முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆணின் அவமானமும் தாழ்வுணர்வும் தீராக்காதலும்


நம் ஊரில் சிலருக்கு பட்டவர்த்தமாக ஒரு கள்ள உறவில் இருக்க சிறந்த வழி கணவன் மீது குடும்ப வன்முறை, வரதட்சிணைக் கொடுமை என பொய் வழக்குகள் போட்டு அவனை சிறை, நீதிமன்றம், காவல்துறை என அலையவிட்டு கவனத்தை திருப்பிவிடுவதே. ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது யாரும் எதைப்பற்றியும் கேள்வி எழுப்ப முடியாதல்லவா! அதிலும், பல கணவர்களுக்கு தமக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி வெளியே பேச தயக்கம் உள்ளது. அதை தன் ஆண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று நினைப்பதால் அதை மறைக்கவே ஒரு ஆண் விரும்புகிறான். அவர்கள் என்னிடம் பேசும் போது தயங்கித் தயங்கி, கிட்டத்தட்ட நா குழற, அரைகுறையாக தம் மனைவியர் பற்றி குறிப்புணர்த்துவதைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதே நேரம், பொய்க் குற்றச்சாட்டுகளை மனைவி மீது சுமத்தும் கணவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தெருமுனையில் நின்று கத்தி சொல்வார்கள். ஒரு ஆண் எவ்வளவு சத்தமாக ஒரு அந்தரங்க விசயத்தை சொல்கிறாரோ அதை வைத்து அவருடைய நாணயத்தை தலைகீழ் விகிதிமாக கணித்துவிடலாம் என நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம், மனைவியால் கைவிடப்பட்ட, அவமதிக்கப்பட்ட, துரோகம் இழைக்கப்பட்ட கணவர்களுக்கு ஒரு தாழ்வுணர்வு வந்துவிடுகிறது. இது சில நேரம் அவர்களுடைய கோபத்தை அல்லாமல் ஒருவித மன்றாடல் குணத்தை தூண்டுகிறது. தம் மனைவியருக்கு உளவியல் அடிமைகளாக மாறிப் போகிறார்கள். தம் மனைவியர் எப்படியாவது தம்மை ஏற்றுக்கொண்டால் போதும் என ஏங்குகிறார்கள். சிலர் இதனாலே அவர்களைப் பழிக்காமல் விடுகிறார்கள், விட்டுப்போனால் போதும் என நினைக்கிறார்கள், வேறு சிலர் உறவினர்கள், பொது நண்பர்கள் மூலமாக தொடர்ந்து இப்பெண்களிடம் கெஞ்சுகிறார்கள்: “அவன் உன் கூட இருக்கட்டும், பரவாயில்லை, இதுவரை நடந்ததை மறக்கிறேன், ஆனால் என்னை விட்டுவிடாதே!” பொய் வழக்கில் சிறையில் தள்ளப்பட்டவர்கள், வருடக்கணக்கில் அலைகழிக்கப்படுகிறவர்களை விட இப்படி "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" எனப் போகும் ஆண்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. காதல் தாழ்வுணர்வைத் தூண்டினால் அது விஷமாக மாறி நம்மை சிறுக சிறுக கொன்றுவிடும்.
என்னுடன் தினம் தினம் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய கண்ணீர் கதைகளைக் கேட்கும் போது என் இழப்பு, துயரம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. ஒரு தோழி "நான் எந்த தப்புமே பண்ணல, என் மேலயும் என் பையன் மேலயும் பொய் வழக்கு போட்டிருக்காங்க, நான் பெட்ரோல் கேனுடன் காவல் நிலையத்துக்கு போகப் போறேன்" என சொல்கிறார். ஒருநாள் இதையெல்லாம் கடந்துவிடுவீர்கள், இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணைப் போல இவ்வளவு எளிதாக நேரடியாக ஆவேசமாக ஒரு பொய்க்குற்றச்சாட்டை, துரோகத்தை எதிர்கொள்ள ஒரு பெரும்பாலான ஆண்களுக்குத் தெரிவதில்லை. ஏன் ஆணை பெண்ணை விட பலசாலி என்று சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணைவிட பல மடங்கு பலவீனமானவன் ஆணே. ஆணே முதலில் உடைந்து போகிறான், அவனே முதலில் தாழ்வுணர்வு கொள்கிறான், முதலில் மண்டியிடுகிறான், முதலில் தன்னை அழிக்கிறான். எதிர்த்து அடிப்பது, கடந்து போவது, தன்னைப் புத்துருவாக்கம் செய்வது பெண்ணின் சமூக உளவியலில், ஆளுமையிலே இருக்கிறது, ஆனால் ஆணுக்கு இத்திறன்கள் மிக மிக குறைவு.
சட்டத்தின், சமத்துவத்தின் பெயரில் எவ்வளவு துரோகங்கள், சுரண்டல்கள், உளவியல் வதைகள், பகற்கொள்ளைகள். ஒரு பக்கம் இதையெல்லாம் கேட்க கஷ்டமாக இருந்தாலும் இவர்களுடைய கதைகளால் எனக்கு இந்த பாரபட்சமான சூழல், அநீதி ஏற்படுத்தும் நிர்கதியுணர்வு, தனிப்பட்ட கோபம் வெகுவாக குறைந்து வருகிறது. தப்பித்து ஓடுவதை விட நம்மைப் போன்று அல்லல்படுகிறவர்களின் துயரத்தில் பங்கு கொள்வதே நம் மனத்தின் காயங்களை ஆற்றுப்படுத்த சிறந்த வழி என்று ஏன் பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்!
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
- கண்ணதாசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...