முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்களின் பிரச்சினை

 


இணையத் தாக்குதல்கள் இன்று தற்செயலாக ஒருவர் மீது நிகழ்த்தப்படுவதாக நான் நம்பவில்லை. அக்காலம் மலையேறி விட்டது. இன்று இதையே தொழிலாகக் கொண்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள். வாடகைக்குத்தான். இவர்களை ஒருங்கிணைக்கும் ரூட்ஸ் மீடியா போன்ற சில நிறுவனங்களே உள்ளன. பணம் கொடுத்தால் இணைய வெறிநாய்களை அவிழ்த்து விடுவார்கள்கெனிஷா-ரவி மோகன் விவகாரக்த்திலும் இத்தகைய நிறுவனம் எதுவோ பின்னணியில் இருக்கும் என்பதே என் கணிப்பு. இது நமக்குத் தெரியும்போது அவர்களுக்குத் தெரியாதா? அவர்களுடைய உணர்ச்சிக் குமுறல் நேர்காணல், காணொளிகளைக் கண்டபோது விசயம் வேறெதுவோ என்று தோன்றியது. அதில் வெளிநபர்களுக்குக் கருத்து சொல்ல ஒன்றுமே இல்லை.


நம்மைப் போன்றோருக்கு விர்ச்சுவல் உலக்கு வெளியே மிகப்பெரிய உலகம் உள்ளது. தினசரி வேலை, வீட்டுப் பிரச்சினைகள், தனிப்பற்ற பயிற்சிகள். நம் பிரக்ஞைக்குள் இணையம் ஒரு மிகச்சிறிய இடத்தையே பிடிக்க முடியும். ஆனால் நம்மில் சமூகவலைதளத்தை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்வோரும் உண்டு. இன்று பல பிரபலங்கள், பிரபலங்களாக விரும்புவோர் அப்படியே வாழ்கிறார்கள். என்னால் அவர்களைப் புரிந்துகொள்ள இயன்றதில்லை


நான் நேற்று முழுக்க ஜிம்மில் முந்தா நாள் எனக்குப் பயிற்சியளித்த இளம்பெண்ணின் குத்துக்களை என்னால் parry செய்ய முடியவில்லை, ஏன் அவ்வளவு வேகமாக மின்னலென வருகின்றன, தப்பு எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கூடவே சின்னச்சின்ன முன்னேற்றங்களை எண்ணி மனதுக்குள் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருந்தேன். இதற்கு நடுவே வேலையிடத்தில் என்னிடம் யாராவது சொல்வது கூட என் காதுக்குள் நுழைவதில்லை. சமூக வலைதளப்பில் நடப்பவை என் பிரக்ஞைக்குள் நுழைவதே இல்லை. வெறுமனே ரியாக்ட் செய்வதோடு சரி


 வெர்ர்சுவல் உலகையே தம் தொழிலாகக் கொண்டோரும், அதில் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து அதைக் கொண்டு சம்பாதித்து வளர்ந்தோரும் உண்டு. அவர்கள் ஒரு தனி உலகில் வாழ்கிறார்கள்: நான் சில நாட்களுக்கு முன் ஜி.பி முத்து வெளியிட்ட ஒரு காணொளியைக் கண்டேன். ஏதோ சொத்து தகராறு. எதிர்க்கட்சிக்காரர் இவரை அடித்துவிட்டார்கள். கண்ணுக்கு மேல் ரத்தம் எட்டிப் பார்க்கிறது. அது அவ்வளவு அழகாக இருந்தது. அவர் அதற்கு ஏன் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு கத்துகிறார் எனப் புரியவில்லை. அடிபடுவதில் ஒரு சுகம் உண்டு. திரும்ப ரெண்டு கொடுக்க முடிந்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஆனால் இந்த காவல்துறை போன்ற பஞ்சாயத்துக்குளே பிரச்சினை. இந்த காவல்துறை, நீதிமன்றம், சொத்துப் பதிவு, இணையவழி பணப்பரிமாற்றம் எல்லாம் இல்லாத காலத்தில் உலகம் இன்னும் ஜாலியாக இருந்திருக்கும்


இரண்டு பேர்களுக்கு நடுவே பிரச்சினை என்றால் காவல்துறை, நீதிமன்றம், சமூகவலைதளம், வீடியோ என்று களேபரம் செய்கிறார்கள். கடைசி வரை நேருக்கு நேர் ஒன்றுமே பண்ணிக் கொள்வதில்லை


எனக்குப் பயிற்சியளித்த பெண்ணைப் பற்றி சொன்னேன் அல்லவா, முதல் நாள் நான் அவருடன் பயின்றபோது அவர் மட்டும் வேகமாக என் முகத்தை நோக்கிக் குத்திக் கொண்டிருந்தார். நான் கடுப்பில் திரும்ப நாலு குத்துவிட்டதும் அவர் பின்னுக்குப் போய்விட்டு "வேகமா குத்தக் கூடாது, இது பயிற்சிதான், ஜஸ்ட் கையை நீட்டினா போதும்" என்றுவிட்டு மீண்டும் என் முகத்தை நோக்கி வேகமாகக் குத்தத் தொடங்கினார். நான் மேலும் கடுப்பாகி இன்னும் வலுவாகக் குத்த அவர் என்னிடம் "நான் உங்களுக்குக் குத்தி காமிக்கிறேன்" என்று கும்மென்று குத்தினார். நான் பின்னுக்குச் சரிந்து விழப் போய் சமாளித்தேன். உடனே மலர்ந்த சிரிப்பில் லைட் போட்டதைப் போல அவரது முகம் ஒளிர்கிறது. இவரென்ன குத்துகிறேன் என்று தள்ளுகிறாரே, யாரும்மா உனக்கு பாக்ஸிங் கத்துத் தந்தது என்று பயிற்சியைத் தொடர்ந்தேன். முந்தா நாள் அதே பெண் வந்தார். நான் கவனமாக என் குத்துக்களை மிகமிக லேசாக வைத்துக் கொண்டேன். குழந்தையுடன் விளையாடுவோமே அப்படி. அவரும் என் அணுகுமுறையைப் புரிந்துகொண்டு புன்னகையுடன் பூவால் ஒத்துவதைப் போல குத்தினார். கொஞ்சம் நேரம் இப்படி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் புன்னகையுடன் பிரிந்தோம். அடுத்த முறை பயிற்சிக்கு வந்தபோது மீண்டும் என்னைச் சீண்டத் தொடங்கினார். ஒருமாதிரி நடித்து சமாளித்தேன். அவ்வப்போது நான் சொதப்பிட அவர் பெரிய மனது பண்ணி அதை ஏற்பதாக ஒரு பாவனை செய்தார். சில சந்தர்பங்களில் நானும் கும்மென்று சில குத்துக்களை இறக்கினேன்.  


ஆண்கள் இன்னும் ஜாலியானவர்கள் - ஒருவர் ஜாப் அடித்துவிட்டு கிராஸை இங்கே விடுங்க என்று தன் வலுவான வயிற்றைக் காட்டுகிறார். நான் ஆரம்பத்தில் லேசாகத் தொடுவதைப் போல குத்திவிட்டு பிறகு லேசாக குத்துவிட்டுப் பார்க்கிறேன். அடுத்தமுறை கும்மென ஒரு குத்துவிட வேண்டும் என இருக்கிறேன். மனிசன் கோவித்துக் கொள்ளக் கூடாது. பெண்களால் ஒருபோதும் இப்படி "வயிற்றில் குத்து" என்று தட்டையான வயிற்றைக் காட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடனானது பூப்பந்து விளையாட்டு. அவர்கள் தம் உடலைக் குறித்து ரொம்ப அதிகமாகக் வலைப்படுகிறார்கள்


இப்படி இருக்கையில் இவ்வுலகம் எவ்வளவு ஜாலியாக இருக்கிறது


இதனால்தான் நான் வெர்ச்சுவல் உலகைப் பொருட்படுத்துவதில்லை. கூடவே, காவல்துறை, நீதிமன்றம், குடும்பம் (மூன்றுமே ஒன்றுதானே) சார்ந்த சட்டதிட்டத்தால் கழுத்தை நெரித்து பிளாக்மெயிலிங் செய்து பேரம் பேசி காசைப் பிடுங்கி விடுவிக்கும் உலகையும் வெறுக்கிறேன். அவை ஆபீஸ் போவதைப் போல ஒரே போல இருக்கின்றன. அங்கு நியாயம், நீதி, பாசம் எல்லாமே பணத்தைப் பிடுங்கத்தான். அங்கு யாரும் எதையும் தியாகம் பண்ணுவதில்லை. பெரிய விசயங்களுக்காக செயல்படுவதில்லை. எவ்வளவு பெரிய சண்டையையும் நீங்கள் உடைத்துப் பார்த்தால் கடைசியில் "எனக்குப் பணம் கொடு" என்ற ஒற்றை வாக்கியமே இருக்கும். பல ஆண்களின் பிரச்சினை அவர்கள் இந்த தப்பான உலகில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல பெண்வயமாகி தம் ஆண்மையை அதற்குள் திணிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்


 இதிலிருந்து ஆண்கள் முக்கியமாகத் தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். வியர்வையாலும் வலியாலும் அபாயங்களாலும் ஆனதே ஆண்களின் உலகம். அங்கே அவர்கள் தம்மைக் கண்டடைய முடியும்


மிஷல் வெல்பெக் தன் நேர்முகம் ஒன்றில் இந்தப் போலியான உலகில் இருந்து தப்பிக்கவே தான் தேவாலயத்துக்குச் சென்று வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாகச் சொல்கிறார். ஒரு திரளாக இறைவனை நினைக்கும்போது கிடைக்கும் ஆற்றல் தனக்குப் பிடித்திருப்பதாகவும் ஆனால் அதேசமயம் அதுவும் போதுமானதாக இருப்பதில்லை - வழிபாடு முடிந்து வெளியேறியதும் பொருளுலகம் நம் பிரக்ஞைக்குள் புகுந்து கொண்டு சோர்வடைய வைக்கிறது என்கிறார். அதனாலே தான் துறவியாக ஒரு காலத்தில் நினைத்ததாகவும் சொல்கிறார். நான் மேலே குறிப்பிட்டவர்களிடமும் ஜிம்மில் இருக்கையில் தூய்மையான ஒன்று இருக்கிறது. ஜிம்மை விட்டு வெளியே வந்ததும் அவர்களும் இச்சாக்கடையில் கலந்துவிடுவார்கள். தூய உணர்வு சகதியாகிவிடும். ஆகையால் இதற்குள் நம்மால் என்ன செய்ய முடியுமென்பதே ஒரே யோசிக்க வேண்டியது.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...