முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிப்பெரும்பான்மை ஆட்சிக்கும் தமிழ்நாட்டின் துணிச்சலுக்கும் வைக்கப்பட்ட வேட்டு

 


இம்முறைகள் த.வெ.க பெற்றுள்ள இடங்கள் தற்காலிகமான எழுச்சியாக மட்டும் இருக்க இயலாது. வழமைபடி திமுக வென்றால் அவர்கள் கூட்டணி 150-160 என்றும், அதிமுக கூட்டணி 50-60 என்றும் பிரிந்துவிடும். மீத இடங்களே மூன்றாவது அணியினருக்கு. இப்போதோ விஜய் இரண்டு கட்சிகளிடம் உருந்து 70–40 என்று இடங்களைப் பறித்துவிட்டார். இனி வரும் தேர்தல்களில் அவர் மீதான வசீகரம் குறைந்தாலும் அவர் கட்சியை அப்போது நன்றாக வளர்த்திருப்பார் என்பதாலும், மக்களில் ஒரு பகுதியினரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பார் என்பதாலும் ஒட்டுமொத்தமுள்ள 234 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பிரித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். களம் அப்படி மாறிவிட்டால் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்று வலுவான ஆட்சி அமைக்க இயலாது போகும். எதிர்காலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். கூட்டணி ஆட்சி, தொங்கு சட்டமன்றம், கட்சிகள் உடைவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல - குடும்ப நல நீதிமன்றத்தில் வக்கீல்கள் உடைத்து விளையாடுவதைப் போல ஒன்றிய அரசு மாநில அரசை வைத்து விளையாடும். இரு கட்சி ஆதிக்கம் அதைச் சுலபத்தில் அனுமதிக்காது, ஆகையால் விஜய்யின் இந்த வலுவான தேர்தல் வெற்றி தமிழ்நாட்டை எதிர்காலத்தில் மோசமாகப் பலவீனப்படுத்தும். இனிமேல் ஒன்றிய அரசை எதிர்த்து தெனாவட்டாக ஆளுங்கட்சிகள் குரல் கொடுக்க இயலாது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ பாயும், கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் முதலீட்டிய சக்திகள் பதுங்குவார்கள், கட்சி உடைக்கப்படும்.
இதனாலே பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விஜய்யின் வெற்றியைப் பாராட்டி அறிக்கை விட்டிருக்கிறார்: //Annamalai said the people had delivered a message against “buying of votes and to dynastic politics,” and termed the shift a major turning point. Emphasising the scale of change, he said, “Whoever gets it done has actually done a favour to all”.

In a congratulatory message, he wrote, “Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.” He also acknowledged the electorate, stating, “I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken.”//

விஜய் ஒருவிதத்தில் அண்ணாமலை 2.0தான். இருமுனை அரசியல் என்றென்றைக்குமாக உடைவதன் வழியாக இனி தமிழ்நாட்டால் சுலபத்தில் எதிர்-பாஜக நிலைப்பாட்டை எடுக்க இயலாது எனும் நிலை தோன்றிவிட்டது. , பாஜக வெல்லவில்லை என்றாலும் அதன் பிரதான நோக்கம் வென்றிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...