இந்த டி20 உலகக்கோப்பையில் இரவு 9-10 மணிக்கு மேல் பனி அதிகமாக அதிகமாக விழுவதால், பந்து ஈரமாகி ஆடுதளம் வேகமாகி இரண்டாவதாக மட்டையாடும் அணிக்கு ஆடுவது சுலபமாகிறது. இது ஒரு மிகப்பெரிய அனுகூலம். ஆட்டம் பாராட்சமாகிறது. இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் அதுவே நடந்திருக்கிறது. நாளை ஒரு அரை இறுதி / இறுதிப்போட்டியில் இது நடந்தால் பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதனால் ஏன் ஆட்டத்தை இரவு 10 மணிக்கு ஆரம்பித்து காலை 2 மணிக்கு முடிக்கக் கூடாது? இப்போதைய பிரச்சனை ஆட்டம் ஆரம்பிக்கும் போது மட்டையாடுவது சற்று சிரமமாகவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது பனிப்பொழிவால் பந்தை பிடித்து வீசுவது சிரமமாகிறது, மட்டையாடுவது வெகு சுலபமாகிறது.
ஆனால் ஆட்டத்தை தாமதமாக ஆரம்பித்தால் பனி மெதுவான ஆடுதளங்களையும் வேகமாக்கும். அனேகமாக எல்லா போட்டிகளிலும் சராசரி ஸ்கோர் 180 என்றாகும். இரு அணிகளுக்கும் ஒரேவிதமான அனுகூலங்களே இருக்கும்.
ஐ.சி.சி இதை பரிசீலிக்க வேண்டும்.
கருத்துகள்