Skip to main content

Posts

Showing posts from April, 2024

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

என்ன சத்தம் இந்த நேரம்?

காலையில் தூக்கம் கலைந்து போர்வையை முழுக்க மூடிக்கொண்டு அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். வெளியே உச்சா போய்விட்டு வந்த புத்தா (என்னுடைய காக்கர் ஸ்பானியல் நாய்) வழக்கம் போல தாவி படுக்கையில் ஏற முயன்றது. ஆனால் இம்முறை அதனால் வழியில் படுத்திருந்த என்னை சரியாக தாண்ட முடியவில்லை. விடிகாலை முழு விரைப்பு கொண்டிருந்த என் ஆண்மையில் ஒரு கால் தடுக்கிட இன்னொரு பக்கம் மென்மையான என் விதைப்பையில் காலை அழுத்திவிட்டு எப்படியோ தாவிப் போய் விட்டது (நல்லவேளை தடுக்கி விழவில்லை!). நான் வலியில் கத்த அது பதறிப் போய் திரும்ப வந்து நாம் மிதித்த இடம் எதுவென முகந்து பார்த்தது. “ஓ இதுவா, ஆமாம் அந்த வாசனை தான், ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது?” இந்த நடத்தை என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. ஒருவருக்கு வலியை ஏற்படுத்தினால் நமக்கு பிரச்சினை வரலாம் என பயந்து சுதாரிப்பது நாயின் இயல்பு. ஆனால் என்ன நடந்தது, எந்த இடத்தில் தவறு செய்வோம் என சோதிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. அதாவது காரண காரியத்தை ஆராயும் திறன் இல்லை, அது மனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஒருவருடைய காலை தெரியாமல் மிதித்தால்...

இசை அமைப்பும் இசைத்தேர்வும்

  ராம் கோபால் வர்மா ரஹ்மான் செய்யும் ‘அறிவுத் திருட்டு’ பற்றி அவரது அண்மை பேட்டியில் சொன்னது உண்மை தான் என நினைக்கிறேன். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஆர்.ஜெ.வி அதை ‘திருட்டு’ எனக் கருதவில்லை. அதை ஒரு தெளிவான கலை உருவாக்க அணுகுமுறை என்கிறார். அவர் சொல்வது படி பார்த்தால் நீண்டகாலமாகவே ரஹ்மான் இந்த பாணியைப் பின்பற்றி வந்திருக்கிறார் - இளம் பாடகர்களின் மெட்டுகளை வாங்கி, விதவிதமான இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளைப் பதிவு பண்ணி வைத்துக்கொண்டு (எல்லாருக்கும் அவரவருக்கான பரிசைக் கொடுத்துதான்) தேவைப்படும் போது அவற்றைக் கலந்து ஒரு பாடலாக்குகிறார். அதனால் தான் அவர் என் பாடல்களின் மூலத்தைத் தேடாதீர்கள் என யஷ் கய்யிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அதாவது ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல, இசை இயக்குநர். ஒரு இயக்குநர் தன் சொந்த கதையை, வசனங்களைக் கொண்டு படமெடுக்க அவசியமில்லை. இசை, நடிப்பு, அரங்கு அமைப்பு, ஒலியமைப்பு, தொகுப்பு என பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புதான் அப்படமா என்றால் முழுக்க இல்லை, அதில் இயக்குநரின் ஒருங்கிணைப்புத் திறன், வாழ்க்கைப் பார்வையும் இருக்கிறது என சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் ...

பரகலா பிரபாகரின் பேட்டி

நிர்மலா சீத்தாராமனின் கணவரும் பொருளாதார நிபுணரும்  மற்றும் எழுத்தாளருமான பரகலா பிரபாகரை கரண் தாப்பர் எடுத்த பேட்டி ரொம்ப ஜாலியாக இருந்தது. பளார் பளாரென அடிப்பதைப் போன்ற கருத்துக்கள். அவர் ஜெர்மனியில் யூதர்களுக்கு நடந்தவை இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நடக்கப் போவதாக எச்சரிக்கிறார். முதல் நிலையில் நைச்சியமாகப் பேசி வழிக்கு கொண்டு வரப்பார்ப்பது, அடுத்து தனிமைப்படுத்துவது, எச்சரிப்பது, கடைசியாக வெளியேற்றுவது. இந்த நிலைகளில் முதலிரண்டு நிலைகளில் இந்தியா இப்போது இருப்பதாக கூறுகிறார். சரியான பார்வை. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வை தான்; அவர் கவனிக்காமல் விடும் ஒன்று உண்டு  - பாஜகவின் லட்சியம் இஸ்லாமியரை ஒடுக்குவது அல்ல. அவர்களுக்கு இஸ்லாமியர் பொருட்டே அல்ல. அவர்கள் இந்து மதத்தை அரசியல்படுத்தி புறவயப்படுத்த விரும்புகிறார்கள். கடவுளைக் கொன்று அவரிடத்தில் தலைவர்களையும், மத் நம்பிக்கைகளை ஒழித்து அவற்றின் இடத்தில் தம் அரசியல் கொள்கைகளையும் கொண்டு வரப் பார்க்கிறார்கள். ஆக பாஜக முதலில் ஒழிக்க முயல்வது தீவிரமான இந்துக்களைத் தான். அவர்களின் நம்பிக்கையைத் தான். மேற்சொன்ன விசயங்களை இஸ்லாமியரோ...

கண்ணுக்குத் தெரியாத ஒன்று

பரகலா பிரபாகர் இவ்வளவு தீவிரமாக மோடியை எதிர்ப்பதும் அதற்கு சம்மந்தமே இல்லாமல் அவர் மனைவி மத்திய அமைச்சராக இருப்பதும் சாதாரண விசயம் அல்ல. அவர்கள் ஒரு உத்தமமான தம்பதியாக அல்லாத பட்சத்தில் கணவர் இவ்வளவு கடுமையாக அரசைத் தாக்கிய பின்னர் மனைவியால் அவரது முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இயலாது. அதையும் மீறி அவர்கள் கண்ணியத்துடன் பொதுவெளியில் இப்பிரச்சினையை கையாள்வதாக நான் ஆரம்பத்தில் நினைத்து சிலாகித்தேன். ஆனால் இப்போதெல்லாம் நான் யாரையும் சுலபத்தில் நம்புவதில்லை. அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பவர்களின் எல்லா பேட்டிகள், பொதுவெளி கருத்துக்களுக்கும் பின்னால் ஒரு அஜெண்டா இருக்கும். பிரபாகருக்கும் நிச்சயமாக இருந்தாக வேண்டும்? அது என்ன என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை. பரகலா பிரபாகரின் பெற்றோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிரபாகர் இளமையில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனனாமிக்ஸிலும் ஜெ.என்.யுவிலும் படித்தார், அங்கே நிர்மலா சீத்தாராமனை சந்திக்க் இருவரும் காதலித்து மணந்தார்கள்  என்றும் அறிவோம். ஆனால் இவை புறவயமான தகவல்களே. ஆனால் சுவாரஸ்யமான தகவல் அவர் 2000இன் துவ...

மதமும் சர்வாதிகாரமும் - அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு - ஆர். அபிலாஷ் (4)

ராமரைக் கொல்வது: ஒரு கட்சியின், தலைமையின் மத ஈடுபாடு, நம்பிக்கை, வழிபாட்டுப் பழக்கங்களுக்கும் ஆட்சி, சமூக வளர்ச்சி, மக்களின் சமூக அடையாளம், பாதுகாப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உதாரணமாக, ராகுல் காந்தி மக்கள் முன்னிலையில் பூஜை செய்தாலோ யோகா டெமோ நிகழ்த்தினாலோ இத்திரளுக்கு அதனால் லாபமில்லை. ஏற்கனவே அவர்கள் வீட்டிலும் தெருவிலும் நடப்பதை ஒரு தலைவர் எதற்காக ஒரு நிகழ்வாக்கிக் காட்ட வேண்டும்?   இந்துக் கோயில்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இதைக் காணும் இந்துக்களுக்கு எந்த பாதுகாப்பின்மையும் ஏற்படலாகாது. ஆனால் பெரும் பதற்றமும் பயமும் அதனாலான கசப்பும் கோபமும் தோன்றுகிறது. இதை பாஜக உருவாக்கவில்லை, ஆனால் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காகவே ஒரு கோயிலுக்குப் போவதை, பூஜை செய்வதை ஒரு மதத்தை, பக்தியைக் கடந்த ஒன்றாக மாற்றி பக்தர்களை அ-பக்தர்கள் ஆக்குகிறார்கள். இந்துக்களை அ-இந்துக்கள் ஆக்குகிறார்கள். இந்து மதத்தை கடந்து போவதே இந்துத்துவம் ஆகிறது. அதன் மூலம் இந்த தனித்து விடப்பட்ட திரள் உணர்ச்சிகரமான கனவு ஒன்றுடன் பிணைக்கப்படுகிறார்கள். கடவுள், மதம், ஆன்மீக போன்ற விழுமியங்களுக்கு, கருத்த...

மதமும் சர்வாதிகாரமும் - அந்தரங்கத்தில் இருந்து பொதுவெளிக்கு (3) - ஆர். அபிலாஷ்

திரள் மனிதனின் கடவுள்: ஆரெண்ட் தன் ஆய்வில் 19ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை ஐரோப்பாவில் தோன்றிய மக்கள் திரள் வர்க்க உணர்வையும், வளர்ச்சியையும் பாதுகாப்பையும் முக்கியமென கருதாததவர்களாக மாறியதைக் குறிப்பிடுகிறார். நீண்ட காலமாக அவர்கள் ஆட்சியாளர்களின் கவனத்தில் இல்லாமல் போனதும், அதனாலே தாம் சமூக அதிகாரம் இழந்து போனதாக ஒரு ஏமாற்றமும் கோபமும் அவர்களுக்குள் திரண்டு வெடித்ததாகவும், அதுவே சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு விசையாக அவர்களை மாற்றியது என்கிறார். இந்தியாவில் சாதியமும் நிலவுடைமை சமூகங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்ந்த காலத்தில் இந்த திரளின் குரலாக சில மேற்தட்டை சேர்ந்த ஆதிக்க சாதி தலைவர்கள் செயல்பட்டனர. உற்பத்தி முறை மாறி தொழில்மயமாக்கல் தீவிரமாக்கப்பட்ட நேருவிய யுகத்தில் தான் இங்கு மாற்றங்கள் தென்படத் துவங்குகின்றன. நேருவின் மறைவுக்குப் பின்பு இந்திரா காந்தியை சிறிது வருத்தத்துடன் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டு ஆட்சியை நடத்திய காலத்தில் இங்கு கடும் வறுமையும் பஞ்சங்களும் நிலவின. அதற்கு மழை பொய்த்தது மட்டும் காரணம் அல்ல, புதிய பொருளாதாரத்துக்கு இந்தியா...

பிளேஷ் கார்டுகளை பயன்படுத்துவது

இன்றைய நாவல் வகுப்பில் பிளாஷ் கார்ட் பயன்படுத்தி கதையமைப்பை உருவாக்க சொல்லிக்கொடுத்தேன். அதற்காக துண்டு காகிதங்களைக் கொண்டு அசோகமித்திரனின் "தண்ணீர்" நாவலின் பிரதான காட்சிகளை எழுதினேன். பக்காவாக 11 காட்சிகளில் முடிந்துவிட்டன. இவற்றின் துணைக்காட்சிகளும் விவணைகள், சம்பாஷணைகளுமே மொத்த நாவல். அசோகமித்திரனின் நாவல்கள் கச்சிதமாக இருக்க காரணம் அடிப்படைக் காட்சிகளை குறைவாக வைத்துக் கொள்வதுதான். இன்னொரு சுவாரஸ்யம் கடைசி காட்சியை அவர் தேர்தெடுத்தது. அதற்க்ய் என்றே ஒரு தனி அர்த்தம். நம்மில் பெரும்பாலானோர் சாயாவின் வாழ்வில் வரும் மாற்றம், வறட்சியின், தண்ணீர் பற்றாக்குறையின் முடிவையே கிளைமேக்சாக வைத்திருப்போம். ஆனால் அசோகமித்திரன் வில்லன் பாத்திரத்தின் கார் சேற்றில் சிக்கிக் கொள்வதை வைத்தார். (பார்க்க ஸ்கிரீன்ஷாட்) இந்த காட்சிகளின் அடுக்கை மாற்றினாலே கதையின் அர்த்தம் மாறிவிடும். இதைப் பற்றியும் வகுப்பில் பேசினேன்

12த் பெயில்

    அதில் என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிறைய காட்சிகள் இருந்தன . ஆனால் படம் முடியும் போது அது வாழ்க்கையைப் பற்றியோ விழுமியங்களைப் பற்றியோ ஒன்றுமே சொல்வதில்லை . ஐ . பி . எஸ் தேர்வில் வெல்வது எவ்வளவு கடினம் , அதற்கு எத்தனை பேர்கள் முயல்கிறார்கள் என சொல்ல பத்து நிமிடம் போதுமே . அப்புறம் எனக்கு வேறொரு கேள்வியும் எழுந்தது - இவ்வளவு பயங்கரமான ஐ . பி . எஸ் தேர்வில் எப்படி அண்ணாமலை - சின்ன வரலாற்றுத் தகவல் கூட தெரியாமல் மேடைகளில் தவறாகப் பேசும் அண்ணாமலை - எப்படி வென்றார் ? அவரே ஜெயிக்க முடியுமெனில் பத்து லட்சம் பேர்களில் இருபது பேர்கள் மட்டுமே ஜெயிக்க முடிகிற தேர்வு என ஏன் இந்த படத்தில் சொல்கிறார்கள் ? மிகத்தீவிரமான ஒழுக்கமும் ஊக்கமும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார்கள் . ஆனால் சில நேர்முகங்களில் அண்ணாமலை பற்றி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்   சொல்லும் விபரங்கள் வித்தியாசமாக உள்ளன - அவர் பகலில் தூங்கி எழுவதே மாலை மூன்று மணிக்குத் தான் . இரவில் போதை காளானை எடுத்துக்கொள்கிறார் . இப்பழக...