முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மறைதல்


திபெத்திய பௌத்த எமன்


நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சிலசார்புநிலைகளால்ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்கும் காலம் எனும் ஜன்னலை முழுக்கத் திறந்து அதன் வழி குதித்து விடுகிறார். அல்லது அவர் (ஹைடெக்கர் சொல்வதைப் போல) நம் பார்வையில் படும்படி எங்குமே போகவில்லை. அவர் எங்கு போனார் என்றே கண்டறிய முடியாது போவதே மரணம். எங்கு போனார் என்றறியாத போது ஏன் அழ வேண்டும்? அவரே தான் போவதைக் காண முடியாது, வாழும் எவருமே வாழ்கையில் மரணிக்க முடியாது, சாவின் கணத்தில் இந்த உலகத்தை அவர் தன் உடலால் அறிய முடியாது என்கிறார் ஹைடெக்கர். காலமாகிறவருக்கே முடியாத ஒன்றைப் பற்றி நாம் ஏன் கலங்க வேண்டும், அந்த அபூர்வத்தை கையெடுத்து வணங்காமல்?


சாகக் கூடாது எனும் உயிர்த்துடிப்பு நம்மில் அனைவரிடம் உள்ளது. ஆனால் அதே நேரும் ஒவ்வொரு நொடியும் நாம் சாகத் துடிக்கிறோம். பேச்சில், எழுத்தில், சாப்பிடுவதில், அசைகையில், இயற்கையை ரசிக்கையில், சிரிக்கையில், வெறுமனே எங்கோ அமர்ந்திருக்கையில். இரண்டுமே சேர்ந்தது தான் மனிதனின் இருத்தல், அவனது வாழ்க்கை. அதன் நீட்சி மட்டுமே மரணம். நாம் மரணத்தை ஒருஇழப்பாகமட்டும் காண்பது வாழ்வையும் இழப்பாகக் காண்பதாகும். இது ஒவ்வொரு நிமிடத்தையும் உற்பத்திக்கான உழைப்பாகக் காணும் மேற்கத்திய முதலீட்டிய பார்வையில் இருந்து வருவதென நினைக்கிறேன். அது மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருளியலைத் தாண்டி தான் நமது இருத்தல் உள்ளது


அதனால் தான் பௌத்தத்தில் காலமாதல் ஒரு ஞானமடைதலாகிறது. அதாவது இருத்தலின் இன்மையை அறிவது. அறிவது என்று கூட சொல்லக் கூடாது. அது இது தான் என்று காண்பது. அது ஒன்றுமில்லை என்று பார்க்க முடிவது. அதனாலே எமனை ஒரு தர்மபாலனாக பௌத்தம் கண்டது. பின்னர் பௌத்தத்தை எதிர்த்து உருவான மதங்கள் எமனை ஒரு தீய கடவுளாக, மக்கள் அஞ்சக் கூடிய கரிய உருவமாக, பாசக்கயிறுடன் எருமையில் ஏறி வருகிறவனாக மாற்றியது. ஆனால் நிஜத்தில் எமன் ஒரு அற்புதமான தெய்வம். அந்த கருமை கூட நிஜத்தில் அருமையான நிறமே. கருமையில், இருட்டில் ஒன்றுமே இருப்பதில்லை. நாம் இருட்டில் தோன்றி இருட்டுக்குள் செல்கிறோம்.


நமது பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாடும் போக்கு உள்ளது. அதை நாம் நகரமயமாக்கலால் இழந்து வருகிறோம். எப்போதும் மௌனமாக கண்ணீர் வடிக்கிறோம். சத்தமாக அழுவதோ சிரிப்பதோ இல்லை. இரங்கல் குறிப்புகளில் மௌனமாக விசும்புகிறோம். இதுவும் நமது தன்னலம் மட்டுமே. அவர் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக அவரால் அடைந்திருக்கலாமே எனும் தன்னலம். நானும் தன்னலத்தால் ஒருவரது மரணத்திற்காக அழுதிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி இருப்பதில்லை


ஒருவரை உணர்வுவயப்பட்டு பற்றிக் கொண்டிருப்பது ஒரு நோய்மை. இந்த சமூக வாழ்க்கையில் நம்மால் அதைத் தவிர்க்க இயல்வதில்லை. ஆனால அப்படி தீவிர பற்றுதல் இல்லாத போது நாம் மகிழ்ச்சியுடன் ஒருவரதுகாலமற்று ஆதலைக்கொண்டாட வேண்டும்


மேலே உள்ள கிளையில் தொக்கி நிற்கும் தேன்கூட்டில் இருந்து சொட்டும் தேனை நாம் கீழே நின்றும் துளித்துளியாகப் பருகிக் கொண்டிருந்தோம். இப்போது நம்மில் ஒருவர் அந்த தேன்கூட்டையே நேராகப் போய் அடைந்து விட்டார். நாம் இன்மையாகத் தவிக்கையில் அவர் ஒரு முழுமையைப் பெற்று விட்டாரே? அது எவ்வளவு அழகானது! அது ஒரு சாதனை அல்லவா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒருவரது பாடையைத் தூக்கிச் செல்வது எவ்வளவு அற்புதமான ஒரு பண்பாடு. நாம் அதை ஒரு பெரும் சமூக நிகழ்வாக மீட்க வேண்டும். அது முடியாவிட்டாலும் தனித்தனியாக ஒரு புன்னகையுடன், இனிப்புடன், அன்பான சொற்களுடன் நாம் காலமாதலைக் கொண்டாடலாம். அழுவது காலத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை அல்லவா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...