அதிகாரம் எப்போதும் நம்மை அகத்துள்ளே வேட்டையாடவே உத்தேசிக்கிறது, அதன் நோக்கம் நம்மை அதன் முகவராக மாற்றுவதுதான்; சட்டவிதிகளும் நடைமுறைகளும் அதிகார வர்க்க கேள்விகளும் சந்தேகங்களும் குறுக்கீடுகளும் கடைசியில் நம்மையும் அவர்களைப்போல மாற்றுகின்றன. ஆனால் நான் ரகுவின் பார்வையிலிருந்து சிந்திக்கையில் அவன் ஒரேசமயத்தில் தந்திரமாகவும் களங்கமற்றவனாகவும் மாறவே வாய்ப்பதிகம் எனத் தோன்றியது. “விசாரணையின்” ‘கே’வைப் போலவே ரகுவும் தண்டனையிலிருந்து தப்பிக்க குற்றத்தை தவிர்க்காமல் தண்டனையின்பொருட்டு குற்றத்தை நாடுகிறான்; எப்போதென்றே தெரியாமல் ஆரம்பிக்கும் விசாரணைக்குள் நாம் எப்போதும்தானே இருக்கிறோம். அது ரகு முற்றதிகாரத்தை முதன்முதலின் எதிர்கொள்ளும் தருணமாக இருக்கலாம். அப்போதிலிருந்தே அவனது சுபாவம் மாறத் துவங்குகிறது. அவனே குற்றமிழைப்பவனாகவும் விசாரணையாளனாகவும் தனக்குள்ளேயே பதுங்கியிருக்கிறான் என்பதை மட்டுமே நான் காப்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டேன். காப்காவுக்கு இறைவன் யார், இருண்ட உலகில் அவர் எங்கிருக்கிறார், அவருக்கான தேடல் எப்படி இன்மையையும் கைவிடப்படுதலையும் நோக்கி இட்டுச்செல்கிறது என்பவை முக்கியமான கேள்விகள். அவரது “விசாரணையில்” யாருக்கும் யாருமில்லாத இருண்ட உலகில் அகவிசாரணை புறவிசாரணையாகி பெரும் சிக்கலாக திடீர் மரணத் தண்டனையுடன் முடியும். மரணம் அங்கே கடவுளுக்கான குறியீடு. ஆனால் எனக்கு இந்த குறிப்பிட்ட கதையுலகில் அப்படியொன்று நிகழமுடியாது, மரணத்துடன் சட்டென கைகுலுக்குவதல்ல, மரணத்துடன் சமரசம் பண்ணியபடி அதை ஏமாற்றிவிட்டதாக நம்புவதும், சின்னச்சின்ன மரணங்களை அன்றாடத்தின் இருத்தலில் உணர்வதுமே இன்றைய உலகம் என்று தோன்றியது. ஆகையால் கதையின் முடிவெனும் ‘தூக்குக்கயிற்றின்’ சுருக்கை திறந்தநிலையிலே விட்டுவிட்டேன்.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கருத்துகள்