குற்றத்தை செய்கிறவர்களுக்கும் அதை விசாரிப்பவர்களுக்கும் என்ன உறவு? இருவரும் ஒருவரே தானா என இந்நாவல் கேட்கிறது. பொதுவாக துப்பறியும் நாவல்களில் ஒரு நிபுணர் குற்றவாளியை கண்டுபிடிப்பார். யார் குற்றவாளி என்பதே கேள்வியாக இருக்கும். முடிவில் விடை இருக்கும். ஆனால் இந்நாவல் துப்பறியும் பணியை வாசகனிடமே ஒப்படைக்கிறது. வாசகன் குற்றவாளியை அல்லாது குற்ற மனதின் விசித்திரங்களை தேடிக் கண்டைகிறான். Pedophilia எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் கற்பனைகளும் நியாயப்படுத்தல்களும் என்னவென இந்நாவல் சித்தரிக்க முயல்கிறது. பல நேரங்களில் நம்முடைய குறுகிய பார்வை தான் பிறரை குற்றவாளி ஆக்குகிறதா, நம் நம்பிக்கைகள், ஆசைகள், விகார எண்ணங்களை மற்றொருவரை குற்றவாளி ஆக்குவதன் மூலம் வெளிப்படுகின்றனவோ எனவும் இந்நாவல் கேள்வி எழுப்புகிறது.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்