முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் 'வினோத' ஏக்கங்கள்




நான் கடந்த இரு ஆண்டுகளாக குத்துச்சண்டை பயில்கிறேன். ஆனால் ஒரு அமெச்சூர் கிளப் போட்டியில் என்னால் இத்தனை நாட்களாகப் பங்கேற்க முடியவில்லை. ஏனென்றால் இங்கு சக்கரநாற்காலி குத்துச்சண்டைப் போட்டிகளே இல்லை. கிரிக்கெட், பென்ஸிங் போன்ற மிகச்சில போட்டிகள் மட்டுமே ஆண்டுக்கொரு முறைமுறை அங்கங்கே நடக்கின்றன. பவர் லிப்டிங்கில் கூட நிறைய வாய்ப்புகள் உளன. ஆனால் குத்துச்சண்டைக்கு இடமேயில்லை. நான் இதை இன்று கர்நாடக அமெச்சூர் குத்துச்சண்டை அமைப்பின் செயலரிடம் விசாரித்து உறுதிசெய்தேன். ஆக நான் வெறுமனே குத்தும்பையில் பயிலலாம், ஸ்பாரிங் பண்ணலாம். ஆனால் ஒருபோட்டி வாய்ப்புகூட கிடைக்காது.
நான் நேற்று ஒரு கிளப் அளவிலான போட்டித்தொடரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு பக்கம் அப்போட்டிகளைப் பார்க்க ஜாலியாக இருந்தாலும் வெளியே வந்ததும் என்னையும் அவர்களையும் ஒப்பிட்டு மனம் துவண்டுவிட்டது. சுத்தமாகப் பயிற்சியே இல்லாதவர்கள், ஒழுங்காக ஒரு குத்துவிட முடியாதவர்கள் கூட ஆடினார்கள். பத்து வினாடி கூட தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் கூட ஆடினார்கள். சுமாராக ஆடுபவர்கள் கூட எதிராளியின் திறமைமையின்மையைக் கொண்டு வென்றார்கள். ஒருவரை நான் ஸ்பாரிங்கில் முறியடித்திருக்கிறேன். ரொம்ப நல்ல நண்பர். அவருக்கே ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, எனக்கு கிடைக்கவில்லை, என்னைப் போன்றவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்போ, ஏற்பாடோ இல்லையெனப் பார்த்தபோது மனம் கசந்துவிட்டது. இயல்புடலாளர்களுக்கு எந்த அடிப்படைத் தகுதியில்லாதபோதே கிடைக்கும், மிக சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக என்னைப் போன்றவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும். அதன்பிறகு அது வெறும் கனவாகவே முடியும்.
நான் இதைச் சொல்லும்போதே எவ்வளவு அபத்தமாகப் பிறருக்குப் படும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். உலக அளவிலேயே எந்த எழுத்தாளரும் இப்படியொரு விசயத்துக்காக வருத்தப்பட்டுப் புலம்பியிருக்க மாட்டார்கள். மேலும், இயல்புடலாளர்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாடின்மையுடன் ஒப்பிடலாகாது என்பதையும் அறிவேன். ஆனால் வருத்தமும் கோபமும் மேலிடும் போது இந்த பகுத்தறிவு வேலை செய்யாது. அவருக்கு எளிதில் கிடைப்பது, கேட்காமலே கிடைப்பது, விரும்பாமலே கிடைப்பது கேட்கிற, விரும்புகிற, உழைக்கிற எனக்குக் கிடைக்கவில்லையே என்றே முதலில் யோசிக்கத் தோன்றுகிறது. நான் இப்படியெல்லாம் நினைப்பேன் என்று தெரிந்துதானோ என் மனம் இத்தனை ஆண்டுகளாக இத்தகைய விசயங்கள் பக்கம் ஆர்வம் கொள்ளாமல் எழுத்து வாசிப்பு என்றே இருந்துவிட்டதோ? என் எழுத்து லௌகீக உலகின் போதாமைகள் குறித்த ஏமாற்றங்களிலிருந்து என் தற்பாதுகாப்பு நடவடிக்கையோ?
எனக்கே இத்தகைய ஆசைகள் சில வருடங்களுக்கு முன்பு இல்லை. குத்துச்சண்டை மீதுள்ள ஆசையினாலே நான் பயிற்சியெடுக்கத் தொடங்கினேன். ஆனால் திடீரென்று போட்டியில் பங்கேற்கவேண்டும் என ஆசை ஒருநாள் தோன்றியது. ஆசை எப்போது ஏன் வருகிறது என்று யாராலும் சொல்லமுடியாது என நினைக்கிறேன். அதற்கு இடமிருக்கிறதா என்று கூட யோசிக்கமுடியாது. ஆசை நம்மை ஆட்கொண்டுவிடும், கூடவே ஏமாற்றமும் வருத்தமும் அழையா விருந்தாளியாக வரும்.
எனக்கு இன்னும் சில இலக்குகள் உள்ளன - இன்னும் தோள்வலிமையை அதிகரிக்கவேண்டும், தடுப்பாட்டத்தைக் கற்க வேண்டும், 5-10-15 நிமிடங்கள் என நான் ஆட்டத்தில் தாக்குப்பிடிக்கும் நேரத்தை பயிற்சிமூலம் அதிகரிக்க வேண்டும். அதன்பிறகு என்னால் எந்த போட்டி வாய்ப்புமின்றி தொடர்ந்து இதிலேயே இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை. நல்லவேளை எனக்கு இலக்கியம் என ஒரு துறை இருக்கிறது என்று நிம்மதியாக இருக்கிறது. எனக்கு அதில் சற்று ஆறுதலும் முழுமையாக சமமாகப் பங்கேற்பு வாய்ப்பும் எப்போதும் உண்டு.
நேற்றைய போட்டிகளில் பதக்கங்களை வென்ற என் நண்பர்களுக்கு இப்போதைக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...