Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்தி திணிப்பு எனும் இந்துத்துவ புரோஜெக்டை எதிர்க்கும் சு. வெங்கடேசன்


வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன். 





இந்த இந்தித் திணிப்பு பிரச்சனையை, இதன் வரலாற்றை நான் எனது “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” நூலில் பேசி உள்ளேன்.


 இந்த விசயத்தில் காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரே மாதிரியே இருந்துள்ளன என வரலாறு காட்டுகிறது. காங்கிரஸாவது கொஞ்சமாவது மாற்றுக்குரல்களை காதுகொடுத்து கேட்கும் மாண்பு கொண்டது, அவ்வப்போது சமரசம் பண்ணிக்கொள்வது. ஆனால் பாஜக ஒரு ரௌடி அரசு. “சொல், கேட்காவிட்டால் அடித்து பணிய வை” என்பதே அவர்களின் அணுகுமுறை. இந்த முரட்டுத்தனத்தின் விளைவாகவே மாநில உரிமை குறித்த விவாதங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. அதன் நீட்சியே சு.வெங்கடேசன் இப்போது மத்திய அரசுடன் எழுப்பி உள்ள பிரச்சனையும் அவரது எதிர்ப்பு அரசியலும். 


இன்னொரு விசயம்: இந்தி மையமான இந்துக்களின் இந்தியா எனும் கருத்தாக்கம் நமது தமிழ் தேசிய வரலாற்றை விட நெடியது தான். அது ஜெர்மானிய, பிரஞ்சு, ஆங்கிலேய Indology ஆய்வாளர்கள் ஆசியா, அதன் மதம், கலாச்சாரம், மொழி வரலாறு குறித்து ஆய்வு செய்த காலத்திலேயே துவங்கி விட்டது. சிலர் இந்த வரலாறு யுவான் சுவாங் இந்தியாவுக்கு பயணம் வந்து குறிப்புகள் எழுதிய காலத்திலேயே துவங்கி விட்டது என்கிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு தமது பண்பாட்டுக்கு, மத நம்பிக்கைகளுக்கு இணக்கமான ஒற்றை அடையாளம் கொண்ட ஒரு பண்பாடாக, மக்கள் தொகையாக இந்தியாவை வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தது. அப்படியே சமஸ்கிருத அடிப்படையிலான வைதீக மதம் அவர்களுக்கு அணுக்கமாகத் தோன்றியது. சமஸ்கிருதம், ஆரியவாதம் ஆகியவை ஐரோப்பியர்களுக்கு உடனடியான ஒரு இனவாத நெருக்கத்தை அளித்தது என நினைக்கிறேன். சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமான ஒற்றுமை, ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தது, கிறித்துவத்தைப் போன்றே இந்தியாவுக்கும் ஒற்றைக் கடவுள், ஒற்றை மதத்தின் அடிப்படையிலான ஒரு நிறுவனத்தை இந்தியாவுக்கு அளிக்கும் விழைவும் போன்றவை மற்ற காரணங்களாக இருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பதினாலாவது நூற்றாண்டில் இருந்தே கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சிலுவைப் போர்கள் இஸ்லாமியர் குறித்த ஏற்படுத்திய ஒரு கசப்பான நினைவுச்சரடு. விளைவாக, இஸ்லாமிய வெறுப்பு, ஆரிய சார்பு சித்திரம் ஒன்றை இந்த இந்தியவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து விவாதித்து உருவாக்கினார்கள். இதைக் கொண்டு, இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து இந்துக்களை காப்பாற்றும் பாதுகாவலர்களாக காலனிய அரசுகள் தம்மை நினைத்துக் கொள்வது சுலபமாக இருந்தது.

 இப்படித்தான் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவை மையமிட்டு கிறித்துவத்தின் அடிப்படையில் இந்து மதத்தை உருவாக்கி, இஸ்லாமிய விரோத தேசமாக நம்மை உருமாற்றும் ஒரு முயற்சி சுதேசி அரசியல்வாதிகளிடம், இந்திய வலதுசாரிகளிடம் தோன்றியது. அதற்கு அவர்கள் கையில் எடுத்தது தான் இந்தி எனும் உருது கலப்பில்லாத, சமஸ்கிருத சார்பு கொண்ட புதிய மொழி. இந்தி மொழியின் கண்டுபிடிப்பை, வளர்ச்சியை கில்கிறிஸ்ட் எனும் வெள்ளைக்காரர் ஒருவர் நேரடியாகவே ஒருங்கிணைத்தார். அதற்கு பிரித்தானிய அரசு நிறைய நிதியளித்தது. இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் உருது பேசும் இஸ்லாமிய மக்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கும் மறைமுக ஆதரவு அளித்து பிரித்தாளும் அரசியலை முன்னெடுத்தது. (விளைவாக இந்தியா-பால் பிரிவினை ஏற்பட்டு, கொடுமையான, ரத்தக்களறியான கலவரங்களில் பல லட்சம் பேர் மரித்த வரலாற்றை அறிவீர்கள்.)


 இந்த இந்தி-வைதீக இந்தியா கதையாடலில் சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், சாவார்க்கர், காந்தி, நேரு துவங்கி பலரும் மயங்கிப் போயினர். அதனாலே இந்தியா தன்னாட்சி பெற்றதும் இந்தியை அரசு மொழியாக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று பரவலாக வட இந்தியா எங்கு ஏற்கப்பட்டது. தென்னிந்தியாவில் தமிழர்கள் மட்டுமே வெளிப்படையாக இதை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பு பின்னாளில் வலுக்க நேரு ஒரு சமரசத்துக்கு முன்வந்தார் - ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் போகப் போக காங்கிரஸ் அரசு தனது இந்தி முன்னெடுப்பு, சமஸ்கிருத ஆதிக்க அரசியலை தீவிரமாக தொடர்ந்தது. ஏகப்பட்ட பணத்தை இதற்கு செலவு செய்தது. 2014இல் காங்கிரஸின் இந்த சமஸ்கிருத சார்பு அரசியலே பாம்பாக மாறி அதைக் கொத்தியது, பாஜக அதை பயன்படுத்தி இந்தியாவை முழுக்க முழுங்கியது என்பது வேறு கதை. அதை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டதே “தென்னிந்தியர்கள் மேம்பட்ட அரசியல் உணர்வு கொண்டவர்கள்” என ராகுல் காந்தி அண்மையில் கேரளாவில் பேசியது காட்டுகிறது. ஆனால் இப்போது ரொம்பவே தாமதமாகி விட்டது. 

இப்போதும் வெளிப்படையாக சு.வெங்கடேசன், தமிழச்சி, கனிமொழி போன்ற தமிழக எம்.பிக்களே பிரித்தானிய காலனிய அரசு ஆரம்பித்த இந்துத்துவ புரோஜெக்டை எதிர்த்து நிற்கிறார்கள். இது வெறுமனே ஒரு மொழிப்பற்று அரசியல் அல்ல. இது ஒரு காலனிய, நவகாலனிய எதிர்ப்பரசியல்! சு.வெங்கடேசனுக்கு நமது ஆதரவை, அன்பை தெரிவிப்போம்!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...