சுழல் பந்துக்கு எதிராக கோலி மிகையாக தடுத்தாடுவது கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருவது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிரக அவர் ஒருநாள் போட்டிகளில் அவுட் ஆக ஆரம்பித்த காலத்திலேயே இந்த சரிவு துவங்கி விட்டது. குறிப்பாக ஆடம் ஸாம்பாவை அவர் பின்னங்காலில் ஆட முயன்று எல்.பி.அபிள்யு ஆகும் ஒரு pattern ஏற்பட்டது பிற லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் தொடர்ந்தது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் கூட வேக வீச்சாளர்களை அதிரடியாகவும் ஸின்னர்களை தடுத்தாடவும் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்களை ஒற்றை ஓட்டம் மட்டுமே எடுப்பது சுலபம் அல்ல. அதுவும் இறங்கி வராமல் நின்ற இடத்தில் இருந்தே ஆடும் போது. போகப் போக கோலி டுபாக்கூர் ஸ்பின்னர்களைக் கூட மரியாதையுடன் ஆட ஆரம்பித்தார். சுழல் ஆடுதளங்களில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியாது போனது. நடந்து வரும் போட்டியில் பெஸ்ஸின் சுழல் பந்துக்கு அவர் மோசமான முறையில் அவுட் ஆனது இதன் நீட்சியே. சச்சின், தோனி போன்ற வீரர்கள் தமது ஆட்டவாழ்வின் இறுதிக் கட்டத்தில் சுழல் பந்துக்கு எதிராக திணறியதைப் பார்த்தோம்.
இதற்குத் தீர்வு: ஸ்பின்னர்களை செட்டில் ஆக விடாமல் வந்தவுடனே இறங்கி வந்து நேராக விளாசுவது. ஸ்பீன்னர்கள் ஸ்விங் பவுலர்களைப் போல. நின்ற இடத்தில் இருந்து ஆடினால் அவர்கள் மிக பிரமாதமாக வீசுவது போலத் தோன்றும். ஆனால் சரியாக காலாட்டத்துடன் தன்னம்பிக்கையாக ஆடினால் சுழல், ஸ்விங் எல்லாம் குறைந்தது போலத் தோன்றும்.
அடுத்த சில ஆண்டுகளில் கோலி ஸ்பின்னர்களை அடித்தாடுவது அவரது டெஸ்ட் ஆட்டத்துக்கு மட்டுமல்ல ஒருநாள், டி-20 போட்டிகளின் ஸ்டிரைக் ரேட்டுக்கும் உதவும். இல்லாவிடில் டி-20 போட்டிகளிலும் கோலி தோன்றியதும் இரண்டு லெக் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை பின்னுக்குத் தள்ளுவார்கள். அவர் தயங்கி ஆடுவது அணியின் ரிதமையும் பாதிக்கும். மேலும் ஒரு கெத்தான பேட்ஸ்மேனுக்கு சுழலைக் கண்டு தயங்குவது அவமானம். மைக்கேல் வாஹ்ன் இதையே சொல்லுகிறார். மனைவி சொல்லே மந்திரம் என இராமல் கோலி இதையும் கேட்க வேண்டும்
கருத்துகள்