முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா ரஞ்சித் எனும் சாதனையாளனர்


 

சமகால தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!  வெகு அரிதாகத் தான் ரஞ்சித்தைப் போல தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றக் கூடியராக ஒரு இயக்குநர் தோன்றுவார். 


2010இல் சுசீந்திரனின் "நான் மகான் அல்ல" படம் குறித்த ஒரு விவாதம் கருந்தேள் ராஜேஷின் பிளாகில் நடக்கிறது.  தமிழ் சினிமாவில் தலித்துகள் குறித்த பதிவுகள் எவ்வளவு அபத்தமாக உள்ளது என ரஞ்சித் ராஜேஷுக்கு அனுப்பிய மின்னஞ்சலை அவர் பதிவிடுகிறார். அதை ஒட்டி பின்னூட்டங்களில் ஒரு நீண்ட விவாதம். அப்போது ரஞ்சித் ஒரு இயக்குநர் அல்ல. தன்னை ஒரு உதவி இயக்குநர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவருடைய தரப்பை பின்னூட்டங்களில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சினிமாவில் உள்ள பாத்திரங்களின் சாதியைப் பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் கொந்தளிக்கிறார்கள். ஆனால் ஏன் தாழ்த்தப்பட்டோர் மட்டும் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என ரஞ்சித் கேள்வி எழுப்ப யாரும் அதைப் பொருட்படுத்தி யோசிக்கவில்லை. அதன் பின்னர் "அட்டகத்தி" எனும் தனது முதல் படத்தின் மூலம் வளர்ந்து "மெட்ராஸ்" மூலம் வெகுஜன தளத்தில் கால் பாவி நின்ற ரஞ்சித் "கபாலி" மூலம் தலித் அழகியல் என்பதை தமிழ் திரைமொழிக்குள் வலுவாக நிறுவினார். "கபாலிடா" எனும் ஒற்றைச்சொல் பெரிய மாற்றங்களை மக்களின் பார்வையில் கொண்டு வந்தது. அங்கிருந்து பௌத்தத்தை வெகுஜன மாபியா / அரசியல் கதைமொழிக்குள் கொண்டு வந்து "காலா" எனும் இந்திய சினிமாவின் தலைசிறந்த படமொன்றை எடுத்தார். அதன் பிறகு "சார்பட்டா பரம்பரையை" எடுத்து பாத்திர அமைப்பில், பின்னணியின் சமூக வரலாற்று நுட்பங்களை சித்தரிப்பதில் தான் எவ்வளவு பெரிய கலைஞன் எனக் காட்டினார். 


நான் அடிக்கடி ரஞ்சித்தின் வளர்ச்சியைப் பற்றி யோசிக்கையில் அவதானிப்பது கலையின் தாக்கம் அளப்பரியது, அதுவும் வெகுஜன வடிவங்களின் வீச்சு கற்பனைக்கு அப்பாலானது என்பதே. ஒரு கருத்தை நீங்கள் நேரடியாக சொல்லும் போது மதிக்காதவர்கள் அதை ஒரு படைப்பாக்கி சொல்லித் தரும் போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். "கபாலிக்குப்" பிறகு சினிமாவில் ஏன் சார் சாதி அரசியலைப் பேசுறீங்க என யாரும் கேட்க முடியாது. ரஞ்சித் அவர்களையும் தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். சினிமா கதையாடலை "நிறப்பிரிகை" விவாதங்களுக்கு பக்கத்தில் அழைத்து வந்து விட்டார். அரசியல் என்பதன் பொருளை மாற்றி விட்டார். அது தான் ரஞ்சித்தின் மற்றொரு சாதனை.


மாற்றுக் கருத்துக்கள் கொண்டவர்களுக்கு படைப்பூக்கமும் உழைக்கும் மனமும் இருந்தால் தம் கருத்துக்களை எப்படி மக்களின் கருத்துக்களாக்குவது என்பதற்கு ரஞ்சித் ஒரு வழிகாட்டியாக, ஒளியாக இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...