அண்மையில் எழுத்தாளர் இந்திரன் அழைத்துப் பேசும் போது என்னுடைய நாவல் வகுப்பைப் பற்றியும் கேட்டார். வகுப்புக்கு அப்பால் ஒவ்வொரு மாணவருக்கு நான் தனிப்பட்ட முறையில் வழங்கும் வழிகாட்டுதலைப் பற்றி கேட்டுவிட்டு "இது உங்கள் நேரத்தை கணிசமாக எடுத்துக் கொள்ளுமே?" என்றார். உண்மை தான். ஆனால் அது எழுத்தாளராக எனக்கு பயனுள்ள நேரமே. என் வகுப்புகளில் இளம் படைப்பாளிகளுக்கு சில நேரம் அவர்களுடைய படைப்பைப் பற்றி பேசி நம்பிக்கை ஊட்ட வேண்டியிருக்கும். தயக்கத்தை களைந்து அவர்களை எழுத வைக்க பல உத்திகளை கையாள வேண்டியிருக்கும். தயக்கமின்றி எழுதும் பண்பு கொண்டோருக்கு அவர்களுடைய நாவல் பிரதியின் வடிவ நுணுக்கங்களை புரிய வைக்க நேரம் செலவிட வேண்டி வரும். இது ஒவ்வொன்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதுவதற்கு உத்வேகமும் ஆற்றலும் தரும். சில நேரங்களில் என்னுடைய மாணவர்களின் நாவல் பிரதியை அலசும் போது வடிவ ரீதியாக பல விசயங்களை நான் கற்றுக்கொள்கிறேன். முக்கியமாக ஒரு எழுத்தாளராக நான் தனியாக இந்த அல்லல்களை எதிர்கொள்ளவில்லை, எனக்குள்ள பிரச்சினைகள் வேறு பலருக்கும் உள்ளவை தான் என ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. இதுவே அவர்களுக்கு தேவையானது - தம் திறமை மீதான சந்தேகம், போதாமை உணர்வு, கதை நகராமல் இருப்பது, கதையில் நமபகத்தன்மை இல்லாமல் போவது, எதையெல்லாம் உள்ளே கொண்டு வருவது ஆகிய சவால்கள் அனேகமாக எல்லா படைப்பாளிகளுக்கும் உள்ளவையே. இதை உணரும் போது நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் துணிச்சமும் வரும். இது விசித்திரமானதே, ஆனால் மனிதன் ஒரு கூட்டு விலங்கு அல்லவா. எழுத்தாளர்கள் ஒரு குழுவாக இயங்கும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்துவது வரலாறு தோறும் நடந்து வந்துள்ளது. நாவல் வகுப்பு இதற்கு ஒரு நல்வாய்ப்பை அமைத்து தருகிறது. சக படைப்பாளிகளை கண்டடைந்து அவர்களுடன் உங்கள் எழுத்துப் பயணத்தை பகிர்ந்துகொள்ள முடிகிறது. கூடவே நீண்ட காலமாக எழுதி வரும்ஒ ரு வழிகாட்டியை, mentorஐயும் தருகிறது.
ஒரு வகுப்பில் இணையும் போது நீங்கள் பன்மடங்கு ஆற்றல் பெற்றவர் ஆகிறீர்கள்.
வரும் இரு மாதங்களில் நடக்கப் போகும் இணையவழி நாவல் வகுப்பில் இணையவும் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அறியவும் 9790929153 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
கருத்துகள்