முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்மயி வைரமுத்துவை சார்ந்திருந்தாரா? பாடல் விபரங்கள் சொல்வதென்ன?


2018இல் வைரமுத்துவிடன் மோதிய பிறகு சின்மயி ரஹ்மான், யுவன் என அனேகமாக எல்லா இசை இயக்குநர்களிடமும் பாடியிருக்கிறார். மற்ற பெண் பாடகிகளை விட அதிக வாய்ப்பை 2018இல் இருந்தே பெற்றிருக்கிறார். அடுத்து, மீ டூ விவகாரம் சர்ச்சையான 2018க்கு முன்புள்ள சில வருடங்களாக வைரமுத்து குறைந்த அளவு பாடல்களே, அதுவும் சின்மயி பாடின பாடல்கள், எழுதி இருந்தார். 2017இல் “நல்லை அல்லை” பிரசித்தமான ஒரு பாடல். ஆனால் அதற்கு முன்பு பார்த்தால் 2016இல் தர்மதுரை படத்தில் ஒரு பாடல். இப்படி அவ்வப்போது சில பாடல்களே. ஆனால் இவை பிரசித்தமான பாடல்களாக இருந்தன.

 இன்னொரு விசித்திரமான செய்தி: 2002இல் சின்மயி அறிமுகமான பின்னர் வைரமுத்து அவரது காட்பாதராக இருந்தார் என்பது போன்ற ஒரு சித்திரம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தேசிய விருது பெற்ற பாடல்கள் உட்பட சில பிரசித்தமான பாடல்களை அவரது பாடலுக்கு இவர் பாடியிருக்கிறார் என்பது. ஆனால் எண்ணிக்கையை பார்த்தோமானால் அறிமுகமான முதலிரு ஆண்டுகளில் ஒரு சில பாடல்களை அவர் வைரமுத்துவின் வரிகளுக்கு எழுதியிருந்தாலும் 2005க்குப் பிறகு பரவலாக வேறு பாடலாசிரியர்களின் வரிகளுக்கே அவர் அதிகமாய் பாடியிருக்கிறார். குறிப்பாக 2016க்குப் பிறகு அவர் வைரமுத்துவிற்கு பாடுவது வெகுவாக குறைகிறது. வைரமுத்துவும் திரையிசையில் தன் செல்வாக்கை 2000க்கு பின்பு இழந்து வருகிறார். இன்னும் சொல்லப் போனால், 2002-03க்குப் பிறகு சின்மயி வருடத்திற்கு இரண்டு மூன்று என சொற்பமான பாடல்களையே ஒப்பீட்டளவில் வைரமுத்துவுக்குப் பாடியிருக்கிறார் (மொத்தமாக 22). வெறும் 9.6%. பொதுவாக இயக்குநர்கள், இசையமைப்பாளர்களே இவ்விசயத்தில் முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். உ.தா., மி டூவிற்குப் பிறகு சின்மயி ரஹ்மான் இசையில் பாடுகிறார், ஆனால் ரஹ்மான் இந்த கட்டத்தில் வைரமுத்துவை தள்ளி வைக்கிறார்.

 எனில் சின்மயி தன் திரைவாய்ப்புகள் பறிபோகக் கூடாது என்பதற்காக வைரமுத்துவை அதுவரை எதிர்க்காமல் இருந்தார் என்பது பொய் ஆகி விடுகிறது. 

தகவல் அடிப்படையில் இதுவே நிஜம். ஆனால் சினிமா துறைக்குள் வேறு எதார்த்தம் உள்ளதா, தான் எழுதாத பாடல்களிலும் யார் பாட வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வைரமுத்து பெற்றிருந்தாரா என சினிமாக்காரர்கள் தாம் சொல்ல வேண்டும். அது உண்மையெனில், வைரமுத்து ஏன் மற்ற புது பாடலாசிரியர்களை அப்பாடல்களை எழுத அனுமதிக்க வேண்டும்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...