முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாசிப்பதும் எழுதுவதும் - செயலின்மையும் செயலும்





வாசிப்பு நம்மூரில் அதிகமும் ரொமாண்டிசைஸ் பண்ணப்படுகிறது. என்னால் அதை ஏற்க முடிவதில்லை. சொல்லப்போனால் வாசிப்பது குறித்து எனக்கு ஒரு குழப்பமான பார்வையே உள்ளது.
நான் எப்போதெல்லாம் நிதானமான, சமநிலையுடன் இருக்கிறேனோ அப்போதெல்லாம் எழுத்தில் கவனம் செலுத்துவேன். நான்கைந்து மணிநேரங்கள் எழுதுவேன். மனம் சமநிலையில் இல்லை, ஒரே தவிப்பாக இருக்கிறது என்றால் கன்னாபின்னாவென்று புனைவுகளை வாசிப்பேன். கடந்த சில தினங்களாக அப்படித்தான் என் நாவலை எழுதாமல் புனைவுகளாக வாசித்துத் தள்ளுகிறேன். ஒரு புத்தகத்தை எடுத்து நூறு பக்கங்கள் படித்துவிட்டு இன்னொன்றுக்குள் தாவி அதைவிட்டு மற்றொன்றை வாசித்து முடித்து அடுத்தடுத்து படிக்க வேண்டிய நாவல்களைத் தேர்வு பண்ணுகிறேன். இது ஏன், எப்படி என்று தெரியவில்லை (அதனாலே குழப்பம் என்கிறேன்). நான் நிறைய வாசிக்கிறேன் என்றால் நான் நன்றாக இல்லையென்று அர்த்தம். நான் நிறைய எழுதுகிறேன் என்றால் ஜாலியாக இருக்கிறேன் என்று பொருள். அதனாலே என்னுடைய புத்தக அலமாரிகளை நான் ஒரு மருத்துவமனையாகவே பாவிக்கிறேன். என் எழுதுமேஜையோ என் குத்துசண்டைப் பயிற்சி அறை. ஏனென்றால் வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கையிலே குத்துச்சண்டையும் உடற்பயிற்சியும் செய்ய இயலும்.

சுஜாதா சொல்லியதைப் போல நிறைய படித்துவிட்டே ஒருவர் எழுத வேண்டும் என்பது எனக்கு எடுபடாது. புத்தகங்கள் ஒருவித மருந்து. வாழ்தலில் இருந்து விலகி இருப்பது. கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொல்வார்: நீ சண்டை போடுகிறவன். நிர்வாகம், ஓய்வு, காதல் எல்லாம் நீ ஓய்வில் இருக்கையில் செய்வன. நீ போர்க்களத்தில் நின்று தலைகளைக் கொய்யும்போதே நீ வாழ்கிறாய் (நேரடி மேற்கோள் அல்ல). எழுத்தாளரும் எழுதும்போது மட்டுமே வாழ்கிறார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...