முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாதி பாலத்தைத் தாண்டியதன் பிரச்சினைகள்



கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள்.

நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்நிலையை நோக்கித் தள்ளி உள்ளன என நினைக்கிறேன்.

ஒன்றால் நிறைவு கொள்ளுதலும் ஒன்றை 'அடைதலும்' இருவேறு சங்கதிகள்:
அடைதலை ஒருவித கைப்பற்றுதலாக நாம் பார்க்கலாம். அதாவது ஒரு மொபைல் விளையாட்டில் எதிரியை, எதிரியின் கோட்டையைக் கைப்பற்றுவது, ஒரு உணவுப் பொருளை அடைவது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடைவது. ஆனால் எதை அடைந்தாலும் அதில் நிறைவு வரவில்லை எனும் உண்மை முதலில் நம்மை இடிபோலத் தாக்கும்.

நிறைவு என்பது முழுமை அல்ல, நிறைவு ஒரு ஆழமான பற்றுதல். பற்றுதல் என்பது இங்கு இல்லாத ஒன்றை நோக்கி மனதளவில் பாய்தல். ஆக, நிறைவு என்பது முழுமை அல்ல, முழுமையின்மையைக் கொண்டாடுதல், ரசித்தல், அதில் பெரும் திளைப்பை உணர்தல் (கீர்க்கெகாட் சொல்லும் விசுவாசத்தின் பேரிலான முன்னோக்கிய பாய்ச்சல்). இன்றைய தாராளவாதப் பொருளாதாரத்தில் நாம் நிறைவின்மையைக் கண்டு வெகுவாக அஞ்சுகிறோம். ஒவ்வொன்றையும் பொருண்மையாக நிறுவ வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. அன்பா, திகைப்பா, வெறுப்பா அதை ஒரு பொருளாகக் காட்டு என்பதே தாராளவாதப் பொருளாதாரத்தின் விழைவு, வழிமுறை, மதிப்பீடு எல்லாம். காதலர் தினத்தன்று இவ்வளவு பரிசுப் பொருட்கள் அதனாலே விற்கப்படுகின்றன. வெறுப்பை மிகுதியாக்கி ஒரு மற்றமையைக் கண்டறிந்து அவர்களைக் கொன்று அவர்களுடைய குருதியைக் காணத் தவிக்கிறோம். இது ஒரு காட்டுமிராண்டி, நாகரிகமற்ற மனநிலை அல்ல. இது முதிரா அகவிழைவு அல்ல. இதுதான் தாராளவாதத்தின் ‘விபத்து’. எல்லாவற்றையும் பொருண்மைப்படுத்தி கண்முன் காட்ட வேண்டிய அழுத்தத்தின் விபத்து. இது எல்லா தளங்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாம் வாழ்கிற பின்நவீனக் காலமானது இச்சிக்கலை இன்னொரு விதத்தில் எதிர்கொள்கிறது - அது தள்ளிப் போட முயல்கிறது. தள்ளிப் போடுதலைத் தன் இருத்தலின் அடிப்படையாக்குகிறது. தள்ளிப் போடும் ஒவ்வொரு சிறு தருணத்திலும் அது நம்மைத் திளைக்க வைக்கிறது. நாம் அடைய வேண்டிய இலக்கு அடைய இயலாத ஒன்று என நாம் ‘உணர்வதிலும்’ மிகுந்த உவகை உண்டு என நம்மை நினைக்க வைக்கிறது.

இடைப்பட்ட வேளையின் மகத்துவத்தில் நாம் மகிழ்கிறோம். இதன் அடிப்படையானது எதற்கும் அடிப்படையில்லை என நம்புவதாகும்; சாராம்சத்தை மறுப்பதாகும். உலகக்கோப்பையானது, அதை வெல்வதானது ‘கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தைத் தொடுவது’ எனும் அர்த்தத்தை வெல்வதாகும். நாம் இதை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட்டு அந்த மகத்துவத்தை அடைய முயல்கிறோம். மனதுக்குள் ஒவ்வொரு சிறு போட்டியின் வெற்றியையும் பேரனுபவமாக பாவிக்கிறோம். ஒவ்வொரு நெருக்கடியான வெற்றியும் ஒரு உலகக்கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாகிறது. அதே நேரம் நாம் இதை முழுமையாகத் தள்ளிப் போடவும் இயலாது என்பதால் முன்கூறான திருப்தியும் பரவசமும் நம்மை இலக்கைத் தொடும் முன்பே தளர்ச்சியடைய வைக்கும் அல்லது அதை மேலும் அஞ்சி விலகி ஓட வைக்கும்.

இதுதான் பாதி பாலத்தைத் தாண்டியதும் ஆற்றில் குதிக்க வைக்கிற மனநிலை. இதைத் தவிர்க்க ஏதோ ஒன்றின் மீது தீவிர பற்றுதல் கொண்டு, இல்லாத ஒன்றின் மீதான, ஒருபோதும் சென்றடைய இயலாத ஒன்றின் மீதான பற்றுதல் மட்டுமே வெற்றியெனக் கருதும் மனநிலையை வளர்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...