முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்ன சத்தம் இந்த நேரம்?


காலையில் தூக்கம் கலைந்து போர்வையை முழுக்க மூடிக்கொண்டு அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். வெளியே உச்சா போய்விட்டு வந்த புத்தா (என்னுடைய காக்கர் ஸ்பானியல் நாய்) வழக்கம் போல தாவி படுக்கையில் ஏற முயன்றது. ஆனால் இம்முறை அதனால் வழியில் படுத்திருந்த என்னை சரியாக தாண்ட முடியவில்லை. விடிகாலை முழு விரைப்பு கொண்டிருந்த என் ஆண்மையில் ஒரு கால் தடுக்கிட இன்னொரு பக்கம் மென்மையான என் விதைப்பையில் காலை அழுத்திவிட்டு எப்படியோ தாவிப் போய் விட்டது (நல்லவேளை தடுக்கி விழவில்லை!). நான் வலியில் கத்த அது பதறிப் போய் திரும்ப வந்து நாம் மிதித்த இடம் எதுவென முகந்து பார்த்தது. “ஓ இதுவா, ஆமாம் அந்த வாசனை தான், ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது?” இந்த நடத்தை என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. ஒருவருக்கு வலியை ஏற்படுத்தினால் நமக்கு பிரச்சினை வரலாம் என பயந்து சுதாரிப்பது நாயின் இயல்பு. ஆனால் என்ன நடந்தது, எந்த இடத்தில் தவறு செய்வோம் என சோதிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. அதாவது காரண காரியத்தை ஆராயும் திறன் இல்லை, அது மனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். உதாரணமாக ஒருவருடைய காலை தெரியாமல் மிதித்தால் அவர் கத்தும் போது அவர் கத்துகிறார் என்றல்ல அவரை கத்த வைத்துவிட்டோம் என்றும், எதனால் அவர் கத்துகிறார், எந்த இடத்தில் மிதித்தோம் என்றும் நம் மூளை பரிசீலிக்கும். காலை உடனடியாகப் பார்ப்போம். சாலையில் வாகனத்தை கொண்டு மோதும் போதும் நம் கண்கள் மோதப்பட்ட இடத்தைப் பார்க்கும். மனதுக்குள் எதையாவது மறைத்து வைத்துப் பேசும் போது கைகளை பாக்கெட்டிலோ மேஜைக்கு கீழே வைத்துக் கொள்வோம். எட்ஜ் கொடுத்து ஸ்லிப்பில் கேட்ச் பிடித்ததும் மட்டையாளர் தன் மட்டையின் விளிம்பைப் பார்ப்பார். காரணியை அறியவோ மறைக்கவோ முயல்வோம்.
இதைப் புரிந்துகொள்ள முடியுமெனில் இந்த நாய்க்கு வேறென்னெல்லாம் தெரியும் என வியப்பு ஏற்படுகிறது. பேசத் தெரியாது என்பதால் என்னைப் பற்றி ஏகப்பட்ட உண்மைகளை மனசுக்குள் வைத்தபடி அமுக்குணி போல் இருக்கிறது என நினைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.