முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுழல் என்றால் நின்ற இடத்திலே சுழழும் கோலி

சுழல் பந்துக்கு எதிராக கோலி மிகையாக தடுத்தாடுவது கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருவது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிரக அவர் ஒருநாள் போட்டிகளில் அவுட் ஆக ஆரம்பித்த காலத்திலேயே இந்த சரிவு துவங்கி விட்டது. குறிப்பாக ஆடம் ஸாம்பாவை அவர் பின்னங்காலில் ஆட முயன்று எல்.பி.அபிள்யு ஆகும் ஒரு pattern ஏற்பட்டது பிற லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் தொடர்ந்தது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் கூட வேக வீச்சாளர்களை அதிரடியாகவும் ஸின்னர்களை தடுத்தாடவும் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களை ஒற்றை ஓட்டம் மட்டுமே எடுப்பது சுலபம் அல்ல. அதுவும் இறங்கி வராமல் நின்ற இடத்தில் இருந்தே ஆடும் போது. போகப் போக கோலி டுபாக்கூர் ஸ்பின்னர்களைக் கூட மரியாதையுடன் ஆட ஆரம்பித்தார். சுழல் ஆடுதளங்களில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியாது போனது. நடந்து வரும் போட்டியில் பெஸ்ஸின் சுழல் பந்துக்கு அவர் மோசமான முறையில் அவுட் ஆனது இதன் நீட்சியே. சச்சின், தோனி போன்ற வீரர்கள் தமது ஆட்டவாழ்வின் இறுதிக் கட்டத்தில் சுழல் பந்துக்கு எதிராக திணறியதைப் பார்த்தோம். 
இதற்குத் தீர்வு: ஸ்பின்னர்களை செட்டில் ஆக விடாமல் வந்தவுடனே இறங்கி வந்து நேராக விளாசுவது. ஸ்பீன்னர்கள் ஸ்விங் பவுலர்களைப் போல. நின்ற இடத்தில் இருந்து ஆடினால் அவர்கள் மிக பிரமாதமாக வீசுவது போலத் தோன்றும். ஆனால் சரியாக காலாட்டத்துடன் தன்னம்பிக்கையாக ஆடினால் சுழல், ஸ்விங் எல்லாம் குறைந்தது போலத் தோன்றும்.
அடுத்த சில ஆண்டுகளில் கோலி ஸ்பின்னர்களை அடித்தாடுவது அவரது டெஸ்ட் ஆட்டத்துக்கு மட்டுமல்ல ஒருநாள், டி-20 போட்டிகளின் ஸ்டிரைக் ரேட்டுக்கும் உதவும். இல்லாவிடில் டி-20 போட்டிகளிலும் கோலி தோன்றியதும் இரண்டு லெக் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை பின்னுக்குத் தள்ளுவார்கள். அவர் தயங்கி ஆடுவது அணியின் ரிதமையும் பாதிக்கும். மேலும் ஒரு கெத்தான பேட்ஸ்மேனுக்கு சுழலைக் கண்டு தயங்குவது அவமானம். மைக்கேல் வாஹ்ன் இதையே சொல்லுகிறார். மனைவி சொல்லே மந்திரம் என இராமல் கோலி இதையும் கேட்க வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...