Skip to main content

நாக்கைக் குறித்த ஒரு புனைகதை


 
நண்பர்: நீங்க என்னதான் சொல்லுங்க பாஸ் விஷ்ணுபுரம் கட்சியைப் போல வராது.

நான்: ஏன் பாஸ்?

நண்பர்: ஐந்து பேர் நாவல் எழுதுகிறார்கள் என்றால் சுலபத்தில் தலா நான்கு விமர்சனங்கள் உடனடியாக வந்துவிடும்.

நான்: அதான் எப்படி? ஒரு மதிப்புரை வாங்கவே நிறைய காத்திருக்க வேண்டியிருக்கே...

நண்பர்: அவங்களே மாறி மாறி எழுதிப்பாங்க. உலகத்தரம்னு சொல்லுவாங்க. நீங்க யாரைப் பத்தியாவது அப்படிச் சொல்லுவீங்களா? உங்களுக்கு பிரண்டா இருக்கிறது வேஸ்டு.

நான்: அதுக்காக ஆன்மாவைப் பணயம் வைக்க மாட்டேன் ...

நண்பர்: இருங்க இருங்க. இன்னும் முடியல. வெளிநாட்டுப் பயணம், விஷ்ணுபுரத்தின் துணைக் கட்சிகளின் விருதுகள் இப்படி ஏராளமான வாய்ப்புகள்.

நான்: அதுக்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நண்பர்: நீங்க ஒரு எழுத்தாளரா உருவாக பல வருடங்கள் எழுதணும். அப்பவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனால் ஜெயமோகனுக்கு கடிதம் மட்டும் எழுதிப் பாருங்க, தமிழ் விக்கியில் மாய்ந்து மாய்ந்து உங்களைப் பற்றி குறிப்பு வரும்.

நான்: தமிழ் விக்கிக்கு எந்த மரியாதையும் இல்ல. வாசக மனத்தில்தான் எழுத்தாளனுக்கு எப்போதுமான இடம். அதுக்காக கட்சியில் உறுப்பினர் ஆக முடியாதுங்க.

நண்பர்: ஜெயமோகன் பாராட்டி எழுதினா உங்க புக் நூற்றுக்கணக்கில் பிரதிகள் விற்கும்.

நான்: கமல் யாருக்கும் புரியாமல் பேசினாலும் விற்கும். இன்ஸ்டாவில் எவனாவது தறுதலை நம்மைப் புரமோட் பண்ணினாலும் விற்கும். புத்தகம் மட்டுமில்ல டூத் பேஸ்ட் கூடத்தான் புரொமோட் பண்ணினால் விற்கும். அது எழுத்தாளனின் பிரச்சினை இல்லை. வாசகர்கள் கவனித்து நம்மை உள்வாங்கணும், நாம் அவர்களின் ஆன்மாவைத் தொடணும். அதுதான் அசல் எழுத்தாளரின் இலக்கு.

நண்பர்: நீங்க விஷ்ணுபுரம் கட்சி மேடையில் புத்தகத்தோட வந்து நின்னா பரபரன்னு அங்க வரும் பங்கேற்பாளர்களே வாங்கிக் குவிப்பாங்கன்னு சொல்லலாமுன்னு நினைச்சேன். இல்ல வேணாம். ஒண்ணு சொல்றேன், நீங்க நாளைக்கு கைகால் வெளங்காம கஷ்டப்பட்டீங்கன்னு ஜெயமோகன் உங்களுக்குப் பணம் தந்து காப்பாற்றுவார். அதை வேறு யார் செய்வாங்க?

நான்: ஆமாம், அதோட 'என்னிடம் இரந்து பெற்றவன்' என்று நம்மைப் பற்றி பக்கம் பக்கமாக ஊர் ஊராக அசிங்கப்படுத்தி கேவலமாக உணர வைப்பார். சமத்துவம் இல்லாதபோது உதவி என்பது பிச்சை வாங்குவதற்குச் சமம். அதன்பிறகு அவர் அஞ்சலிக் கட்டுரை எழுதுவார், நம் பெயரில் விருதளிப்பார் எனும் பயத்திலேயே நம்மால் நிம்மதியாகச் சாகவும் முடியாது. வாழவும் முடியாது.

நண்பர்: சமூகமும் அரசும் கைவிட்ட படைப்பாளிகளுக்கு அவர் விருதளித்துக் கொண்டாடுவார். ஆவணப்படம், புத்தகம் ஆகியவை உங்களைக் குறித்து வெளியிடுவார். இதெல்லாம் வேறெங்க கிடைக்கும்?

நான்: ஆம், அதை ஏற்றால் நம்மைக் குறித்து அவர் வைக்கும் மனப்பதிவு சரியென்றாகும். அவரது மதிப்பீடுகளை சிலுவையாகச் சுமக்க வேண்டும். சாகித்ய அகாடெமி விருது வாங்கியவர்கள் அந்த அமைப்பை கன்னாபின்னாவென விமர்சித்திருக்கிறார்கள். அரசைக் கூட விமர்சிக்கிறோம். ஆனால் விஷ்ண்புரம் விருது பெற்றவர்கள் தம் நாக்கைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட மௌனத்திற்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் அதன்பின் பேசியதே இல்லை.

நண்பர்: எழுத்தாளர் ஏன் நினைத்ததை எல்லாம் சொல்லணும்? நாக்கை வச்சு என்ன பயன்? நாம வீட்டிலயும் வேலையிடத்திலயும் நினைச்சதை சொல்றோமோ?

நான்: எழுத்தாளராக இருப்பதே சுதந்திரம்தான். அதில்லாமல் எழுத்தில்லை. நினைத்ததை எழுதும் சொல்லும் சுதந்திரம். ஜெயமோகன் சொல்லும் பல அபத்தமான கருத்துக்களை மறுக்கும் சுதந்திரம். அவரது எழுத்து பாணியை, அழகியலை, கருத்தியலை மறுத்து புதிதாக எழுதும் சுதந்திரம். சுருக்கமா சொல்றதுன்னா நம் அரசியலமைப்பு நமக்கு அளிக்கும் உரிமை. அந்த நாக்கைத்தான் பிடுங்கி விடுகிறார்கள். விருது மேடைக்குத்தான் போக வேண்டுமென்றில்லை. அந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் போகவே நாக்கை செருப்புடன் வெளியே கழற்றி வைத்துவிட வேண்டும்.

நண்பர்: அவர் மீதான மரியாதையால் அப்படி இருக்கிறார்கள்.

நான்: அதன் பெயர் மரியாதை இல்ல, பயம். இதைக் கட்சி ஒழுங்குன்னும் சொல்வாங்க. அவர்கள் தமக்குள் மட்டும் பேசிக் கொள்வார்கள். வெளியே சொல்ல பயம். யாராவது சொன்னால் கோபம்.

நண்பர்: அது அன்புங்க. தீவிரமான பற்று.

நான்: ஜெயமோகன் "சொல்லாமலே" கவுசல்யாவைப் போல. அவர் ஊமையை மட்டும்தான் காதலிப்பார். அவருக்குப் பிடிக்குமே என்று நாம ஊமையா நடிச்சா பிறகு அவருக்கு பயந்து ஒருநாள் நாக்கை வெட்டிக்கணும். ஆனால் அவருக்கு அது தெரிஞ்சா கண்ணீர் விட்டு அழுவார். அவருக்காக நாக்கை வெட்டிக்கொண்டு ஆயுள் பரியந்ததும் ஊமை பாஷையில் பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
என்னைப் பாருங்கள். நான் என் நண்பர்களைக் குறித்து சுதந்திரமாக என் கருத்துக்களைச் சொல்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றுவதில்லை. அவர்களும் என்னை விமர்சிக்கலாம். நான் பிளாக் செய்வதோ கட்சியில் இருந்து வெளியேற்றுவேன் என மிரட்டுவதோ இல்லை. அற்ப மனம் படைத்த பதர்கள் என்று ஏசுவதில்லை.

எனக்கு வெளிநாட்டுப் பயண வாய்ப்பு, மொழிபெயர்ப்பு வாய்ப்பு, மதிப்புரைகள், விற்பனை, விருது கிடைக்காமல் இருக்கும். ஆனால் ஒப்பற்ற ஒன்று என்னிடம் உள்ளது - என்னால் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேச முடியும்.

கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன் - எழுத்தாளர்கள் தனியர்கள். அவர்கள் குழு விலங்குகள் அல்லர். அளிக்கப்பட்ட இலக்குகளை கூட்டாக நிறைவேற்றுவோர் தனிப்பட்ட கனவுகளும் சுதந்திரமும் இல்லாதவர்கள். எழுத்தாளர்கள் ஒருபோதும் குழு, அமைப்பு, கட்சியில் உறுப்பினர்களாக இருக்கலாகாது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...