முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை அணி எப்படி 2021 ஐ.பி.எல்லில் மீண்டு வந்தது?




1) ருத்துராஜின் அபாரமான துவக்க ஆட்டம். சென்னை அணியின் மத்திய வரிசைக்கு சுழல் பந்தை அடித்தாடுவதில் ஒரு பிரச்சனை இருந்தது. சுழலுக்கு எதிராக ருத்துராஜின் சராசரிக்கு 60க்கு மேல், ஸ்டிரைக் ரேட்டும் சிறப்பு. அவர் மத்திய ஓவர்களில் சுழலர்களை நாசம் செய்தது வெகுவாக உதவியது. டூப்பிளஸி வேகப்பந்துகளை விளாசினால் ருத்துராஜ் சுழலர்களை கவனித்துக் கொண்டார்.


2) சுழல் பந்தை அடித்து சிதற விட்டதில் 3வது எண்ணில் வந்தாடிய மோயின் அலியும் முக்கியமானவர். இந்தியாவில் இங்கிலாந்து அணி சென்னையில் டெஸ்ட் ஆடிய போது ஐ.பி.எல் ஏலத்துக்கு சில நாட்களே இருந்தது. அதற்கு டிரையல் போல அவர் சிக்ஸர்களாக கடைசி நாளில் விளாசினார். அவரை ஐ.பி.எல்லில் சென்னை அணி தூக்கியது ஒரு மாஸ்டர் ஸ்டுரோக்.


3) ரெய்னாவை சமாதானம் பண்ணி அணிக்குள் அழைத்து வந்தார்கள். அவரும் கிடைத்த ஆட்டங்களில் நன்றாக சுதந்திரமாக அடித்தாடினார். ஓரளவுக்கு தொப்பை குறைந்து, கொஞ்சம் ஒல்லியாகி நல்ல ஆட்டநிலையிலும் இருந்தார். 


4) ருத்துராஜும் மோயின் அலியும் பிரமாதமாக ஆடி ஒரு ஆற்றலைக் கொடுத்த பின் ரெய்னாவுடன் அம்பத்தி ராயுடுவும் நல்ல ஆட்டநிலைக்கு வந்தார்.


5) ஜடேஜா அனேகமாக இந்த சமயத்தில் தான் இந்தியாவுக்காக நல்ல மட்டை ஆட்டநிலைக்கு வந்தார். அவருடைய கீழ்வரிசை சிக்ஸர்களும் சில போட்டிகளில் உதவியதுடன் எதிரணிக்கு எப்போதும் ஒரு அச்சத்தையும் மிச்சம் வைத்தது.


6) மட்டையாட்டம் இப்படி கிளிக் ஆன பின் பந்து வீச்சு பழையபடி நன்றாக தடுத்தாடும் பணியை செய்தது. குறிப்பாக பிராவோ, தாகூரின் மெதுவான பந்துகள் மத்திய ஓவர்களில் வேகமற்ற ஆடுதளங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தின.


7) ரெய்னாவுக்கு காயம்பட்ட பின் அவரிடத்தில் ஆட வந்த உத்தப்பா முதல் பத்து ஓவர்களில் அணியின் ரன் ரேட் உயர வெகுவாக உதவினார். அவர் எந்தளவுக்கு நன்றாக ஆடினார் என்றால் ரெய்னாவுக்கு திரும்ப வர வாய்ப்பே கிடைக்கவில்லை.


8. இப்போதும் வயதானவர்கள் சென்னை அணியில் இருக்கிறார்கள் - ஆனால் முன்பு இருந்தது போல் அதிக எண்ணிக்கையில் இல்லை. ருத்துராஜ், மோயின் அலி, ஜடேஜா, தாகூர், ஹேஸில்வுட், சாஹர் ஆகியோர் இளைஞர்களே. டூப்பிளஸி, தோனி, பிராவோ போன்றோர் வயதானவர்கள் என்றாலும் இப்போதும் சிறந்த களத்தடுப்பாளர்களே. மோசமான உடற்தகுதி கொண்ட, சுமாரான களத்தடுப்பாளர்களான வயதான வீரர்கள் உத்தப்பாவும், ராயுடுவுமே. ஆக போன முறை இந்த உடற்தகுதி, வயோதிகம் எனும் சிக்கலை கவனமாக இம்முறை சரி செய்திருக்கிறார்கள். உள்ளே வந்த வீரர்கள் களத்தில் கொண்டு வந்த துடிப்பு, கவனம், கூர்மை சென்னையை இந்த ஐ.பி.எல்லில் சிறந்த களத்தடுப்பாட்ட அணிகளில் ஒன்றாக்கியது.


9) ஐக்கிய அரபு அமீரகத்திலும் சரி, அதற்கு முன்பு சென்னையிலும் சரி ஆடுதளங்கள் பெரும்பாலும் மெத்தனமானவை. சென்னையின் பந்து வீச்சு இத்தளங்களுக்கென்றே ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டதைப் போன்று கச்சிதமானது. சென்னையின் மிதவேக வீச்சாளர்களும் சுழலர்களும் ஷார்ட்டாக வைடாக வீச மாட்டார்கள். விக்கெட் எடுப்பதை விட நேராக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தவும், மெது பந்துகளை அதிகம் வீசவுமே விரும்புவார்கள். மோயின் அலியின் தேர்வு இரண்டாவது சுழல் ஆல்ரவுண்டரை, ஆறாவது பந்து வீச்சாளரை அவர்களுக்கு அளித்தது. இதுவும் அவர்கள் ரொம்ப சமநிலையான அணியாக தோன்ற முக்கிய காரணம்.


10) தோனியின் நிதானமான நடைமுறை அணுகுமுறை, புத்திசாலித்தனம், ஆளுமை ஒரு மிகப்பெரிய சமநிலையை, தன்னம்பிக்கையை இந்த அணிக்கு அளிக்கிறது. சென்னை அணி பாதி என்றால் தோனி மீதி. சென்னை அணி நிர்வாகத்தம் பாராட்ட வேண்டும் - அணி சொதப்பிய போது அவர்கள் பதறாமல் குறைகளை கண்டறிந்து சரி செய்தார்கள். அணியின் மையம் மாறாமல் பார்த்துக் கொண்டார்கள். அது நிர்வாகம் இப்போதும் மூத்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது எனும் பிம்பத்தையும் தக்க வைத்தது.


வாழ்த்துகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...