இந்த இரண்டு செய்திகளையும் கவனியுங்கள்: இரண்டு ஆண் போலிசார் குடும்பத் தகராறால் தற்கொலை பண்ணுகிறார்கள். இறந்தது பெண் போலீஸ் என்றால் உடல் கொலையில் மர்மம் என்று கணவனை விசாரித்திருப்பார்கள் சரிதானே? ஆண்களை குடும்பத்தினர் உளவியல் வதை செய்து அதனால் அவர்கள் தற்கொலை பண்ணினால் செத்தது போலிசே என்றாலும் கூட சட்டத்துக்கு அது பொருட்டில்லை. அவர் குடிப்பதனால் மனைவி திட்டி இருக்கிறார் என்று அதை ஒரு சாதாரண தகவல் ஆக்கி விடுகிறார்கள்! ஏன் ஆணுக்கு மட்டும் மனமோ உணர்ச்சிகளோ இல்லையா?
நம் சமூகத்தில் ஆண் செத்தால் அது காக்காய், குருவி செத்ததைப் போலத் தான்! இதை ஏன் ஆண்மை-மைய சமூகம் என்கிறார்கள் என சில நேரங்களில் குழப்பம் ஏற்படும்! ஒரு வண்ண புகைப்படமாவது போடுறீங்களாடா? இதே பத்திரிகையின் பக்கத்து தாளில் ஒரு பெண்ணின் தற்கொலையெனும் மர்மச் சாவு செய்தி வந்திருக்கிறது. அதுக்கு மட்டும் வண்ணப்படம். அப்பெண்ணுக்காக மொத்த உறவினர்களும் திரண்டு வந்து போராடுகிறார்கள். போலீஸ் கணவன் மீது வழக்கு தொடுக்கிறது. அவர் தலைமறைவாகிறார். இந்த இரண்டு ஆண்கள் செத்ததை எந்த ஜனமும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படியே ஒரு படம் வைத்து, மாலை சாத்தி முடித்து விடுவார்கள். உங்களுக்கு உழைத்துக் கொட்டவும் மீசை முறுக்கிக் கொண்டு திரியவும் மட்டும் ஆண்கள் போதுமா? ஆண்களின் மனவுணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இல்லையா? ஆண்கள் தற்கொலை பண்ணினால் அதற்கான காரணங்களை விசாரித்து, காரணமானவர்களை குறைந்த பட்சம் எச்சரிக்கக் கூட மாட்டீர்களா? குடித்து விட்டு வருகிற ஆண்கள் எல்லாரும் தற்கொலை பண்ணுவதில்லையே? கை நரம்பை வெட்டும் அளவுக்கு அவர்களைத் தள்ளியது எது? ஆண்கள் எல்லாரும் போய் வங்கக்கடலில் குதிக்கட்டுமா? நீங்கள் பெண்களுக்காகவே இந்த நாட்டை நடத்திக் கொள்றீங்களா?
என்னடா உங்க சட்டம், உங்க விசாரணை, உங்க அக்கறை? ஊராடா இது?

கருத்துகள்