முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

 மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும்.

இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன:
1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது.
3) தொழில்கள் நசிந்தும், வேலை கிடைக்காமலும் ஊதியம் குறைந்தும் சிரமப்படும் மக்கள் இதைக் கண்டு எரிச்சலடைகிறார்கள்.
4) பெண்களுக்கு அளிக்கப்படும் தொகை ஒரு குடும்பத்தையே காப்பாற்றுகிறது என்று கடந்த ஆட்சியின்போது செண்டிமெண்டாகச் சொன்னார்கள். அது முழு உண்மையல்ல. அத்தொகை ஒரு கூடுதல் வருமானம். எல்லா பயனர்களுக்கும் அது குடும்ப உதவித் தொகை ஆவதில்லை. அப்படி ஆனாலும் அது சரியான பார்வை அல்ல. ஒரு குடிநர் குடும்பஸ்தராக இருக்க அவசியம் இல்லை. இத்திட்டத்தின் பயனரான ஒரு பெண் தனிநபராகவும் இருக்கலாம். குடும்பம் இல்லாததால் அவருக்கு கிடைக்கும் தொகை அர்த்தமற்றுப் போகாது. எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பெண்களுக்கான நலத்திட்ட உதவியை நியாயப்படுத்துவது எனத் தெரியாமல் கடந்த அரசு இந்தக் கொணத்தைக் கொண்டு வந்தது என நினைக்கிறேன்.
5) ஒருவர் சாதியாலோ ஏழ்மையாலோ வரலாற்றுரீதியாகப் பாதிக்கப்பட்டு அவரால் தரமான வாழ்க்கையை வாழவும் சாதிக்க இயலாலும் போகும்போதே affirmative action அவசியப்படுகிறது. பாலினத்தை இதில் கொண்டு வருவதன் பிரச்சினை வர்க்கம், சாதி, கல்வி ஆகியனவற்றின் அடிப்படையில் பாலின பேதத்தினால் விளையும் ஏற்றத்தாழ்வை நாம் பார்க்க வேண்டியுள்ளது என்பதே. இப்போதைக்கு அரசு நிதி நிலையையே பிரதான அளவுகோலாக வைத்து பயனராகும் தகுதியை முடிவு செய்கிறது. துரதிஷ்டவசமாக இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. //வருமான வரம்பு: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹ 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.// - இந்த வரம்புக்கு அப்பால் இருக்கிற பெண்களே உரிமைத்தொகையைப் பெற்றுள்ளதை அறிவேன். அரசு அதிகப் பயனர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைக்கிறதே ஒழிய சரியானவர்களுக்குப் போக வேண்டும் என நினைப்பதில்லை.
6) அடுத்து ஒருவருடைய ஏழ்மையையும் பாலினத்தையும் மட்டுமே கருதி உரிமைத் தொகை அளிப்பது சரி அல்ல. அவர் என்ன காரணத்தினால் சிரமப்படுகிறார் - பெண்ணாகவும் மாற்றுத்திறனாளிககவும் இருப்பதாலோ, நோயினாலா, வயதின் காரணமாகவா, வேலைக்கு முயன்றும் கிடைக்காததாலா? நான் இதையே இலவசப் பேருந்து திட்டத்திற்கும் சொல்வேன். வர்க்க அடிப்படையில் இதை வரையறுப்பது அவசியம் - உறவினரின் வீட்டுக்கோ கோயிலுக்கோ செல்லும் பெண்ணுக்கும் மீன் சுமந்துகொண்டு விற்பதற்குச் செல்லும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டு.
7) நலத்திட்டங்கள் தேவைப்படுகிற அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோக்காரர் இருப்பார். அவருக்கு இத்திட்டத்தால் கூடுதல் பாதிப்பு வரும்போது அவர் பயனர்களையும் அரசையும் வெறுப்பார். கர்நாடகத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலைவாசியை சமாளிக்க பால்விலையை ஏற்ற நினைத்தபோது அரசு அவர்களைக் கட்டுப்படுத்தியது. அரசு தமக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரினர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் அரசின் நலத்திட்ட பார்வையில் அத்தகையோர் இல்லை. அவர்கள் மகளிருக்கான உரிமைத் தொகையை எதிர்த்ததைக் கண்கூடாகக் கண்டேன். நலத்திட்டங்களை குறுகலான வரையறைக்குள் வைத்துப் பார்ப்பதால் விளையும் அவலங்கள் இவை.
பொத்தாம்பொதுவாக கொடுக்கப்படுவதாலே இத்தகைய திட்டங்களை பொதுமக்கள் தேர்தலில் வாக்கு கிடைப்பதற்கான லஞ்சமாகப் பார்க்கிறார்கள். பயனர் அல்லாதோருக்கு கசப்பும் ஏற்படுகிறது. மேலும் அரசு என்பது பாலினத்தின், சாதியின், மதத்தின் அடிப்படையில் நடப்பது அல்ல. அது உழைப்போர் வழங்கும் நேரடி, ம்றைமுக வரியினால் நடப்பது. துரதிஷ்டவசமாக அரசு குடிமக்களை உழைத்து உற்பத்தி செய்து வரிவழங்குவோர் எனப் பார்ப்பதில்லை. அது வரியை ஒரு கடமையாகப் பார்க்கிறது, ஆனால் அதை நாட்டின் ஜீவநாடியெனக் கருதி அதற்கு ஏற்ப திட்டங்களை வகுப்பதில்லை. குடிமையை அரசு ontologicalஆக (நான் இன்னதாக இருக்கிறோம் - பெண்ணாக, குறிப்பிட்ட சாதி, மதத்தைச் சேர்ந்தவராக) வகுக்கிறது. சமூக நலத்திட்டங்களும் இவ்வாறே பரிசீலிக்கப்படுகின்றன. ஆனால் இந்த இன்னவாக இருக்கிறேன் எனும் இருப்பு நிபந்தனைக்கு உட்பட்டது. நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரிசெலுத்தாவிடில் என்னால் ஒரு தேநீர் அருந்தவோ மலஜலம் கழிகக் கூட முடியாது (திருடவோ வெளியை அசிங்கப்படுத்தவோ செய்யாமல்). ஆக, பணமே நிபந்தனைக்கு அப்பாறட்டு நம் இருப்பைத் தீர்மானிக்கிறது (unconditional existence). ஒரு நல்ல அரசு இந்த இருப்பை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கவே பிரறதானமாக முயல வேண்டும். நான் உழைப்பதால் இந்த சாதிக்குள், இந்த பாலினத்துக்குள் இருக்கிறேன், நான் என் வரையறைக்குள் இன்னும் அதிகமாகப் பணம் ஈட்டி, சமத்துவத்தை எட்ட முயன்று இன்னும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை.
மக்களாட்சி உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவதால் பொருளாதார அலகை விட பண்பாட்டு வரலாற்று அலகையே அரசு அதிகமாகப் பொருட்படுத்துகிறது. இது நலத்திட்டங்களை ஒரு முடிவற்ற சுழலுக்குள் செலுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...