முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு தீர்வற்ற தீர்வு

 நம் மனதை மிகவும் அழுத்துகிற துன்பங்களை மறைப்பதோ மனதின் அடியாழத்தில் மேலும் அழுத்தி புதைப்பதோ தவறானது என அறிவேன். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் வேறுவழியிருப்பதில்லை. என் வாழ்வில் அப்படி நேர்ந்த ஒரே துயரம் என் மகனைப் பிரிந்ததுதான். எதாவது ஒரு சிறிய நிகழ்வோ தகவலோ காட்சியோ என் நினைவுகளைத் தூண்டிவிட்டால் நான் கட்டுப்படுத்த இயலாத துயர மனநிலைக்குப் போய்விடுவேன். ஒரு எழுத்தாளனாக நான் நாவலை எழுதும் காலங்களில் குறிப்பாக ஒரு கொதிநிலையில் இருப்பேன். நியாயமாக அது தான் என்னை தனிப்பட்ட துக்கங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும், ஆனால் முரணாக அதுவே தான் என்னை சுலபத்தில் உணர்வுரீதியாக தடுமாறக் கூடியவனாகவும் மாற்றுகிறது. அதனாலே நான் கடந்த சில மாதங்களாக இவ்வகையான பிரச்சினைகள் பற்றி முகநூலிலோ பிளாகிலோ எழுதுவதில்லை. தற்செயலாக எழுதினாலும் அழித்துவிடுகிறேன்.


 இன்றிலிருந்து 10 நாட்களுக்கு முன் என் மகனின் பிறந்தநாள் வந்தது. அன்று அதிர்ஷ்டவசமாக நான் தில்லியில் பயணத்தில் இருந்ததால் அதன் நினைவு என் மனதை உருக்குலைப்பதில் இருந்து தப்பித்துவிட்டேன். ஆனால் பயணம் முடிந்து திரும்பும் போது நான் மனதுக்குள் அழுதுகொண்டே தான் இருந்தேன். ஆனால் அது என்னை அன்றிலிருந்து ஒரு கொலைவாளைப் போல என்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு என் மகனைப் பற்றி வந்த சேதி இது. வேறெதையோ தேடும் போது தற்செயலாக இது என் கையில் சிக்கியது. உடனே என் மனம் உடைந்துவிட்டது: 


His looks don't give away his condition though. He turns 3.5 years tomorrow. No more a toddler. Talking like there is no end to the world. Top performer at preschool. Adored to bits by teachers.


என் மகன் இடைவிடாமல் பேசுகிறான். ஆனால் அதைக் கேட்க வேண்டிய நான் அங்கு இல்லை. அவனுடைய ஒரு சொல்லைக் கூட நான் இத்தனை ஆண்டுகளாக கேட்கவில்லை. அவனுடைய பள்ளி ஆசிரியர்கள், அண்டை வீட்டார், அவனுடன் இருப்போர் கேட்கிறார்கள், ரோட்டில் போகிறவர்கள் கேட்கிறார்கள், ஆனால் நான் கேட்கவில்லை. அவன் நன்றாகப் படிக்கிறான். அனைவருக்கும் பிரியமானவனாக இருக்கிறான். ஆனால் அதை நான் ஒருமுறை கூட பார்த்ததில்லை.


வீட்டிலிருக்கையில் ஏதாவது ஒரு உரையாடல் என்னை அந்நினைவை நோக்கி நகர்த்திவிடுகிறது. உடனே புலம்ப ஆரம்பித்துவிடுவேன். வழக்கம் போல யாரும் என்னைப் புரிந்துகொள்வதில்லை என்பதைத் தான். இப்போது எனக்கு ரத்த உறவாகவோ நெருங்கிய நட்பாகவோ இருப்பவர்களில் பெண்களால் எனக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் பற்றி புலம்புகிறேன். என்னிடம் இருந்து என் மகனைப் பிரித்தது அநியாயமானது என்பதை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஏன் என்பது மட்டும் எனக்கும் புரியவில்லை. என்னை விட சிறந்த தகப்பனை நீங்கள் காண முடியாது என்பேன். ஆனால் நான் ஏன் அவனைப் பார்க்கக் கூடாது என்பதை சொல்லாமலே அதெல்லாம் அப்படித்தான், விட்டுவிடு என்பதாக பேசுகிறார்கள், அல்லது பெண்கள் அப்படித்தான், குழந்தையை தன்னுடன் வைத்துதான் அவர்கள் ஆறுதல் பெற முடியும் என்கிறார்கள், அல்லது நான் இதைப் பற்றி பேச்செடுத்தாலே அமைதி கொள்கிறார்கள். ‘ஒரே ஒருமுறை எனக்கு நடந்தது அநீதி என ஒப்புக்கொள்ளுங்கள், ஆறுதல் அடைந்துவிடுவேன்’ என்கிறேன்.


 இது ஒரு பைத்தியக்காரத்தனம் எனப் புரிந்து கொள்கிறேன், ஆனால் என் துயரத்தை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்பது என்னை மிக அதிகமாக அழிக்கிறது. இது நம் சமூகத்தின் பிரச்சினையா அல்லது உலகம் முழுக்க இப்படித்தானா என்று புரியவில்லை. ஒருவர் ஆணாக இருந்தாலே அவரை ‘இருட்டு அறையில்’ இட்டுப் பூட்டிவிடுவார்களோ என்பது புரியவில்லை. ஏனென்றால் ஆண் நண்பர்களிடம் நான் இப்பிரச்சினையைப் பேசினால் அவர்கள் உடனடியாக என் மனநிலையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் அளவுக்கு சகஹிருதயர்களாக எனக்கு நெருக்கமான பெண்கள் இருப்பதில்லை. உதாரணத்திற்கு நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னால் அவர் மௌனியாகி விடுகிறார். ஒரு சொல் கூட ஆறுதலுக்கு சொல்வதில்லை. எனில் அவர் மறைமுகமாக எனக்கு நடக்கும் அநியாயத்தை, நான் அனுபவிக்கும் துன்பத்தை ஆதரிக்கிறாரா என யோசிக்கிறேன். ஒருவேளை நான் ஒரு ஆணாகப் பிறக்காமல் பெண்ணாக இருந்து இதே துன்பம் எனக்கு நடந்திருந்தால் இவர்கள் எல்லாரும் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். ஒருவேளை நான் பெரும்பணக்காரனாக இருந்து என்னை சார்ந்திருக்கும் நிலையில் இருந்திருந்தால் இவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்திருப்பார்களோ என யோசிக்கிறேன். எனக்கு உண்மையிலே புரியவில்லை. சரி நீங்கள் தான் என்னுடன் இல்லையே, என்னை விட்டுப் போய் விடுங்கள் என்று சொல்லவும் முடியவில்லை. ‘ஆம், உனக்கு நடந்தது ஒரு தவறுதான்’ என்று மட்டும் சொன்னால் போதும், என் மனம் ஆறிவிடும் என்று தோன்றுகிறது.


இப்போது யோசிக்கையில் பிரச்சினை அவர்கள் அல்லர் - எனக்கு நடந்தது ஒரு தற்செயலான அநீதி, அது இந்த உலகம் முழுக்க நடப்பதே, அதற்கு யாரும் எப்போதும் பொறுப்பேற்க மாட்டார்கள், நான் அவர்கள் மூலம் யாராவது இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள விரும்புகிறேன் எனப் புரிகிறது. ஆனால் இதை என் அறிவு மனம் ஏற்றுக்கொள்வதைப் போல என் உணர்வுமனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இப்படி இது ஒரு தீர்வற்ற தீர்வாகி விட்டது.


பி.கு: எனக்குள்ள ஒரே தீர்வு என் துயரத்தை பொதுவெளியில் வைப்பதுதான், உணர்வளவில் கடந்து போவதுதான். ஒரு எழுத்தாளனாக என் மனம் அப்படித்தான் செயல்படுகிறது - எழுதி முடித்ததும் அதை தற்காலிகமாக மறந்துவிடுவேன். புனைவாக மாற்றினால் அனேகமாக முழுமையாக கடந்துவிடுவேன். அதனால் தான் இங்கு எழுதுகிறேன். இம்முறையும் இது எனக்கு உதவும் என நம்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...