முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை அணி எப்படி 2021 ஐ.பி.எல்லில் மீண்டு வந்தது?




1) ருத்துராஜின் அபாரமான துவக்க ஆட்டம். சென்னை அணியின் மத்திய வரிசைக்கு சுழல் பந்தை அடித்தாடுவதில் ஒரு பிரச்சனை இருந்தது. சுழலுக்கு எதிராக ருத்துராஜின் சராசரிக்கு 60க்கு மேல், ஸ்டிரைக் ரேட்டும் சிறப்பு. அவர் மத்திய ஓவர்களில் சுழலர்களை நாசம் செய்தது வெகுவாக உதவியது. டூப்பிளஸி வேகப்பந்துகளை விளாசினால் ருத்துராஜ் சுழலர்களை கவனித்துக் கொண்டார்.


2) சுழல் பந்தை அடித்து சிதற விட்டதில் 3வது எண்ணில் வந்தாடிய மோயின் அலியும் முக்கியமானவர். இந்தியாவில் இங்கிலாந்து அணி சென்னையில் டெஸ்ட் ஆடிய போது ஐ.பி.எல் ஏலத்துக்கு சில நாட்களே இருந்தது. அதற்கு டிரையல் போல அவர் சிக்ஸர்களாக கடைசி நாளில் விளாசினார். அவரை ஐ.பி.எல்லில் சென்னை அணி தூக்கியது ஒரு மாஸ்டர் ஸ்டுரோக்.


3) ரெய்னாவை சமாதானம் பண்ணி அணிக்குள் அழைத்து வந்தார்கள். அவரும் கிடைத்த ஆட்டங்களில் நன்றாக சுதந்திரமாக அடித்தாடினார். ஓரளவுக்கு தொப்பை குறைந்து, கொஞ்சம் ஒல்லியாகி நல்ல ஆட்டநிலையிலும் இருந்தார். 


4) ருத்துராஜும் மோயின் அலியும் பிரமாதமாக ஆடி ஒரு ஆற்றலைக் கொடுத்த பின் ரெய்னாவுடன் அம்பத்தி ராயுடுவும் நல்ல ஆட்டநிலைக்கு வந்தார்.


5) ஜடேஜா அனேகமாக இந்த சமயத்தில் தான் இந்தியாவுக்காக நல்ல மட்டை ஆட்டநிலைக்கு வந்தார். அவருடைய கீழ்வரிசை சிக்ஸர்களும் சில போட்டிகளில் உதவியதுடன் எதிரணிக்கு எப்போதும் ஒரு அச்சத்தையும் மிச்சம் வைத்தது.


6) மட்டையாட்டம் இப்படி கிளிக் ஆன பின் பந்து வீச்சு பழையபடி நன்றாக தடுத்தாடும் பணியை செய்தது. குறிப்பாக பிராவோ, தாகூரின் மெதுவான பந்துகள் மத்திய ஓவர்களில் வேகமற்ற ஆடுதளங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தின.


7) ரெய்னாவுக்கு காயம்பட்ட பின் அவரிடத்தில் ஆட வந்த உத்தப்பா முதல் பத்து ஓவர்களில் அணியின் ரன் ரேட் உயர வெகுவாக உதவினார். அவர் எந்தளவுக்கு நன்றாக ஆடினார் என்றால் ரெய்னாவுக்கு திரும்ப வர வாய்ப்பே கிடைக்கவில்லை.


8. இப்போதும் வயதானவர்கள் சென்னை அணியில் இருக்கிறார்கள் - ஆனால் முன்பு இருந்தது போல் அதிக எண்ணிக்கையில் இல்லை. ருத்துராஜ், மோயின் அலி, ஜடேஜா, தாகூர், ஹேஸில்வுட், சாஹர் ஆகியோர் இளைஞர்களே. டூப்பிளஸி, தோனி, பிராவோ போன்றோர் வயதானவர்கள் என்றாலும் இப்போதும் சிறந்த களத்தடுப்பாளர்களே. மோசமான உடற்தகுதி கொண்ட, சுமாரான களத்தடுப்பாளர்களான வயதான வீரர்கள் உத்தப்பாவும், ராயுடுவுமே. ஆக போன முறை இந்த உடற்தகுதி, வயோதிகம் எனும் சிக்கலை கவனமாக இம்முறை சரி செய்திருக்கிறார்கள். உள்ளே வந்த வீரர்கள் களத்தில் கொண்டு வந்த துடிப்பு, கவனம், கூர்மை சென்னையை இந்த ஐ.பி.எல்லில் சிறந்த களத்தடுப்பாட்ட அணிகளில் ஒன்றாக்கியது.


9) ஐக்கிய அரபு அமீரகத்திலும் சரி, அதற்கு முன்பு சென்னையிலும் சரி ஆடுதளங்கள் பெரும்பாலும் மெத்தனமானவை. சென்னையின் பந்து வீச்சு இத்தளங்களுக்கென்றே ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டதைப் போன்று கச்சிதமானது. சென்னையின் மிதவேக வீச்சாளர்களும் சுழலர்களும் ஷார்ட்டாக வைடாக வீச மாட்டார்கள். விக்கெட் எடுப்பதை விட நேராக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தவும், மெது பந்துகளை அதிகம் வீசவுமே விரும்புவார்கள். மோயின் அலியின் தேர்வு இரண்டாவது சுழல் ஆல்ரவுண்டரை, ஆறாவது பந்து வீச்சாளரை அவர்களுக்கு அளித்தது. இதுவும் அவர்கள் ரொம்ப சமநிலையான அணியாக தோன்ற முக்கிய காரணம்.


10) தோனியின் நிதானமான நடைமுறை அணுகுமுறை, புத்திசாலித்தனம், ஆளுமை ஒரு மிகப்பெரிய சமநிலையை, தன்னம்பிக்கையை இந்த அணிக்கு அளிக்கிறது. சென்னை அணி பாதி என்றால் தோனி மீதி. சென்னை அணி நிர்வாகத்தம் பாராட்ட வேண்டும் - அணி சொதப்பிய போது அவர்கள் பதறாமல் குறைகளை கண்டறிந்து சரி செய்தார்கள். அணியின் மையம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள். அது நிர்வாகம் இப்போதும் மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனும் பிம்பத்தையும் தக்க வைத்தது.


வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.