முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்மூர் தவளைகள்



வர்ணனையாளர்களில் தமிழ்நாட்டு முன்னாள் வீரர்களும் சரி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்து வெவ்வேறு அணிகளில் பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்களும் சரி தவறாமல் சில வீரர்களை ஒருபக்க சார்பாக விமர்சிக்கிறார்கள். அதுவும் தமிழ் வர்ணனை ஆரம்பித்த காலத்தில் இருந்தே பார்க்கிறேன் - சஞ்சு சாம்ஸன் தொடர்ச்சியாக தன் அணிக்காக அனேகமாக எல்லா பருவங்களிலும் ரன் அடித்தாலும், ஆட்டங்களையும் தனியாக வென்றளித்தாலும் அவரைப் பாராட்ட இவர்களுக்கு மனமே வராது. அவர் மீது கடுமையான காழ்ப்புணர்வு இவர்களிடையே உள்ளது. தமிழக வீரர்களில் தினேஷ் கார்த்திக்கையும் சுலபத்தில் பாராட்ட மாட்டார்கள். ஆனால் விஜய் சங்கரையும் அஷ்வினையும் விழுந்து புரண்டு பாராட்டுவார்கள். சங்கரா கமான், கமான் என்று வடிவேலுவை போல இரு கைகளையும் அசைத்து கூப்பிடுவார்கள். வெங்கடேஷ் ஐயரையும் தவறாமல் பாராட்டுவார்கள். இந்த மூன்று வீரர்களும் ஒரு சில பருவங்களைத் தவிர பிற போட்டிகளில் சோபிக்காதவர்கள். ஐ.பி.எல் ஏலத்தில் பெரிதாக கவனம் பெறாதவர்கள். இந்த பாகுபாடான மனநிலையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அணி விசயத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் - காலங்காலமாக கோப்பை வெல்லாத பெங்களூரையும் அண்மையில் மோசமாக ஆடி வரும் மும்பையையும் பாராட்டிக் கொண்டு இருப்பார்கள். சன் ரைஸர்கள் சொதப்பினாலும் பாராட்டுவார்கள். சென்னை தோற்றாலும் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். தோனி வந்ததும் அவுட் ஆனாலும் ‘செம ஷாட் அடிச்சு அவுட் ஆனார்’ என மெய்சிலிப்பார்கள். வேறு அணிகளை துளியும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இவ்வளவு வெறுப்பு இருப்பதனால் தான் முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டு அணியால் ஒரு போதும் ரஞ்சித்தொடரில் கோப்பை வெல்ல முடியவில்லை என நினைக்கிறேன். கடந்த ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டு அணி தோற்ற பிறகு அணித்தலைவரை ஒரு பக்கம் மும்பையில் இருந்து வந்த பயிற்சியாளர் சுலேக்ஷன் குல்கர்னி மீடியாவில் ரோஸ்ட் பண்ணினார், முன்னாள் தமிழக பயிற்சியாளர்கள் அணித்தலைவரை ஆதரித்து பயிற்சியாளரை ரோஸ்ட் பண்ணினார்கள். தமிழ்நாட்டு அணித்தலைவர் யார் சொல்லையும் கேட்காமல் தற்குறியாக இருப்பவர், அவருக்கு கீழ் ஆடியவர்களும் அப்படித்தான். அவர்களைக் கொண்டு கடைசி வரை கூட்டி வந்ததே பெரிய விசயம். கடைசியில் பயிற்சியாளரை ராஜினாமா பண்ண வைத்தார்கள்.
இவர்களைக் கட்டுப்படுத்தி ஆட வைக்க நீங்கள் இவர்களை விட உச்சபட்ச அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். மோசமான பண்பாடு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...