முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லஷ்மி சரவணகுமார் சிறப்பிதழ்




யாவரும் இணையதளம் வெளியிட்டுள்ள லஷ்மி சரவணகுமார் சிறப்பிதழைப் பார்த்தேன். அதில் அகரமுதல்வன் லஷ்மி சரவணகுமாரிடம் ஒரு சிறப்பான பேட்டியை எடுத்திருக்கிறார். கூர்மையான நியாயமான கேள்விகள். அகரனுக்குப் பாராட்டுக்கள். லஷ்மியின் பேட்டிகளில் முன்பு நிறைய “சவடால்கள்” இருக்கும். இந்த பேட்டியில் அவை குறைந்து முதிர்ச்சியும் கசப்பும் தென்படுகிறது. தொண்ணூறுகளின் மாய எதார்த்த சிறுகதை எழுச்சியில் அக்காலத்தைய இலக்கியக் கோட்பாட்டு விவாதங்கள், மொழியாக்கங்களின் மகத்தான பங்களிப்பை லஷ்மி குறிப்பிட்டிருப்பது சிறப்பானது. ஜெமோவின் புண்ணியத்தால் இன்று இந்த இரண்டு விசயங்களையும் எதிர்மறையாக சித்தரிக்கும் போக்கு அதிகமாகி உள்ள போது லஷ்மி இதை வலியுறுத்தி உள்ளது முக்கியம்.


இந்த சிறப்பிதழ் சார்ந்து எனக்கு ஒரு சிறிய மனக்குறை உள்ளது: லஷ்மி சரவணகுமார் குறித்து விமர்சகர்கள், சக எழுத்தாளர்களிடம் இருந்து கட்டுரைகள் வாங்கி பிரசுரித்திருக்க வேண்டும். அப்போதே இதழ் நியாயமாக, ஆழமாக இருந்திருக்கும். ஒரு சமகால படைப்பாளியை அவருடன் எழுதுபவர்கள், அவருடைய மூத்த படைப்பாளிகள், விமர்சகர்கள் ஆதரிப்பது, அவரைப் பற்றி தம் அபிப்ராயங்களை சொல்வது, விமர்சிப்பது, மறுப்பது என விரிவாக ஆழமாக இருந்திருக்கும். கட்டுரைகள் எழுத அவகாசமில்லாதவர்களிடம் கருத்துக்கள் கேட்டு பிரசுரித்திருக்கலாம். ஆனால் இச்சிறப்பிதழிலோ லஷ்மியின் சில நண்பர்கள், வாசகர்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்கள். என்னிடம் கேட்டிருந்தால் எழுதியிருப்பேன்.


ஒரு எழுத்தாளனை அனாதையாக வாசகர்கள் மட்டும் பரிசீலிப்பது ஒரு மோசமான சித்திரத்தை ஏற்படுத்துகிறது. 


 நானும் சர்வோத்தமனும் இன்மை இதழுக்காக நகுலன் சிறப்பிதழ் கொண்டு வந்த போது கட்டுரைகள் கேட்டோம்; முடிந்தளவுக்கு சக எழுத்தாளர்கள், விமர்சகர்களின் கருத்துக்களை கேட்டு வெளியிட்டோம். எனக்கு சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் கிடைத்த போது உயிரெழுத்து இதழில் என்னுடைய விரிவான பேட்டியுடன் விமர்சகர்களின் கட்டுரைகளையும் சுதீர் செந்தில் அண்ணன் கேட்டு வாங்கி வெளியிட்டார். அதுவும் அவ்வளவு குறைவான நேரத்தில் அவர் அதை செய்தார்.


சமகால எழுத்தாளர்களுக்கு சிறப்பிதழ்களை யாரும் வெளியிடாத காலத்தில் லஷ்மிக்கு இதை யாவரும் குழுவினர் செய்திருப்பது பாராட்டத்தக்கது. அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதே என் வருத்தம்.


நான் லஷ்மியின் கேர் டேக்கர் அல்ல. நான் இப்படி “பொங்குவதற்கு” மற்றொரு முக்கிய காரணம் உண்டு: வாசக-எழுத்தாள உலகமாக claustrophobic ஆக இது சுருங்கி விடும் போக்கு ஆபத்தானது. எழுத்தாளர்கள் பரஸ்பரம் விரும்புகிறோமோ, பொறாமைப்படுகிறோமோ, மண்ணில் கிடந்து புரண்டு சட்டையை கிழித்துக் கொள்கிறோமோ அல்லது முத்தம் கொடுக்கிறோமோ, முடிந்தளவுக்கு ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரால் மற்றொருவர் தூண்டுதல் பெற்று இன்னும் முனைப்பாக செயல்பட வேண்டும். உடன்பாடில்லாத விசயங்கள், படைப்பில் உள்ள தொழில்நுட்பரீதியான சிக்கல்களை முன்வைத்து விவாதிக்க வேண்டும், முரண்பட வேண்டும், அப்போது தான் இலக்கியம் வளரும். நீ உன் வாசகர்களை வைத்து மகிழ்ச்சியாக இருந்து கொள், நான் உன்னை பொருட்படுத்த மாட்டேன் என ஒரு சக எழுத்தாளனிடம் நாம் சொல்வதான தொனி இருத்தலாகாது. அது நம்மை பின்னுக்கு கொண்டு போய் விடும்.


நான் அவ்வப்போது லஷ்மியின் கதைகளைப் படித்து பொறாமை கொள்வேன். அக்கதைகளை, நாவல்களை நான் கொண்டாடுவேன். சில படைப்புகள் குறித்து எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. இதையெல்லாம் வெளிப்படையாக செய்யவே நான் விரும்புகிறேன். சக எழுத்தாளனின் சாதனைகள் என்னை எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது என நம்புகிறேன். மாறாக நல்ல எழுத்தாளர்கள் கூட இருப்பதே எனக்குப் பெருமை, ஊக்கம், அந்த போட்டியுணர்வு அவசியம். அதனாலே 2014இல் எனக்கு யுவ புரஸ்கார் கிடைத்த போது “இந்த ஆண்டு இது எனக்குப் பதில் லஷ்மிக்கு சென்றிருக்க வேண்டும்” என பாராட்டு விழா மேடையில் வைத்து சொன்னேன். அவருக்கு அதற்கடுத்த ஆண்டுகளில் அவருக்கு கொடுக்கவும் செய்தார்கள்.

 நாங்கள் படைப்பாளிகள் இப்படித் தான் இணைந்து செயல்பட விரும்புகிறோம். இதை அடுத்தடுத்து இசைக்கோ, மனுஷ்யபுத்திரனுக்கோ, இமையத்துக்கோ, எஸ். செந்தில்குமார், ஷோபாசக்தி, எஸ்.ரா, சாரு, ஜெ.மோவுக்கோ சிறப்பிதழை வெளியிடும் போது பரிசீலிக்க வேண்டும் (இந்த பெயர்களும் உடனடியாக மனத்தில் வருவனவே ஒழிய அறுதியானவை அல்ல). அவ்விதழ்களில் நமது குரல்கள் அத்தனையும் ஒலிக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...