முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பஞ்சுமிட்டாய் படங்கள்



ஒன்றுமே இல்லாமல் கதையை சுற்றி சுற்றி சுவாரஸ்யமாகப் பின்னி நம்மை ஏமாற்றி அமர வைக்கிற ஜேப்படி வித்தைப் போக்கு ஓ.டி.டிகளின் வருகைக்குப் பின் உருவாகியுள்ளது. படத்தை பார்த்து முடித்த பின்னர் இது என்னடா கதை, ஒன்றுமே இல்லையே, இதையா சுவாரஸ்யமாகப் பார்த்தோம் என்று தோன்றும். இத்தகைய படங்களில் ஒரு பாத்திரத்தின் சவால்கள், அவற்றை அவர் எதிர்கொண்டு வரும் விதங்களில் எந்த படிப்பினையும், விழுமியமும் இருக்காது. உ.தா., ஒருவர் தன் வீட்டுக்கொல்லையில் வந்தமரும் காக்காயைப் பிடிக்க முயன்று குளம் குட்டையில் விழுந்து தன் நண்பர்களையும் கூட அழைத்துக்கொண்டு மேலும் முயன்று நிறைய வேடிக்கைகள் நிகழ்வதாக ஒரு கதையை எழுதலாம். ஏன் அவர் காக்காயைப் பிடிக்க வேண்டும், அதனால் அவர் பெறுவதென்ன எனும் கேள்விகளுக்கு பதில் இருக்காது. இதை செவ்வனே பயன்படுத்தி நம்மை ஏமாற்றுகிறவர்கள் இந்தி மற்றும் மலையாளப் பட இயக்குநர்களே. இதை பஞ்சு மிட்டாயை சாப்பிடுவதுடன் ஒப்பிடலாம். இப்படங்கள் வழக்கமான வணிகப் படங்கள் அல்ல - வணிகப்படங்களிலும் சில மதிப்பீடுகள் குறித்த கவலைகள், கோபம் அடிப்படையாக இருக்கும். ஒரு பாத்திரத்தின் மாற்றங்களைக் காட்டுவார்கள். கதையென எதுவோ ஒன்று இருக்கும். இப்படங்களோ உள்ளே ஒன்றுமில்லாமல் நம்மை ஏமாற்றுகின்றன.
அண்மையில் நான் பார்த்த “பிரேமலு” அப்படித்தான் இருந்தது.

நாயகனுக்கு வேலையும் காதலியும் வேண்டும். அவனுக்கு படம் முடியும் போது வரை அவனுக்கு நல்ல வேலை கிடைக்காது. ஆனால் காதலி கிடைப்பாள். அதற்கு அவன் எந்த பிரயத்தனமும் செய்வதில்லை. அப்பெண்ணுக்கு அவனைப் பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. அவனுடைய ஒரே வேலை அவளை அதை ஒப்புக்கொள்ள வைப்பதுதான். இத்தகைய படங்களை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் - ஆனால் அப்படங்கள் அப்படி தன் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போது அப்பெண் சற்றே மாறியிருப்பாள். இதில் அவள் கடைசி வரை அப்படித்தான் இருக்கிறாள் - அவளுடைய ஈகோ, பிடிவாதம் எதுவும் மாறுவதில்லை; அவளது முடிவு மட்டுமே மாறுகிறது. நாயகனும் அப்படித்தான் - அவனும் கிளைமேக்ஸிலும் அப்படியே தான் இருக்கிறான். எல்லாம் வெறும் விளையாட்டாக முடிகிறது.

“12த் பெயில்” இந்திப்படமும் இப்படித்தான். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...