முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதிர்ச்சியற்ற அணி



 இந்தியா தெ.ஆ அணியிடம் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் தோற்றதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எனக்கு அவற்றில் ரொம்ப முக்கியமாகப் பட்டது அவர்கள் 'தெனாவட்டாக ஆடினார்கள்' என்பது. பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே இந்தியாவின் மட்டையாட்டம் உருப்படியாக இருந்தது என முன்னாள் பாக் வீச்சாளர் முகம்மது அமீர் சொல்லியுள்ளது சரிதான். பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதுமே நாம் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டோம் எனும் திருப்தி வந்துவிடுகிறது. அடுத்து நாம் எப்படியும் அரை இறுதியை அடைந்துவிடுவோம் எனும் மனப்பான்மை. தெ.ஆ அணியை ஏற்கனவே இரு பக்க டி20 தொடரில் முறியடித்ததால் என்ன நடந்தாலும் கடைசியில் ஜெயிப்போம் எனும் மிகை நம்பிக்கையும் இருந்திருக்கக் கூடும். கூடவே தோல்வி பயமும் பதற்றமும். ஆனால் தெ. ஆ இந்தக் குழப்பங்கள் இல்லாமல் தெளிவாகத் திட்டமிட்டு வந்து தம் இலக்கை நோக்கிப் பயணித்தார்கள். 3 விக்கெட்டுகள் இழந்த பின்னரும் கூட வருண் சக்கரவர்த்தியை அடிக்க வேண்டும் என இட்டத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஸ்டப்ஸ் கடைசி ஓவர் வரை ஆட வேண்டும் எனும் கடமையைச் செய்தார். மார்க்ரம், இங்கிடி, யான்சனும் புள்ளிவிபரப்படி வைடாக முழுநீளத்தில் வீசினார்கள், மெதுப்பந்துகளை பூச்சொரிவது போல போட்டுக் கொண்டே இருந்தார்கள். இப்படி ஒவ்வொருவரும் தமக்கு அளிக்கப்பட்ட பணிகளைச் செய்தனர். இந்தியாவிடம் இத்தகைய அணுகுமுறை இல்லை. அபிஷேக், இஷான் தம் ஈகோவுக்காக ஆடினர். திலக் தன் மீதுள்ள அழுத்தத்தினால் அடித்தாடும் திட்டத்துடன் வந்து சுற்றி அவுட் ஆனார். அதாவது அவர் அணியின் செயல்திட்டத்துக்கு ஏற்ப ஆடவில்லை. இணையத்தில் ரசிகர்கள் வைக்கும் ஸ்டிரைக் ரேட் விமர்சனத்துக்குப் பதிலளிக்க ஆடினார். இவர்கள் இப்படி ஆடுவதைக் கண்டு பயந்து கம்பீர் வாஷிங்டனை அனுப்பினார். ஆட்டத்தை வெல்வதற்காக அல்ல, ஆட்டம் கைவிட்டுப் போகக் கூடாதே எனும் எதிர்மறை எண்ணத்தில் அனுப்பினார்.

இப்படி தெனாவட்டு + பயம் இந்தியாவைச் செலுத்தியது. முதலில் ஆட்டத்தை மதிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு நிலையிலும் எங்கு உள்ளோமோ அதை மதித்து நடந்து கொள்ள வேண்டும். இருப்பதை விட்டுப் பறக்கக் கூடாது. இந்த அணி தட்டையான ஆடுதளங்களில் சரவெடியாக ஆடும்தான். ஆனால் உலகக்கோப்பை ஆட்டத்தொடரை வெல்வதற்கான முதிர்ச்சி அவர்களிடம் இல்லை. எதற்கெடுத்தாலும் எகத்தாளமாகப் பதில் சொல்வது, அக்ஸர் போன்ற சிறந்த வீச்சாளரை அமர வைப்பது என முதிராச் சிறுவர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். தம் தவறை ஒருபோதும் ஒப்புக் கொள்வதும் இல்லை. இவர்களுடைய உடல்மொழி அப்படியே குட்டி ஷாவினுடையதைப் போன்றே உள்ளது. தெ.ஆப்பிரிக்காவைப் பாருங்கள், என்னவொரு கண்ணியம், பொறுப்பு, பணிவு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...