முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிராமணரா பார்ப்பனரா?

பிராமணர்-பார்ப்பனர் சொற் தேர்வில் எது சரியானது என்பதில் நான் சாருவின் பக்கமே நிற்கிறேன்.
 நான் முடிந்த வரையில் பிராமணர் என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன். வரலாற்று மனிதர்களை குறிக்கும் மட்டும் பார்ப்பனர் என எழுதுகிறேன். ஆனால் அது ஒரு வசைச்சொல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிராமணர் என்ற சொல்லில் ஒரு அதிகாரம் உள்ளது, அதை பார்ப்பனர் என்று சொல் வழியாகவே மட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை.
 பிராமணியம் / பார்ப்பனியம் பிராமண சமூகத்தின் பிரச்சனை அல்ல. நாகார்ஜுனர் கூட பிராமணராக பிறந்தவரே. ஆனால் அவரளவுக்கு வைதீகத்துக்கு வேட்டு வைத்தவர் மற்றொருவர் இல்லை. அவருடைய தத்துவத்தை, தர்க்கங்களை வைத்து சனாதன சிந்தனையை சில்லுசில்லாக நொறுக்க முடியும். அதே போலவே, சாதிக்கு எதிராக செயல்படுகிற எத்தனையோ பிராமணர்களை நான் அறிவேன். எனக்கு பிராமணர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்ததால் சில மோசமான அனுபவங்களும் கிடைத்தன. ஆனால் நான் மற்றொரு சாதியில் பிறந்திருந்தால் அப்போது நான் இருக்கும் சூழலில் உள்ள மேல்சாதியினரால் நான் ஒடுக்கப்பட்டிருப்பேன். ஆக பிரச்சனை இந்த சாராம்சமான சிந்தனை முறையே (அதில் இருந்தே சனாதனம், சாதியமைப்பு, பிராமணியம் எல்லாம் பிறக்கிறது) என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறேன். 

ஏதோ ஒரு அரசியல் நியாயத்துக்காக நம்முடன் செயல்படும் நண்பர்களை, தோழர்களை காயப்படுத்தும் நோக்கில் ஒரு சொல்லை எடுத்து வீசக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போது நடைபெறும் அன்புமணி vs சூர்யா பிரச்சனையில் கூட நாம் வன்னிய சமுதாயத்தினரை காயப்படுத்தும் விதத்தில் பேசவோ மீம்களை பகிரவோ கூடாது என நினைக்கிறேன். 

பெரியாரும் தன் காலத்தில் பார்ப்பனர் என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தவறு தான். ஆனால் பெரியார் மீதுள்ள மட்டற்ற அன்பினால், மரியாதையால், இந்த சொற்தேர்வையும் மீறி, நாம் அவரை என்றும் கொண்டாடத் தான் போகிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...