"நிழல் பொம்மையை" அதன் கரட்டு வடிவத்தில் படித்து தம் நுட்பமான அறிவார்ந்த கருத்துக்களைச் சொல்லிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகத்துக்கும், எழுத்தாளர்கள் தயா ஜிக்கும் பாலுவுக்கும் விஜயலட்சுமிக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாசக நண்பர் பா. கணேஷ் இந்நாவலைப் படிக்கப்படிக்க வாட்ஸாப்பில் குறிப்புகளாக அனுப்பிக்கொண்டிருந்தார். போனில் விவாதித்தார். நாவலில் முக்கியமான திருத்தங்களை செய்ய உதவினார். அவருக்கு என் அன்பு. விமர்சகர் நா. முருகேச பாண்டியன் இந்நாவலை நுணுக்கமாகப் படித்து செம்மைப்படுத்தித் தந்தார். அவர் இதற்காக செலுத்திய உழைப்பு அபாரமானது. அவரது பங்களிப்பை வணங்குகிறேன். அவர் நாவலைப் படித்து முடித்ததும் என்னைப் போனில் அழைத்து தொடர்ந்து ஒரு மணிநேரமாக உணர்ச்சிகரமாக உரையாடினார். அந்த மாலைப்பொழுதை என்னால் மறக்கவே முடியாது. அவரது சொற்களும் கருத்துக்களும் முக்கியமானவை என்றாலும், அவரால் படித்து முடித்ததும் தன் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே எனக்குப் பெரும் உவகையை அளித்தது. தஸ்னீம் நசீர் நாவலைக் குறித்த தன் நுட்பமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர்களுக்கு என் பிரியத்தையும் ஆழமான நன்றியையும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கருத்துகள்