முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகனை விட அஜிதன் ஏன் மேலான எழுத்தாளர்?



கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார்ந்ததாக மாறிவிட்டது. ஏதோ கவிதையில் தான் இன்றும் மெய்யியல் கொஞ்சமாவது மீதமிருக்கிறது. அஜிதன் அதைப் புனைவெழுத்தில் மீட்க முயல்வது பாராட்டத்தக்கது. அதனாலே நான் அவர் தன் தந்தையை விட மேலான படைப்பாளி என நினைக்கிறேன். ஒரே பிரச்சினை அவர் தன் தந்தையின் மொழியை போலச் செய்ய முயல்கிறார் என்பது. (நான் சொல்லும் இந்த விசயத்தை கூட அவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் மறுக்கவே செய்வார் என்றே நம்புகிறேன்.) இந்த உளவியல் தடையை மீறிவிட்டால் சிறந்த படைப்பாளி ஆகிவிடுவார். அவரது அத்வைதத்துடன், கடப்புநிலைவாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தை என்னால் ரசிக்க முடிகிறது, நான் நாவல் எழுதும் போது அது ஒரு தாக்கத்தை செலுத்துவதை உணர்ந்தேன். ஜெயமோகனின் எழுத்து இதை எனக்கு செய்ததில்லை. அவரது சொல்லாட்சி, நடை நினைவிருக்கும், நாடகீயமான காட்சிகள், கவித்துவமான பிம்பங்கள் நினைவிருக்கும், ஆனால் அதைக் கடந்து அவரது ஆன்மா என்னுடன் நான் எழுதும் போது இருப்பதில்லை. அதனாலே ஜெயமோகனால் தூண்டுதல் பெற்று ஒரு புதிய புனைவை நம்மால் எழுத முடிவதில்லை, அப்படி செய்கிறவர்களும் அவரது நடையை மட்டுமே பிரதியெடுக்கிறார்கள். இது சுந்தரராமசாமியிடமும் இருந்த நெருக்கடிதான், இப்போது யோசிக்கையில் ஜெயமோகன் சு.ராவின் நீட்சியே எனத் தோன்றுகிறது. இருவரிடமும் புறத்தை தாண்டி மீயுலகம் ('அகம்', 'மீபொருண்மையான இருத்தல்') என ஒன்று இல்லை. அந்த புறம் மிக அழகானது, பல நுட்பங்கள், வசீகரங்கள் நிறைந்தது, ஆனால் பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போவதைப் போல அது மண்ணிலே இருக்கிறது, பறந்தெழுவதில்லை.
பி.கு: இதை நான் ஜெயமோகன் மீதான கோபத்தில் சொல்லவில்லை. (கோபப்படுவதற்கு அவரிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.) இது ஒரு விமர்சனக் கருத்து, வாசக அவதானிப்பு மட்டுமே.

கருத்துகள்

neduchezhiyan இவ்வாறு கூறியுள்ளார்…
யதார்த்த வாதம் என்பது ஒரு நோயா ? எழுத்தாளர்களை பற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொல்ல.... எழுத்திற்கு fact and fiction எல்லாம் கிடையாது ! Facr is also a figment of imagination which is seen as magical realism but fact is also a fictional perse .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...