பாளர்கள் இதை பிரதிநுத்துவம் செய்கிறார்கள்.) சின்ன வயதில் அம்மா சமையல். அதன் பிறகு கல்லூரியில் விடுதி மெஸ், வெளியே தட்டுக்கடை இல்லையென்றால் ஸ்விக்கி, கூடவே இருக்கிறது மேகி நூடுல்ஸ். வேலைக்குப் போக ஆரம்பித்ததும் இப்படி வெளியே வாங்கி சாப்பிட ஒரு நியாயம் கிடைத்து விடும். போகப் போக அதுவே வசதியாக ஜாலியாக இருக்க பழகி விடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு ஒன்று தட்டுத்தடுமாறி கற்றுக் கொள்வார்கள், அவர்களில் சிலருக்கு இயல்பாகவே சமையலில் ஒரு சிலாக்கியம், கைப்புண்ணியம் இருக்கும். அவர்கள் அதை ரசிக்கத் தொடங்கி நிபுணர்களே ஆகி விடுவார்கள். குறைந்தது சராசரியாகவாவது சமைப்பார்கள். இன்னும் சிலர் இதெல்லாம் சரிப்படாது என கணவனும் மனைவியும் மூன்று வேளையும் வெளியே சாப்பிடுகிற அல்லது துரித உணவுகளை மைக்ரோ வேவில் வைத்து தயார் பண்ணி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். நான் முன்பு வேலை பார்த்த இடங்களில் திருமணமான பெண்கள் கொண்டு வரும் டப்பாவை வாங்கி சுவைத்திருக்கிறேன். பத்தில் ஒருவருக்கு மட்டுமே குறைந்தபட்ச சுவையுடன் சமைக்கக் தெரிந்திருக்கும். இவர்கள் சமைப்பதை கண்ணை மூடித் தின்பவர்கள் வாழ்நாள் சாதனையாளர்கள் என நினைப்பேன். அவர்களுக்கும் சமையலில் அக்கறை இருக்காது. வற்புறுத்தலால் ஏதோ பல் தேய்ப்பது போல சமையலில் ஈடுபடுவார்கள். 

இன்னொரு பக்கம் இன்றைய இளையதலைமுறையில் ஆண்கள் சமையலில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து வாடகை வீடு எடுத்தாலே முதல் வேலையாக கேஸ் அடுத்து வாங்கி ஒழுங்காக சமைத்து, ரொட்டேஷனில் ஒருவர் காய் நறுக்குவது, ஒருவர் பாத்திரம் கழுவுவது எனப் பார்த்துக் கொள்வதைக் காண்கிறேன். பாலினத்தைப் பொறுத்தமட்டில், இப்படி ஒரு தலைகீழாக்கம் சமையலில் நடப்பதை கவனிக்கிறேன். 

ஆனால் இந்த எதார்த்த வெளிப்படாதபடி ஊடகங்களில் ஒரு தேய்வழக்கு, ஒற்றைபட்டையான கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புகை பிடித்தல் ஒரு உதாரணம்.

மலையாள பிக்பாஸில் பெண் பங்கேற்பாளர்கள் புகைபிடிப்பதைக் காட்டினார்கள். தமிழ் பிக்பாஸைப் பொறுத்தவரையில் பெண்கள் ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்து பேசும் குரலை மட்டும் ‘காட்டுகிறார்கள்’. அதையும் வெளிப்படையாக காட்ட வேண்டும் எனக் கோருகிறேன் - தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒவ்வாத விசயங்களான பரஸ்பரம் மடியில் படுத்துக் கொள்வது, சதா உரசுவது, தடவுவதைக் காட்டலாம் என்றால் இதையும் காட்டலாம் தானே. கிராமத்து நிலைமை தெரியவில்ல , ஆனால் சிறுநகரங்களில், நகரங்களில் பெண்கள் வாய்ப்பு அமையும் போதெல்லாம் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். சென்னையில் இதை சற்று மறைவாக பண்ணினால், பெங்களூரில் சாலையில் நின்று கப்பு கப்பென கண் முன்னாலே பல நூறு பெண்கள் அடிக்கிறார்கள்.

 இதில் எந்த ஆச்சரியமும் இல்லை - கடவுள் அவர்களுக்கு ஆண்களுக்கான அதே மூளையைத் தான் கொடுத்திருக்கிறார். நாம் புகை, சாராயத்தை பாலியல் ஒழுக்கத்துடன் ஈடு செய்வதால் அதைப் பற்றி ஊடகங்களில் பேசுவதில்லை. ஒரு “தமிழ்ப் பெண்ணாவது” நமது சினிமாக்களில், சீரியல்களில் இதை செய்கிறார்களா? தமிழ் சமூகம் தன் பாசாங்கில் இருந்து விடுபட்டு ஒவ்வொரு பிம்பமாக உடைக்க வேண்டும். எதார்த்ததை தவிர்க்காமல் பரிசீலிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...