முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகனை விட அஜிதன் ஏன் மேலான எழுத்தாளர்?



கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார்ந்ததாக மாறிவிட்டது. ஏதோ கவிதையில் தான் இன்றும் மெய்யியல் கொஞ்சமாவது மீதமிருக்கிறது. அஜிதன் அதைப் புனைவெழுத்தில் மீட்க முயல்வது பாராட்டத்தக்கது. அதனாலே நான் அவர் தன் தந்தையை விட மேலான படைப்பாளி என நினைக்கிறேன். ஒரே பிரச்சினை அவர் தன் தந்தையின் மொழியை போலச் செய்ய முயல்கிறார் என்பது. (நான் சொல்லும் இந்த விசயத்தை கூட அவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் மறுக்கவே செய்வார் என்றே நம்புகிறேன்.) இந்த உளவியல் தடையை மீறிவிட்டால் சிறந்த படைப்பாளி ஆகிவிடுவார். அவரது அத்வைதத்துடன், கடப்புநிலைவாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தை என்னால் ரசிக்க முடிகிறது, நான் நாவல் எழுதும் போது அது ஒரு தாக்கத்தை செலுத்துவதை உணர்ந்தேன். ஜெயமோகனின் எழுத்து இதை எனக்கு செய்ததில்லை. அவரது சொல்லாட்சி, நடை நினைவிருக்கும், நாடகீயமான காட்சிகள், கவித்துவமான பிம்பங்கள் நினைவிருக்கும், ஆனால் அதைக் கடந்து அவரது ஆன்மா என்னுடன் நான் எழுதும் போது இருப்பதில்லை. அதனாலே ஜெயமோகனால் தூண்டுதல் பெற்று ஒரு புதிய புனைவை நம்மால் எழுத முடிவதில்லை, அப்படி செய்கிறவர்களும் அவரது நடையை மட்டுமே பிரதியெடுக்கிறார்கள். இது சுந்தரராமசாமியிடமும் இருந்த நெருக்கடிதான், இப்போது யோசிக்கையில் ஜெயமோகன் சு.ராவின் நீட்சியே எனத் தோன்றுகிறது. இருவரிடமும் புறத்தை தாண்டி மீயுலகம் ('அகம்', 'மீபொருண்மையான இருத்தல்') என ஒன்று இல்லை. அந்த புறம் மிக அழகானது, பல நுட்பங்கள், வசீகரங்கள் நிறைந்தது, ஆனால் பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போவதைப் போல அது மண்ணிலே இருக்கிறது, பறந்தெழுவதில்லை.
பி.கு: இதை நான் ஜெயமோகன் மீதான கோபத்தில் சொல்லவில்லை. (கோபப்படுவதற்கு அவரிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.) இது ஒரு விமர்சனக் கருத்து, வாசக அவதானிப்பு மட்டுமே.

கருத்துகள்

neduchezhiyan இவ்வாறு கூறியுள்ளார்…
யதார்த்த வாதம் என்பது ஒரு நோயா ? எழுத்தாளர்களை பற்றிக் கொண்டு இருக்கிறது என்று சொல்ல.... எழுத்திற்கு fact and fiction எல்லாம் கிடையாது ! Facr is also a figment of imagination which is seen as magical realism but fact is also a fictional perse .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.