முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவிதமான சமூகங்கள்

                                                            (வெல்பெக்)
 

பிரஞ்சு நாவலாசிரியர் மிஷல் வெல்பெக்கின் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் (Louisiana Channel). அதில் அவரிடம் எப்படி எழுத்தாளராக முடிவெடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் "எழுத்தாளராவதென்றால் எழுதி ஜீவனம் நடத்த முடிவது. நான் நாற்பது வயதை அடைந்தபோதுதான் என் புத்தகத்தில் இருந்து பணம் வரத் தொடங்கியது. Elementary Particles நன்றாக விற்றது. உடனே என் அலுவலக வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தாளரானேன். ஆகையால் நான் எழுத்தாளராக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கவில்லை. மக்கள் முடிவெடுத்தார்கள்" என்கிறார். இத்தனைக்கும் வெல்பெக் ஒரு இலக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவர். வணிகப் படைப்பாளி அல்லர். இந்த பிரஞ்சு இலக்கியவாதிகளை நினைத்து பொறாமை கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே மூன்று லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் 25 மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. மலையாளத்தில் கூட நாவல்கள் லட்சங்களில் விற்றதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறே. இப்போது அங்கும் நிலை மாறி தர்மஜன் போன்றோர் வணிக மொழியில் எழுதப்பட்ட நாவல்களே பெரும் எண்ணிக்கையில் விற்கின்றன. இலக்கியம் அங்கே ஆயிரங்களுக்குள் சுருங்கிவிட்டது. தமிழில் பிரசித்தமாகும் நாவல்கள் ஆயிரங்களிலும் மற்றவை நூற்றுக்கு சொச்சம் எண்ணிக்கையிலுமே சராசரியாக விற்கின்றன.

இதை நினைத்துப் பொறாமை கொள்ளும்போது வேறொரு எண்ணமும் எழுகிறது.
பொதுவாக இலக்கியம் வாசிக்கும் சமூகம் சுயச்சிந்தனையும் உணர்ச்சிக் கட்டுப்பாடும் பரந்துபட்ட சிந்தனையும் கொண்டிருப்பர். குறைந்தது சினிமா கவர்ச்சிக்கு ஆட்பட்டு பலியாக மாட்டார்கள். உதாரணமாக, ஒரு நடிகர் கைகாட்டினார் என்பதற்காக அறிமுகமில்லாத சின்னத்தில் நிற்கிற பெயர் தெரியாத ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் நடிகரை ஒரு தொழிலாளியாக மட்டுமே பார்ப்பர். சிந்தனைத் திறன் இல்லாமல் வெறுமனே சம்பாத்தியத்திற்காக மட்டுமே படிக்கிறவர்கள் உள்ள சமூகத்தில்தான் நடிகரைப் பார்க்க மக்கள் பெருந்திரளாகக் கூடுவர். நடிகர் முட்டிப் போடு என்றால் முட்டிப் போடுவர். நடிகர் கடலில் குதி என்றால் பாட்டுப் பாடிக் கொண்டே குதிப்பர். நடிகரை முதல்வராக்கி கடவுள் ஆக்குவர். அந்த விதத்தில் தமிழர்களை விட பீடா வாயன்கள் என்று நாம் அழைக்கும் உ.பிகாரர்களும் பீகாரிகளும் மேல்.
படித்தும் முட்டாளாக இருப்பது மிகவும் கேவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...