முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசை அமைப்பும் இசைத்தேர்வும்

 


ராம் கோபால் வர்மா ரஹ்மான் செய்யும் ‘அறிவுத் திருட்டு’ பற்றி அவரது அண்மை பேட்டியில் சொன்னது உண்மை தான் என நினைக்கிறேன். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஆர்.ஜெ.வி அதை ‘திருட்டு’ எனக் கருதவில்லை. அதை ஒரு தெளிவான கலை உருவாக்க அணுகுமுறை என்கிறார். அவர் சொல்வது படி பார்த்தால் நீண்டகாலமாகவே ரஹ்மான் இந்த பாணியைப் பின்பற்றி வந்திருக்கிறார் - இளம் பாடகர்களின் மெட்டுகளை வாங்கி, விதவிதமான இசைக்கலைஞர்களின் இசைக்கோவைகளைப் பதிவு பண்ணி வைத்துக்கொண்டு (எல்லாருக்கும் அவரவருக்கான பரிசைக் கொடுத்துதான்) தேவைப்படும் போது அவற்றைக் கலந்து ஒரு பாடலாக்குகிறார். அதனால் தான் அவர் என் பாடல்களின் மூலத்தைத் தேடாதீர்கள் என யஷ் கய்யிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அதாவது ரஹ்மான் இசையமைப்பாளர் அல்ல, இசை இயக்குநர். ஒரு இயக்குநர் தன் சொந்த கதையை, வசனங்களைக் கொண்டு படமெடுக்க அவசியமில்லை. இசை, நடிப்பு, அரங்கு அமைப்பு, ஒலியமைப்பு, தொகுப்பு என பல்வேறு கலைஞர்களின் பங்களிப்புதான் அப்படமா என்றால் முழுக்க இல்லை, அதில் இயக்குநரின் ஒருங்கிணைப்புத் திறன், வாழ்க்கைப் பார்வையும் இருக்கிறது என சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் ரஹ்மான் செய்வதாக ஆர்.ஜெ.வி சொல்கிறார். ஆர்.ஜெ.வி இதை தரிசனம் என்றல்ல, ‘தேர்வு’ என்கிறார்.

இதுவே ரஹ்மானை 'வெற்றிகரமான இசையமைப்பாளர்’ ஆக்கியது. ஏனெனில் அவர் இசையை உருவாக்கவில்லை, தேர்வு செய்து தன் ரசனைப்படி தொகுத்து வடிவமைப்பதே அவர் செய்வது. அதனாலே வேறு யாரிடமும் இல்லாத ஒரு எதிர்பாராத இசைத்தன்மை, வேறுபட்ட வகைமைகள், ஒலிகள் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. அவருடைய ரசனையின் சாயலே அவரது இசையில் வெளிப்படும் சாயல். அந்த கலவையின் நீட்சியே அவரது ஆளுமை. அவர் இசையமைப்பதைப் பற்றி சொல்லும் பாடகர்கள் அவர் ஒரு அடிப்படையான மெட்டைக் கொடுத்து அதை தமது பாணியில் பாடச்சொல்லி பதிவு பண்ணி அதில் இருந்து சில பகுதிகளை வெட்டியெடுத்து இசைக்கோவையுடன் ஒரு பாடலாக்கி விடுவார் என சொல்வார்கள். பாடகர்களின் படைப்பாக்கத்தையும் தன் மெட்டுக்காக அவர் பயன்படுத்துவதால் அவரது இசை அவ்வளவு புதுமையாக இருக்கிறது. மேலும், சில நாட்டார் பாடகர்களும், வித்தியாசமான இசைக்கருவியை இசைக்கும் நாட்டுப்புற கலைஞர்களும் அவரது ஸ்டுடியோவை நாடிச்சென்று இசைத்து பணம் வாங்கிப் போவார்கள், அதை ரஹ்மான் பதிவு பண்ணி தன் ஆர்க்கைவ்வில் வைத்துக்கொள்வார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதர் தனது படைப்பாக்கத் திறன், அனுபவம், அறிவைக் கொண்டு இதை செய்வதானால் இவ்வளவு பன்முகத்தன்மை, மாறுபட்ட வகைமைகள் அவரது இசையில் வரவே முடியாது. ரஹ்மானுக்குப் பின் வந்தவர்கள் சர்வதேச இசைக்கலைஞர்களின் உரிமம் பெற்று மெட்டையும் கோவைகளையும் பெற்று தம் பாடல்களில் பயன்படுத்துவதாக கேபிள் சங்கர் சொல்கிறார். நாம் வழமையான இசையமைப்பாளர்களிடம் உள்ள அசலான படைப்பாக்கத்தை, சுயத்தை ரஹ்மானிடம் தேடக் கூடாது. ரஹ்மான் ஒரு ஒரிஜினல் இசை சாட் ஜி.பி.டி. இசையில் சாட் ஜி.பி.டியின் முன்னோடி அவர் தான். இதை நான் கிண்டலாக சொல்லவில்லை. இதை அவர் தெரிந்தே தெளிவாக யோசித்தே செய்திருக்கிறார் - தன் திறமையென்ன, தன் சாதனை என்ன என்று அவருக்குத் தெரியும். தமிழில் யாரும் இதை யோசிக்காத காலத்தில் செய்து இந்திய அளவுக்கு தமிழ் திரைப்பட இசையை அவர் புகழடைய செய்தார். இதுவும் ஒரு தனித்திறன் தானே. அவரால் மற்ற இசையமைப்பாளர்களைப் போல மெட்டமைக்க முடியாது. ஆனால் அவருக்கு முடிகிற ஒன்று ராஜாவுக்கும் தானே முடியாது. ராஜா ஒரு படைப்பாளி எனில் இவர் ஒருவித இசைப்பொறியியலாளர். அவர் மனிதர், இவர் மனித உருவிலான சாட் ஜி.பி.டி.
இன்னொரு விசயம் - வேறு இசையமைப்பாளர்களும் மெட்டைத் திருடியிருக்கிறார்கள். ரஹ்மான் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார் என்பதே வித்தியாசம்.
ஒரே பிரச்சினை மெட்டுக்கான அங்கீகாரத்தை அவர் இந்த பாடகர்களுக்கும், கலைஞர்களுக்கும் கொடுக்கவில்லை என்பதே. அப்படி கொடுத்திருந்தாலும் என்ன ஆகியிருக்கும்? “ஜெய் ஹோவின்” மெட்டு சுக்வீந்தருடையது என்பதால் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கிடைத்திருக்காது. ஆனால் ரசிகர்கள் அவரை என்றும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அவர் மீதான வியப்பு சற்று குறைந்திருக்கும், ஆனால் பிராண்ட் மதிப்பு இருந்திருக்கும். ஒருவேளை அதை செய்யும் துணிச்சல் ரஹ்மானுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். சினிமாவுக்குள் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று, ஊடகவியலாளர்கள் பேசத் தலைப்படாத ஒன்று நமக்கு மட்டும் தெரியவில்லை. நஸ்ரீன் முன்னி கபீர் தான் எழுதிய AR Rahman: The Spirit of Music நூலிலும் சொல்லவில்லை. ஆஸ்கார் குழுவினருக்கும் தெரிய வருகிறது. இப்போது ஒரு காணொளி வழியாக தெரிய வந்திருக்கிறது.

பி.கு: சுக்வீந்தர் சிங்கை வைத்து இப்போது மறுப்பு வெளியிட்டிருப்பதும் ஒருவித பி.ஆர் வேலையாகவே தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...