முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புஜாரா - நிகழ நேரம் எடுக்கிற ‘அதிசயம்’



புஜாரா பந்துகளை போக விடுவது பார்க்க ஒரு நடத்துநர் பேருந்துக்குள் ஆட்களை விடுவதைப் போல உள்ளது. “போ போ போ ... ரைட்டு ... வழியில நிக்காதே.” பந்து ஆடுதளத்தில் பட்டு துள்ளி தன் பணியை செய்து புஜாராவைக் கடந்து கீப்பருக்கு செல்லும் போது அவர் செய்கிற அந்த கைகளை பெரிதாக தலைக்கு மேல் உயர்த்தி ஏதோ பெரிய ஆபத்தை தவிர்த்து விட்டாற் போல காட்டுகிற சீன் இருக்கிறதல்லவா, அதைக் காண கண்கோடி வேண்டும். என்ன இதெல்லாம் முடிந்த பிறகு வேகப்பந்து விச்சாளர் வியர்த்து களைத்து மூச்சு வாங்கிக் கொண்டிருப்பார், புஜாராவோ “இவன் ஏன் இப்பிடி புஸுபுஸுன்னு மூச்சு விடுறான்?” என கூலாக பார்த்துக் கொண்டிருப்பார்.

இதையே பல நூறு பந்துகளாக போரடிக்காமல், கவனம் பிசகாமல் அவரால் செய்ய முடியும் என்பதே சிறப்பு. வீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் மனம் சோர்ந்து திசையை மாற்றி வீசும் போது யாருக்கும் தெரியாமல் அடித்து ரன் ஓடி அரை சதம் அடித்து விடுவார். தினம் தினம் நூற்றுக்கணக்கான காகிதங்களில் கண்ணை ஓட்டி சில இடங்களில் எதையாவது கிறுக்கி வைத்து, தனக்கு முன்பு வரிசையில் நிற்கிறவர்களை பொருட்படுத்தாமல் சரியாக உணவு இடைவேளையின் போது எழுந்து வினாடி பிசகாமல் திரும்ப அதே இடத்துக்கு வந்து, சரியாக நாள் முடியும் போது கிளம்பி பஸ் பிடித்து வீட்டுக்குப் போய் அடுத்த நாள் அதே நேரத்துக்கு சரியாக வந்து, இந்த வேலைகளை ஒரு கடின காரியம் போல தவறாமல் காட்டிக் கொண்டு மாத சம்பளத்தை சரியாக வாங்கிப் போகும் ஒரு குமாஸ்தாவை நினைவுபடுத்துகிறார். இத்தகைய குமாஸ்தாக்கள் இப்போது வழக்கொழிந்து வருவதாலே நமக்கு புஜாராவைப் பார்க்க ஏதோ சத்யஜித்ரே பட பாத்திரம் போல, பழைய காலத்தில் இருந்து வந்து குதித்ததைப் போலத் தோன்றுகிறது.


ஆனால் புஜாரா ஒரு மாவீரனும் தான்.

ஆஸ்திரேலியாவில் இவரது இந்த அட்றாசிட்டிகளைப் பார்த்து கடுப்பான எதிரணி வேக வீச்சாளர்கள் “குருநாதா” வடிவேலு காமிடி பாணியில் இவரை உயரப்பந்துகளால் தொடர்ந்து தாக்கினார்கள். ஆனால் அப்போது புஜாரா ஓவருக்கு நான்கு பந்துகளை உடம்பில் வாங்கிக் கொண்டு “நீங்க தாக்குவது என் உடலைத் தான் என்னை அல்ல” என அமைதியாக நின்றார். ஒரு கட்டத்தில் அதே வீச்சாளர்கள் இனி கடுப்பாவதில் அர்த்தமில்லை என சரணடைந்து விட்டார்கள். பிறகு அவரைப் புகழ்ந்து பேட்டியெல்லாம் கொடுத்தார்கள்! அதைப் பார்க்க “எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” காமிடி நினைவுக்கு வந்தது.


புஜாரா எனும் அற்புதத்தின் சிறப்பு அது நம்மை முடிவற்று காத்திருக்க வைக்கும் அற்புதம் என்பதே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...