முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செத்தாலும் ஆண்களின் கதி


 

இந்த இரண்டு செய்திகளையும் கவனியுங்கள்: இரண்டு ஆண் போலிசார் குடும்பத் தகராறால் தற்கொலை பண்ணுகிறார்கள். இறந்தது பெண் போலீஸ் என்றால் உடல் கொலையில் மர்மம் என்று கணவனை விசாரித்திருப்பார்கள் சரிதானே? ஆண்களை குடும்பத்தினர் உளவியல் வதை செய்து அதனால் அவர்கள் தற்கொலை பண்ணினால் செத்தது போலிசே என்றாலும் கூட சட்டத்துக்கு அது பொருட்டில்லை. அவர் குடிப்பதனால் மனைவி திட்டி இருக்கிறார் என்று அதை ஒரு சாதாரண தகவல் ஆக்கி விடுகிறார்கள்! ஏன் ஆணுக்கு மட்டும் மனமோ உணர்ச்சிகளோ இல்லையா?

நம் சமூகத்தில் ஆண் செத்தால் அது காக்காய், குருவி செத்ததைப் போலத் தான்! இதை ஏன் ஆண்மை-மைய சமூகம் என்கிறார்கள் என சில நேரங்களில் குழப்பம் ஏற்படும்! ஒரு வண்ண புகைப்படமாவது போடுறீங்களாடா? இதே பத்திரிகையின் பக்கத்து தாளில் ஒரு பெண்ணின் தற்கொலையெனும் மர்மச் சாவு செய்தி வந்திருக்கிறது. அதுக்கு மட்டும் வண்ணப்படம். அப்பெண்ணுக்காக மொத்த உறவினர்களும் திரண்டு வந்து போராடுகிறார்கள். போலீஸ் கணவன் மீது வழக்கு தொடுக்கிறது. அவர் தலைமறைவாகிறார். இந்த இரண்டு ஆண்கள் செத்ததை எந்த ஜனமும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படியே ஒரு படம் வைத்து, மாலை சாத்தி முடித்து விடுவார்கள். உங்களுக்கு உழைத்துக் கொட்டவும் மீசை முறுக்கிக் கொண்டு திரியவும் மட்டும் ஆண்கள் போதுமா? ஆண்களின் மனவுணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இல்லையா? ஆண்கள் தற்கொலை பண்ணினால் அதற்கான காரணங்களை விசாரித்து, காரணமானவர்களை குறைந்த பட்சம் எச்சரிக்கக் கூட மாட்டீர்களா? குடித்து விட்டு வருகிற ஆண்கள் எல்லாரும் தற்கொலை பண்ணுவதில்லையே? கை நரம்பை வெட்டும் அளவுக்கு அவர்களைத் தள்ளியது எது? ஆண்கள் எல்லாரும் போய் வங்கக்கடலில் குதிக்கட்டுமா? நீங்கள் பெண்களுக்காகவே இந்த நாட்டை நடத்திக் கொள்றீங்களா? 

என்னடா உங்க சட்டம், உங்க விசாரணை, உங்க அக்கறை? ஊராடா இது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...