முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத தயக்கமா?


 

அண்மையில் எழுத்தாளர் இந்திரன் அழைத்துப் பேசும் போது என்னுடைய நாவல் வகுப்பைப் பற்றியும் கேட்டார். வகுப்புக்கு அப்பால் ஒவ்வொரு மாணவருக்கு நான் தனிப்பட்ட முறையில் வழங்கும் வழிகாட்டுதலைப் பற்றி கேட்டுவிட்டு "இது உங்கள் நேரத்தை கணிசமாக எடுத்துக் கொள்ளுமே?" என்றார். உண்மை தான். ஆனால் அது எழுத்தாளராக எனக்கு பயனுள்ள நேரமே. என் வகுப்புகளில் இளம் படைப்பாளிகளுக்கு சில நேரம் அவர்களுடைய படைப்பைப் பற்றி பேசி நம்பிக்கை ஊட்ட வேண்டியிருக்கும். தயக்கத்தை களைந்து அவர்களை எழுத வைக்க பல உத்திகளை கையாள வேண்டியிருக்கும். தயக்கமின்றி எழுதும் பண்பு கொண்டோருக்கு அவர்களுடைய நாவல் பிரதியின் வடிவ நுணுக்கங்களை புரிய வைக்க நேரம் செலவிட வேண்டி வரும். இது ஒவ்வொன்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கு உத்வேகமும் ஆற்றலும் தரும். சில நேரங்களில் என்னுடைய மாணவர்களின் நாவல் பிரதியை அலசும் போது வடிவ ரீதியாக பல விசயங்களை நான் கற்றுக்கொள்கிறேன். முக்கியமாக ஒரு எழுத்தாளராக நான் தனியாக இந்த அல்லல்களை எதிர்கொள்ளவில்லை, எனக்குள்ள பிரச்சினைகள் வேறு பலருக்கும் உள்ளவை தான் என ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. இதுவே அவர்களுக்கு தேவையானது - தம் திறமை மீதான சந்தேகம், போதாமை உணர்வு, கதை நகராமல் இருப்பது, கதையில் நமபகத்தன்மை இல்லாமல் போவது, எதையெல்லாம் உள்ளே கொண்டு வருவது ஆகிய சவால்கள் அனேகமாக எல்லா படைப்பாளிகளுக்கும் உள்ளவையே. இதை உணரும் போது நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் துணிச்சமும் வரும். இது விசித்திரமானதே, ஆனால் மனிதன் ஒரு கூட்டு விலங்கு அல்லவா. எழுத்தாளர்கள் ஒரு குழுவாக இயங்கும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்துவது வரலாறு தோறும் நடந்து வந்துள்ளது. நாவல் வகுப்பு இதற்கு ஒரு நல்வாய்ப்பை அமைத்து தருகிறது. சக படைப்பாளிகளை கண்டடைந்து அவர்களுடன் உங்கள் எழுத்துப் பயணத்தை பகிர்ந்துகொள்ள முடிகிறது. கூடவே நீண்ட காலமாக எழுதி வரும்ஒ ரு வழிகாட்டியை, mentorஐயும் தருகிறது.

ஒரு வகுப்பில் இணையும் போது நீங்கள் பன்மடங்கு ஆற்றல் பெற்றவர் ஆகிறீர்கள்.
வரும் இரு மாதங்களில் நடக்கப் போகும் இணையவழி நாவல் வகுப்பில் இணையவும் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அறியவும் 9790929153 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...