முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று கதைகள்

 உயிர்மையின் 200வது இதழின் சிறுகதைகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன் (நான் சற்று தாமதமாகத் தான் படிக்க ஆரம்பிப்பேன்.)


இப்போதைக்கு படித்த மூன்று கதைகளில் இமையம் மற்றும் யுவன் சந்திரசேகரின் கதைகளே என்னை கவர்ந்தன.

1) ஜெயமோகனின் “கேளாச்சங்கீதம்” துல்லியமான விவரணைகள், மாந்திரிக தகவல்கள், நாஞ்சில் பேச்சுவழக்கு, உளவியல் என்று களைகட்டினாலும் அது ஒரு குறுநாவலுக்கான கதை என்று தோன்றியது. அதை சிறுகதையாக்க ஜெ.மோவால் முடியவில்லை. 


2) இமையத்தின் “மயானத்தில் பயமில்லை” அவர் முன்பு எழுதியுள்ள நாட்டார் சடங்கு, தெய்வங்கள், சாமி ஏறுவது ஆகிய விசயங்களைப் பேசும் கதைகளைப் போன்றது. இக்கதைகள் கூர்மையான ஒரு முடிவை நோக்கி விர்ரென பயணிக்கும் அவருடைய கச்சிதமான சிறுகதைகளில் இருந்து வேறுபட்டவை. சற்றே தஸ்தாவஸ்கியின் கதை பாணியை ஒத்தவை. தஸ்தாவஸ்கியின் நாவல் உலகில் மாறுபட்ட தனித்துவமான குணாதசியங்கள் கொண்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் தமக்கே உரித்த தனிமையால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் பரஸ்பரம் சந்தித்து உரையாடும் போது, ஒரு நெருக்கடியில் இருவரும் பின்னிப்பிணையும் போது அவர்கள் மத்தியில் ஒரு உடைவு ஏற்படும். அப்போது அவர்களுடைய தன்னிலைகளின் எல்லைக்கோடுகள் கரையும். அவர்கள் தாம் இருவேறு உடல்களில் இருக்கும் ஒருவரே என அறிவார்கள். 


இந்த போக்கை நாம் இமையத்தின் சில சிறுகதைகளிலும் காண முடியும் - வெளி, மனிதர்கள், அவர்களுடைய மிகுகற்பனை நம்பிக்கைகள், சடங்குகளில் வெளிப்படும் ஆளுமைகள் எல்லாம் கலந்து ஒன்றாகிட ஒருவித விடுதலை பெறுவார்கள். “மயானத்தில் பயமில்லை” கதையில் மயானத்தில் கொத்தனாருக்கு உதவியாக சாந்து தூக்க வரும் பெண்ணுக்கும் அங்கு பிணங்களை புதைக்கிற பணியை செய்கிற ஒரு பெண்ணுக்குமான உரையாடலில் இன்னதென்று கண்டறிய முடியாத ஒரு மாயம் நிகழ்கிறது. அவர்கள் பரஸ்பரம் அறிகிறார்கள், அப்போது தாம் ஒருவரன்றி வேறில்லை என்று உணர்கிறார்கள், அவ்வளவு தான், அதைத் தாண்டி கதையில் வேறெதுவும் நடப்பதில்லை. ஆனால் அதுவே ஒரு ஆசுவாசமான உணர்வை நமக்கு அளிக்கிறது. 


3) யுவனின் “திகைப்பு” சற்று சிக்கலான, படிக்க சிரமமான கதை, ஆனால் அபாரமான தொழில்நுட்ப லாவகம் கொண்டது, ஒரு கவிதைக்கே உரித்த மீஎதார்த்த தாவல்களைக் கொண்டது, வாசித்த பிறகு நினைத்து நினைத்து சிலாகிக்க வைக்கும் அழகு பொதிந்தது. இதன் கதைக்கருவும் இமையத்தின் கதையினுடையதே. இமையம் உணர்ச்சிகரமாக நாடகீயமாக சித்தரிப்பதை யுவன் புறவயமான விலகலுடன், மாய எதார்த்த ஸ்டைலுடன் செய்திருக்கிறார். கதைக்குள் கதைக்குள் கதை என்பது போல ஒரு மனிதனின் நினைவுக்குள் தோன்றும் ஒரு மனிதனுக்குள் தோன்றும் ஒருவன், இவர்களின் தோற்றத்தின் துவக்கப்புள்ளி அல்சைமைர்ஸ் நோயால் மன ஒழுங்கு குலைந்த ஒருவர் என்று கதையை வடிவமைத்திருக்கிறார் யுவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...