“வளையாத மூங்கிலில் ராகம்
வளைஞ்சு ஓடுதே”
பழனிபாரதி
ஒரு ‘சாதியவாதியை’ வெறுத்து ஒதுக்க வேண்டுமா?
கூடாது. ஏனென்று சொல்கிறேன்.
ஒரு கருத்து நிலையை எதிர்க்க வேண்டுமே ஒழிய அதைப் பேசுகிற தனிமனிதனை அல்ல என்பது என்நிலைப்பாடு (அரசியல்வாதிகள் மட்டுமே இதில் விதிவிலக்கு). உ.தா., ‘சாதியம்’, ‘மதவாதம்’ போன்றவைகருத்துநிலைகள், அவற்றை பேசுகிற, பின்பற்றுகிறவர்கள் ‘சாதியவாதிகளோ’ ‘மதவாதிகளோ’ அல்ல. அவர்களுடைய செயல்களைத் தொடர்ந்து கவனித்தால் அதற்கு முரணான பல கருத்துக்களையும் அவர்கள்கொண்டிருப்பதை நாம் அறிய முடியும். நான் முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்டிருந்த போதுதீவிரமான மதவாதிகளுடன் மேடையில் மோதியிருக்கிறேன், ஆனால் அதற்குப் பின் அவர்கள் மிகவும்இனிமையாக பழக்க கூடியவர்கள் கண்டிருக்கிறேன். விவாதத்தில் கோரைப்பல்லை காட்டினாலும்நடைமுறையில் வடிவேலுவின் புலிப்பாண்டி குழந்தைகளை நடத்துவதைப் போன்றே நம்மை நடத்துவார்கள். மிகவும் நட்பானவர்களாக, சிரமப்படுபவர்களுக்கு உதவ முன்வருபவர்களாக இருப்பார்கள். அதனாலே, எல்லாதரப்பினரையும் (அவர்களுடைய உள்ளடி, குழு அரசியல்களையும் பொறுத்துக் கொண்டு அல்லது எதிர்த்தும்கொண்டு) ஏற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுடைய மக்கள் விரோத அரசியலை மட்டும் மறுத்து விமர்சிக்கவேண்டும் என்பதே என்றும் என் தரப்பு.
மனிதர்களை எப்படி மதிப்பிடுவது? அவர்களுடைய சொற்களை வைத்தா? அவர்களுடைய செயல்களைவைத்தா? அவர்களும் சொற்களும் செயல்களும் எப்போதும் பொருந்திப் போவதில்லையே? அவர்களுடையசொற்கள் எப்போதும் அவர்களுடையதாக இருப்பதில்லையே? அவர்களுடைய செயல்களும் ஒரேநேர்கோட்டில், கருத்தியல் ஒழுங்குடன் இருப்பதில்லையே?
“கவிதையியல்” (Poetics) நூலில் மனித சுபாவம் பற்றி அரிஸ்டாட்டில் சொல்லும் போது மனிதர்களுக்குஉள்ளார்ந்த, நிரந்தர சுபாவம் என ஒன்று இல்லை என்கிறார். ஒருவருடைய இயல்பை அவருடையசெயல்பாடுகள் வழியாக மட்டுமே நம்மால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது. அதனால் செயலே மனிதஅடையாளம் என்கிறார். எனில் ஒருவர் தூங்கும் போது அவருடைய இயல்பு எங்கே போய் விடுகிறது என்று அவர்கேட்கிறார். தூங்கும் போது மட்டுமல்ல மரணத்தின் போதும் கெட்டவர்களும் நல்லவர்களும் ஒரே போன்றுதானே இருக்கிறார்கள்? எனில் செயலைத் தான் நாம் விமர்சிக்க வேண்டும், செயல்படுகிறவரை அல்ல. இரண்டும்வெவ்வேறு விசயங்கள். அச்செயலுக்கு அப்பால் ‘செயல்படுகிறவன்’ என்று ஒன்று இல்லை என்பதே உண்மை. ஒரு மனிதனை அந்தந்த கணத்துக்கு அப்பால் மதிப்பிடுவது தவறானது.
இந்த கருத்து உங்களில் பலருக்கும் கடுப்பேற்றும் என்று அறிவேன். ஏனென்றால் சகமனிதரை அந்தந்தகணத்து செயலை வைத்து மட்டும் மதிப்பிடுகையில் அவர்கள் ஒரு நிலையில் இல்லாமல் வழுவிக் கொண்டேஇருப்பார்கள் தானே! இது அவரை என்னவாக அடையாளப்படுத்துவது எனும் சிக்கலை ஏற்படுத்தும் அல்லவா. அதனாலே நாம் ஒருவரைப் பற்றிய மரபுத்தொடர்ச்சியை, கடந்தகால சித்திரத்தை (legacy) உருவாக்கிக்கொள்கிறோம் என்கிறார் அரிஸ்டாட்டில். ஒரு மீன் தொட்டிக்குள் மீன் தாவரங்களுக்குள் ஒளிந்து ஒளிந்துவிளையாடுவது போல மனிதன் இந்த மரபுத்தொடர்ச்சிக்குள் ஒளிந்து ஒளிந்து வெளிவருகிறான். நாம்முடிந்தவரையில் மனிதர்களை அவர்கள் அவ்வப்போது என்னவாக தம்மைக் காட்டிக்கொள்கிறார்களோஅதன்படி அவர்களுடன் உறவாடுகிறோம். இதுவே இயல்பாக, மகிழ்ச்சியாக, சுதந்திரமாக. இருக்கிறது. ஆனால்பொதுவெளி என்று வந்து விட்டால் நாம் அவர்களை ஏதோ ஒரு கடந்த கால தொடர்ச்சியுடன் பிணைத்துவிமர்சிக்கவோ கொண்டாடவோ செய்கிறோம். நான் எப்போதும் முன்னதையே விரும்புவேன்.
பொதுவெளியில் நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் மீது சாதிய, பாலியல் குற்றச்சாட்டுகள் வரும் போது அவர்களைகாறி உமிழ்கிறோம். நான் அதை ஒரு கும்பல் மனநிலை என்றே கொள்வேன். ஏனென்றால் அவருடன் தினசரிபழகும் நிலை ஏற்பட்டால் அவ்வாறு காறி உமிழ மாட்டோம்.
இன்னொரு கேள்வி: நமக்கு ஒத்த சிந்தனை கொண்டோர் மட்டுமே தான் நமக்கு நண்பர்களாக இருக்கமுடியுமா? ஒத்த அலைவரிசை கொண்டோர் நட்பாவது சுலபம். அதே நேரம் மாற்று சிந்தனை கொண்டோரும்அணுக்கமாக, அன்பாக இருக்க முடியும் என்றும் ஒரு பார்வை உள்ளது என “Nicomachean Ethics” நூலின்எட்டாவது பகுதியான “நட்பில்” அரிஸ்டாடில் சொல்லுகிறார். நட்பு என்பது அரிஸ்டாட்டிலின் காலத்தில்(குடும்பத்துக்கு வெளியே உள்ள) எல்லாவிதமான மனித உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பதால்இக்கருத்தை சற்று விரிவான தளத்தில் வைத்து நாம் யோசிக்க வேண்டும்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வலதுசாரி அரசியல் பேச ஆரம்பித்தாலே எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். எங்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அவர் அரசியல் பேசாத போதுமிகுந்த பிரியமும் எங்களிடையே தழைக்கும். உணர்வளவில் இணக்கமாக இருப்போம், ஆனால் கருத்தளவில்சுத்தமாக ஒத்துப் போகாது. அரசியல் தான் பிரச்சனை என்று ஒரு தத்துவக் கருத்தையோ கவிதையியல் பற்றிவிமர்சனத்தையோ எடுத்து கொண்டால் கூட “அக்னி நட்சத்திரம்” பிரபு-கார்த்திக் போல ஆகி விடுவோம். இந்தகருத்துமோதல்கள் எங்களிடையே ஒரு நாள் கூட எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை என்பதே ஆச்சரியம். அதற்கு அவருடைய பிரியமான, நட்பார்ந்த, தளர்வான சுபாவம் ஒரு முக்கிய காரணம். கருத்து நிலையும்தனிமனிதனும் வேறுவேறு எனும் என்னுடைய நம்பிக்கையும் இன்னொரு காரணம்.
இலக்கிய தளத்துக்கு வருகிறேன் - நான் என் பதின் வயதில் சந்தித்த நாள் முதலே ஜெயமோகனுடன் எனக்குகடுமையான கருத்துமுரண்கள் ஏற்பட்டதுண்டு. அவருடைய இலக்கிய, பண்பாட்டு அரசியல் கருத்துக்களுக்குஎதிராக நான் விரிவாக நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் மீது எனக்கு துளியும் வெறுப்பு என்றுமேஇருந்ததில்லை, இப்போதும் இல்லை. அவருடைய இலக்கிய இடத்தை மறுத்ததோ அவர் ஒரு பாசிஸ்ட்ஏஜெண்ட் என்று சித்தரித்ததோ இல்லை. அவருடைய கலாச்சார அரசியலை மறுக்கும் போதும் அவரதுபடைப்புகளை வாசித்து சிலாகிப்பதில் / விமர்சிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
“ஒரு இலக்கியவாதியை அவனுடைய கருத்தில் இருந்து பிரித்துப் பார்க்கலாகாது, கருத்துநிலையும் படைப்பும்ஒன்று தான்” எனும் பார்வை முதிர்ச்சியற்றது என்று நினைக்கிறேன். ஆம், இலக்கியவாதியின் கருத்துநிலைஅவருடைய படைப்பில் வெளிப்படுவதுண்டு, அதைக் கடந்தும் அப்படைப்பு செல்வதுண்டு. மேலும், தெரிதாசொல்வதைப் போல, வாசிப்பானது கருத்துக்கள், உணர்வுகளின் முரண்களின் உச்சத்தில் மட்டுமே நிகழ்வதுஅல்லவா. அத்துடன், ஒரு படைப்பாளியை அவருடைய செயல்களை வைத்து மதிப்பிடுவது என்றால் நாம்அவருடைய எல்லா செயல்களையும் தானே உள்ளடக்க வேண்டும்? நாம் அதை செய்கிறோமா? அதைசெய்யுமளவுக்கு நமக்கு அவரைத் தெரியுமா? இல்லையே.
ஒரு படைப்பாளி அவனுடைய சமூகத்தின், கலாச்சாரத்தின் பிரதிநிதி அல்லவா? ஆகையால் அவன் பொறுப்பாகபேச வேண்டாமா? ஆம், அவன் பிரதிநிதி தான், அவன் ஒரு பண்பாட்டுக் குறியீடு தான். அதே நேரம் அவனுடன்நாம் கொள்ளும் சமூக உறவானது, நட்பானது, வாசக உறவானது ஒரு குறியீட்டுடன் கொள்ளும் உறவு அல்ல. ஒரு குறியீட்டுடன் நாம் கொள்ளும் உறவானது கடற்கரையில் நிற்கும் சிலைகளுடன் கொள்ளும் உறவுக்குஒப்பானது. ஆனால் ஒரு மனிதன் என்பவன் ஒரு சிலை அல்ல. அவனுடைய எழுத்தில் உயிர்கொள்ளும் குரலும்ஒரு குறியீட்டின் குரல் அல்ல.
ஒருவருடைய கட்டுரைகள், பேட்டிகளை வைத்து அவரை ஒரு அடையாளப் பட்டிக்குள் அடைப்பது தவறானது. தமிழின் முக்கிய படைப்பாளியான கண்மணி குணசேகரன் தற்போது “ஜெய் பீமை” எதிர்த்து பா.ம.கவின்அரசியலை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ள பேஸ்புக் பதிவு கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. கண்மணியின் புத்தகங்களை அவர் மீதான எதிர்ப்பின் முகமாக அவருக்கே திருப்பி அனுப்புவோமா என ஒருஇலக்கிய நண்பர் கேட்கிறார். அது ஒரு மிகத் தவறான முன்னுதாரணமாகி விடும், அதை ஒரு போதும் நாம்செய்யக் கூடாது எனக் கூறுகிறேன். தொடர்ந்து உயிர்த்திருப்பதில், எந்த அடையாளத்துக்குள்ளும்சிக்காதிருப்பதில் எழுத்தானது வாழ்க்கைக்கு நிகராக சில நேரம் இருக்கிறது. ஆகையாலே ஒரு கருத்தைவைத்து கண்மணியின் படைப்புகளை கூட்டக நாம் நிராகரிப்பது கலையையும், வாழ்வையும் நிராகரிக்கும்பாசிச செயல்பாடாகி விடும்.
மாறாக, கண்மணி குணசேகரனை கண்டிப்பதும் அவரை தொடர்ந்து நேசிப்பதுமே நம் அணுகுமுறையாகஇருக்க வேண்டும்.
நன்றி: சமயம் டாட் காம்
