Skip to main content

ஒரு ‘சாதியவாதியை’ வெறுக்க வேண்டுமா? - எழுத்தாளர்களை, கலைஞர்களை முன்வைத்து



வளையாத மூங்கிலில் ராகம்

வளைஞ்சு ஓடுதே

பழனிபாரதி


ஒரு ‘சாதியவாதியை’ வெறுத்து ஒதுக்க வேண்டுமா?


கூடாதுஏனென்று சொல்கிறேன்.


ஒரு கருத்து நிலையை எதிர்க்க வேண்டுமே ஒழிய அதைப் பேசுகிற தனிமனிதனை அல்ல என்பது என்நிலைப்பாடு (அரசியல்வாதிகள் மட்டுமே இதில் விதிவிலக்கு). .தா., ‘சாதியம்’, ‘மதவாதம்’ போன்றவைகருத்துநிலைகள்அவற்றை பேசுகிறபின்பற்றுகிறவர்கள் ‘சாதியவாதிகளோ’ ‘மதவாதிகளோ’ அல்லஅவர்களுடைய செயல்களைத் தொடர்ந்து கவனித்தால் அதற்கு முரணான பல கருத்துக்களையும் அவர்கள்கொண்டிருப்பதை நாம் அறிய முடியும்நான் முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்டிருந்த போதுதீவிரமான மதவாதிகளுடன் மேடையில் மோதியிருக்கிறேன்ஆனால் அதற்குப் பின் அவர்கள் மிகவும்இனிமையாக பழக்க கூடியவர்கள் கண்டிருக்கிறேன்விவாதத்தில் கோரைப்பல்லை காட்டினாலும்நடைமுறையில் வடிவேலுவின் புலிப்பாண்டி குழந்தைகளை நடத்துவதைப் போன்றே நம்மை நடத்துவார்கள்மிகவும் நட்பானவர்களாகசிரமப்படுபவர்களுக்கு உதவ முன்வருபவர்களாக இருப்பார்கள்அதனாலேஎல்லாதரப்பினரையும் (அவர்களுடைய உள்ளடிகுழு அரசியல்களையும் பொறுத்துக் கொண்டு அல்லது எதிர்த்தும்கொண்டுஏற்றுக் கொள்ள வேண்டும்அவர்களுடைய மக்கள் விரோத அரசியலை மட்டும் மறுத்து விமர்சிக்கவேண்டும் என்பதே என்றும் என் தரப்பு


மனிதர்களை எப்படி மதிப்பிடுவதுஅவர்களுடைய சொற்களை வைத்தாஅவர்களுடைய செயல்களைவைத்தாஅவர்களும் சொற்களும் செயல்களும் எப்போதும் பொருந்திப் போவதில்லையேஅவர்களுடையசொற்கள் எப்போதும் அவர்களுடையதாக இருப்பதில்லையேஅவர்களுடைய செயல்களும் ஒரேநேர்கோட்டில்கருத்தியல் ஒழுங்குடன் இருப்பதில்லையே?


கவிதையியல்” (Poetics) நூலில் மனித சுபாவம் பற்றி அரிஸ்டாட்டில் சொல்லும் போது மனிதர்களுக்குஉள்ளார்ந்தநிரந்தர சுபாவம் என ஒன்று இல்லை என்கிறார்ஒருவருடைய இயல்பை அவருடையசெயல்பாடுகள் வழியாக மட்டுமே நம்மால் ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறதுஅதனால் செயலே மனிதஅடையாளம் என்கிறார்எனில் ஒருவர் தூங்கும் போது அவருடைய இயல்பு எங்கே போய் விடுகிறது என்று அவர்கேட்கிறார்தூங்கும் போது மட்டுமல்ல மரணத்தின் போதும் கெட்டவர்களும் நல்லவர்களும் ஒரே போன்றுதானே இருக்கிறார்கள்எனில் செயலைத் தான் நாம் விமர்சிக்க வேண்டும்செயல்படுகிறவரை அல்லஇரண்டும்வெவ்வேறு விசயங்கள்அச்செயலுக்கு அப்பால் ‘செயல்படுகிறவன்’ என்று ஒன்று இல்லை என்பதே உண்மைஒரு மனிதனை அந்தந்த கணத்துக்கு அப்பால் மதிப்பிடுவது தவறானது


இந்த கருத்து உங்களில் பலருக்கும் கடுப்பேற்றும் என்று அறிவேன்ஏனென்றால் சகமனிதரை அந்தந்தகணத்து செயலை வைத்து மட்டும் மதிப்பிடுகையில் அவர்கள் ஒரு நிலையில் இல்லாமல் வழுவிக் கொண்டேஇருப்பார்கள் தானேஇது அவரை என்னவாக அடையாளப்படுத்துவது எனும் சிக்கலை ஏற்படுத்தும் அல்லவாஅதனாலே நாம் ஒருவரைப் பற்றிய மரபுத்தொடர்ச்சியைகடந்தகால சித்திரத்தை (legacy) உருவாக்கிக்கொள்கிறோம் என்கிறார் அரிஸ்டாட்டில்ஒரு மீன் தொட்டிக்குள் மீன் தாவரங்களுக்குள் ஒளிந்து ஒளிந்துவிளையாடுவது போல மனிதன் இந்த மரபுத்தொடர்ச்சிக்குள் ஒளிந்து ஒளிந்து வெளிவருகிறான்நாம்முடிந்தவரையில் மனிதர்களை அவர்கள் அவ்வப்போது என்னவாக தம்மைக் காட்டிக்கொள்கிறார்களோஅதன்படி அவர்களுடன் உறவாடுகிறோம்இதுவே இயல்பாகமகிழ்ச்சியாகசுதந்திரமாகஇருக்கிறதுஆனால்பொதுவெளி என்று வந்து விட்டால் நாம் அவர்களை ஏதோ ஒரு கடந்த கால தொடர்ச்சியுடன் பிணைத்துவிமர்சிக்கவோ கொண்டாடவோ செய்கிறோம்நான் எப்போதும் முன்னதையே விரும்புவேன்.


பொதுவெளியில் நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் மீது சாதியபாலியல் குற்றச்சாட்டுகள் வரும் போது அவர்களைகாறி உமிழ்கிறோம்நான் அதை ஒரு கும்பல் மனநிலை என்றே கொள்வேன்ஏனென்றால் அவருடன் தினசரிபழகும் நிலை ஏற்பட்டால் அவ்வாறு காறி உமிழ மாட்டோம்


இன்னொரு கேள்விநமக்கு ஒத்த சிந்தனை கொண்டோர் மட்டுமே தான் நமக்கு நண்பர்களாக இருக்கமுடியுமாஒத்த அலைவரிசை கொண்டோர் நட்பாவது சுலபம்அதே நேரம் மாற்று சிந்தனை கொண்டோரும்அணுக்கமாகஅன்பாக இருக்க முடியும் என்றும் ஒரு பார்வை உள்ளது என “Nicomachean Ethics” நூலின்எட்டாவது பகுதியான “நட்பில்” அரிஸ்டாடில் சொல்லுகிறார்நட்பு என்பது அரிஸ்டாட்டிலின் காலத்தில்(குடும்பத்துக்கு வெளியே உள்ளஎல்லாவிதமான மனித உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது என்பதால்இக்கருத்தை சற்று விரிவான தளத்தில் வைத்து நாம் யோசிக்க வேண்டும்.


 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார்அவர் வலதுசாரி அரசியல் பேச ஆரம்பித்தாலே எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும்எங்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டதுண்டுஆனால் அவர் அரசியல் பேசாத போதுமிகுந்த பிரியமும் எங்களிடையே தழைக்கும்உணர்வளவில் இணக்கமாக இருப்போம்ஆனால் கருத்தளவில்சுத்தமாக ஒத்துப் போகாதுஅரசியல் தான் பிரச்சனை என்று ஒரு தத்துவக் கருத்தையோ கவிதையியல் பற்றிவிமர்சனத்தையோ எடுத்து கொண்டால் கூட “அக்னி நட்சத்திரம்” பிரபு-கார்த்திக் போல ஆகி விடுவோம்இந்தகருத்துமோதல்கள் எங்களிடையே ஒரு நாள் கூட எந்த பிளவையும் ஏற்படுத்தவில்லை என்பதே ஆச்சரியம்அதற்கு அவருடைய பிரியமானநட்பார்ந்ததளர்வான சுபாவம் ஒரு முக்கிய காரணம்கருத்து நிலையும்தனிமனிதனும் வேறுவேறு எனும் என்னுடைய நம்பிக்கையும் இன்னொரு காரணம்


இலக்கிய தளத்துக்கு வருகிறேன் - நான் என் பதின் வயதில் சந்தித்த நாள் முதலே ஜெயமோகனுடன் எனக்குகடுமையான கருத்துமுரண்கள் ஏற்பட்டதுண்டுஅவருடைய இலக்கியபண்பாட்டு அரசியல் கருத்துக்களுக்குஎதிராக நான் விரிவாக நிறைய எழுதியிருக்கிறேன்ஆனால் அவர் மீது எனக்கு துளியும் வெறுப்பு என்றுமேஇருந்ததில்லைஇப்போதும் இல்லைஅவருடைய இலக்கிய இடத்தை மறுத்ததோ அவர் ஒரு பாசிஸ்ட்ஏஜெண்ட் என்று சித்தரித்ததோ இல்லைஅவருடைய கலாச்சார அரசியலை மறுக்கும் போதும் அவரதுபடைப்புகளை வாசித்து சிலாகிப்பதில் / விமர்சிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

 “ஒரு இலக்கியவாதியை அவனுடைய கருத்தில் இருந்து பிரித்துப் பார்க்கலாகாதுகருத்துநிலையும் படைப்பும்ஒன்று தான்” எனும் பார்வை முதிர்ச்சியற்றது என்று நினைக்கிறேன்ஆம்இலக்கியவாதியின் கருத்துநிலைஅவருடைய படைப்பில் வெளிப்படுவதுண்டுஅதைக் கடந்தும் அப்படைப்பு செல்வதுண்டுமேலும்தெரிதாசொல்வதைப் போலவாசிப்பானது கருத்துக்கள்உணர்வுகளின் முரண்களின் உச்சத்தில் மட்டுமே நிகழ்வதுஅல்லவாஅத்துடன்ஒரு படைப்பாளியை அவருடைய செயல்களை வைத்து மதிப்பிடுவது என்றால் நாம்அவருடைய எல்லா செயல்களையும் தானே உள்ளடக்க வேண்டும்நாம் அதை செய்கிறோமாஅதைசெய்யுமளவுக்கு நமக்கு அவரைத் தெரியுமாஇல்லையே.


ஒரு படைப்பாளி அவனுடைய சமூகத்தின்கலாச்சாரத்தின் பிரதிநிதி அல்லவாஆகையால் அவன் பொறுப்பாகபேச வேண்டாமாஆம்அவன் பிரதிநிதி தான்அவன் ஒரு பண்பாட்டுக் குறியீடு தான்அதே நேரம் அவனுடன்நாம் கொள்ளும் சமூக உறவானதுநட்பானதுவாசக உறவானது ஒரு குறியீட்டுடன் கொள்ளும் உறவு அல்லஒரு குறியீட்டுடன் நாம் கொள்ளும் உறவானது கடற்கரையில் நிற்கும் சிலைகளுடன் கொள்ளும் உறவுக்குஒப்பானதுஆனால் ஒரு மனிதன் என்பவன் ஒரு சிலை அல்லஅவனுடைய எழுத்தில் உயிர்கொள்ளும் குரலும்ஒரு குறியீட்டின் குரல் அல்ல.


ஒருவருடைய கட்டுரைகள்பேட்டிகளை வைத்து அவரை ஒரு அடையாளப் பட்டிக்குள் அடைப்பது தவறானதுதமிழின் முக்கிய படைப்பாளியான கண்மணி குணசேகரன் தற்போது “ஜெய் பீமை” எதிர்த்து பா..கவின்அரசியலை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ள பேஸ்புக் பதிவு கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறதுகண்மணியின் புத்தகங்களை அவர் மீதான எதிர்ப்பின் முகமாக அவருக்கே திருப்பி அனுப்புவோமா என ஒருஇலக்கிய நண்பர் கேட்கிறார்அது ஒரு மிகத் தவறான முன்னுதாரணமாகி விடும்அதை ஒரு போதும் நாம்செய்யக் கூடாது எனக் கூறுகிறேன்தொடர்ந்து உயிர்த்திருப்பதில்எந்த அடையாளத்துக்குள்ளும்சிக்காதிருப்பதில் எழுத்தானது வாழ்க்கைக்கு நிகராக சில நேரம் இருக்கிறதுஆகையாலே ஒரு கருத்தைவைத்து கண்மணியின் படைப்புகளை கூட்டக நாம் நிராகரிப்பது கலையையும்வாழ்வையும் நிராகரிக்கும்பாசிச செயல்பாடாகி விடும்


 மாறாககண்மணி குணசேகரனை கண்டிப்பதும் அவரை தொடர்ந்து நேசிப்பதுமே நம் அணுகுமுறையாகஇருக்க வேண்டும்.


நன்றிசமயம் டாட் காம்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...