முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிரம்ப் ஆதரவு இந்தியர்கள்


நேற்று டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இந்திய கொடியை உயர்த்தியபடி ஜோராக நிற்கிறார். அவர் பெரும்பாலும் ஒரு இந்து / இந்திய தேசியவாதியாக, நமது ஜியின் ஆதரவாளராகவே இருப்பார். வலதுசாரிகள் தேசவர்த்தமான எல்லைகளைக் கடந்து, இப்படியான ஒரு கலவரத்தின் போதும், எப்படி தவறாமல் ஒரே புள்ளியில் இணைகிறார்கள் பாருங்கள்!
இன்னொரு பக்கம் இதன் பின்னுள்ள நுண் உளவியல் முரணானது மற்றும் சுவாரஸ்யமானது - கறுப்பர்கள், ஸ்பேனியர்கள், அடுத்த தலைமுறை இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை, வேலை வாய்ப்பை பெறுவதை விரும்பாத முந்தின தலைமுறை இந்திய வம்சாவளியினர் டிரம்பின் ஆதரவாளர்கள், ஆனால் டிரம்ப் வெள்ளை இனம் மட்டுமே அமெரிக்காவில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் என்பதை கவனியுங்கள்.

இந்த சுயநல புத்தி நம்மவர்களுக்கு நமது சாதி அமைப்பில் இருந்து ஏற்படுகிறதென்றால் வெள்ளையர்களுக்கு அது இனவாத மேலாதிக்க எண்ணத்தில் இருந்து வருகிறது. மற்றோரு முரண் (இந்துத்துவர்களைப் போன்றே) அதிக எண்ணிக்கையுடன், கூடுதல் அதிகாரமும் பணபலமும் கொண்டு இருந்தாலும் இவர்கள் சதா தம்மை 'பாதிக்கப்பட்டவர்களாக' கற்பனை செய்ய, முன்வைக்க விரும்புவார்கள். 

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள்-பனியா பார்ப்பன கும்பல் கூட்டணிதைப் போன்றது இது. இங்கு கீழ்மத்திய வர்க்க, கீழ்த்தட்டு மக்களும் சிறுபான்மையினரும் அவர்களுக்கு பொது எதிரி. அதாவது பொருளாதார எதிரிகள். ஆகையால் மதத்தின் பெயரால் ஒன்றிணைகிறார்கள். நாளை இந்த பொது எதிரி இல்லையெனில் முன்னவரை பின்னவர் நேரடியாகவே அடிமையாக்குவார். அமெரிக்காவில் மாற்று இன குடியேறிகளும்,  புதிய இந்திய குடியேறிகளும் பொது எதிரிகள். அத்தரப்பு பலவீனமாகி வெள்ளை இனவாத கட்சியினரால் அதிகாரத்தை தொடர்ந்து கைப்பற்ற முடிந்தால் அவர்கள் முதல் வேலையாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்ற தமது இந்திய தோஸ்துகளுக்கு எதிராகவே திரும்புவார்கள்.
இனவாத மதவாத கூட்டணிகள் எப்போதுமே ஒரு இருமுனைக் பரஸ்பரம் தாராளவாத முதலாளித்துவ அமைப்பு இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் வரையிலே ஒன்றாக இருப்பார்கள். பெருமுதலாளிகள் அந்த பக்கம் திரும்பினால் நண்டுகள் பரஸ்பரம் பிடித்திழுத்து கீழே தள்ள ஆரம்பித்து விடும். எந்த மக்களும் இனவாத சுயநலத்தால் பயன்பெற்றதாய் வரலாறில்லை.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
His name is Vincent Xavier pro/ sympathizer of Congress party. He had food with Shashi Tharoor.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...