முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானாவும் நாமும் ஒருசேர மாறிய கதை


 

நேற்றைய நீயா நானாவைப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒன்று தோன்றியது: நீயா நானா ஆரம்பிக்கப்பட்டு முதல் பத்தாண்டுகளுக்கு மேல் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை, அவற்றின் வினோதங்களை, சமூகவியல் தலைப்புகளை, மனித நடத்தையின் புதிர்களை, புதிது புதிதாக நடக்கும் அபத்தங்களை விவாதிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு சமூகப் சுயபரிசீலனைக் காலகட்டம் அது. பரவலாக பலரும் பார்த்து அதைக் குறித்து விவாதித்தார்கள், சமூகத்தின் நாடியைப் பிடித்துச் சொல்லும் அதன் பண்பை வியந்தோதினார்கள். அடுத்து 8-9 ஆண்டுகளாக நீயா நானா சமூகத்தை ஒரு பழங்காலத்துக்கு எடுத்துச் சென்று உறைய வைத்து அதன் பெருமைகளைப் பேசத் தொடங்கியது. அதாவது ஒரேயடியாக மாறிவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மெல்ல மெல்ல அது ஒரு பழம்பெருமை நிகழ்ச்சியாக மாறியது. கூடவே நிகழ்ச்சியை ஆண்களை விட அதிகம் பெண்களே இப்போது பார்ப்பதால் ஏதோ பெமினா பத்திரிகையைப் போல மாறிவிட்டது. அதில் ஒரு woke தன்மையும் அதிகரித்துவிட்டது. சமூகப் பிரச்சினைகளில் அது நாம் தமிழர் கட்சி, திமுகவுக்குள் சுருங்கியது என்றால் பாலினத்தில் பெண்களிடத்து சுருங்கியது. (நான் இங்கு நாதக, திமுக என்பது ஒரு குறியீடாகத்தான்.)

இதை அந்நிகழ்ச்சி மீதான விமர்சனமாக வைக்கவில்லை. வெகுஜன ஊடக வடிவங்களில் வரும் மாற்றங்கள் சமூக மனத்தின் அடியாழத்தில் நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்தும் அல்லது(மெக்லூஹன் சொன்னது போல) ஊடகங்களே இத்தகைய மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இப்படிப் பார்க்கையில் நம் சமூகமும் கடந்த பத்தாண்டுக்குள் மெல்லமெல்ல பழம்பெருமைக்குள் உறைகிற போலித்தனம் மிகுந்த ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டது, பெருங்கதையாடல்களில் ஊறி கனவு காண அது விரும்புகிறது, உதிரிகளைக் கூட அது woke ஆகவே பார்க்க விரும்புகிறது (அந்த கிளி ஜோசியக்காரரைப் பாருங்கள், அவரது சமூக ஒடுக்குமுறையைக் கண்டு கொந்தளியுங்கள், அவரைச் இச்சமூகம் ஒதுக்கிவிட்டதா, அவர் என்னவொரு அற்புதமான மனிதரெனப் பாருங்கள், அவரது மனித நேயத்தைக் கொண்டாடுங்கள்! ஐயோ நெஞ்சம் துடிக்கிறதே ஆ ஓ!). உதிரிகளை ஆராயக் கூடிய, அவர்களுடன் உரையாடக் கூடிய மனநிலையை இழந்து விட்டிருக்கிறோம். நாம் நம்மை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டு மற்றமையைப் பார்த்துக் கருத்துச் சொல்ல இன்று விரும்புகிறோம். உ.தா., நீயா நானாவில் முன்பு ஒரு திருமணமாகாத ஆண்கள் குறித்த நிகழ்ச்சியென்றால் அதன் அத்தனை சமூக உளவியல் கோணங்களும் அலசப்படும், பல புதிய திறப்புகள் ஏற்படும். அதிலிருந்து ஒரு சமத்துவக் கண்ணோட்டமும் அக்கறையும் விட்டேந்தியான அறிவார்ந்த மனமும் வெளிப்படும். இப்போது அவர்களுடைய கண்ணீரை முன்னிறுத்தி விட்டு அவர்களது கனவை நிறைவேற்றுவதாக ஒரு ஏற்பாட்டைச் செய்கிறோம். அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஒரு நாடகக் கல்யாணம் போல ஒன்றை நிகழ்த்திக் காட்டுவார்கள். சும்மா யாரையாவது மாலையிடுவதற்காவது அழைப்பார்கள். இது ஒரு அரசதிகார மனநிலைதான். இதை நாம் இன்று உள்ளுக்குள் ரசிக்கிறோம். நீயா நானா மட்டுமல்ல இன்று அரசாங்கமே நிகழ்த்து கலையாக மாறிவிட்டது. மீனவர்களைத் தேடிப் போய் அவர்களுடன் முதல்வரோ கட்சித் தலைவரோ மீன் பிடித்து அதைச் சமைத்து உண்டால் அத்துடன் மீனவர்களின் பிரச்சினை முடிந்தது. அடுத்து பனையேறிகள் பிரச்சினையா? தலைவர்கள் அவர்களுடன் பனையில் ஏறி அவர்களுடைய சிரமங்களைப் புரிந்துகொள்வார். அவர்களை வரிசையாக நிறுத்தி கட்டிப பிடித்து பின்னணி இசையை ஒலிக்க விடுவார். இதை நாம் மக்களாட்சி விழுமியம் எனப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோம். ஆனால் இது மக்களாட்சி விழுமியம் அல்ல, இது அரசதிகார மனநிலை. மனிதர்களை மற்றமையாக மாற்றி அவர்களுடன் மேலே இருந்து உறவாடி அதிகாரத்தைக் கடத்துவதாக அபிநயிப்பது.
நாம் என்ன செய்கிறோம்? நட்பு, குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் நிகழ்த்தி நம்மில் இருந்தே உடைந்து நம்மையே மற்றமையாக்கி விடுகிறோம். "என்னைப் பார், நான் எவ்வளவு நல்லவன், என்னைப் பார், நான் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவன், உனக்கு இதைப் பார்த்து கண்ணீர் வரவில்லையா? நான் இன்னும் அதிகமாக நடிக்க வேண்டுமா?"
இப்படி பல தளங்களில் நாம் இவ்வாறு போலி விழுமியங்களைப் பேசி கிளுகிளுப்பவர்களாகவோ அதை நிகழ்த்திக் காட்டி அடுத்தவரிடம் பெருமைப்படுகிறவர்களாகவோ மாறிவிட்டோம். நீயா நானா அதையே பிரதிபலிக்கிறது. சமகாலத்தில் நடக்கிற பல பிரச்சினைகளை, குளறுபடிகளை நாம் பேச விரும்புவதில்லை. இன்று பொறியியல் படித்தவர்களிலேயே 20% மேல் வேலையில்லாமல் திரிகிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. பட்டதாரிகள் பலரும் 10,000-20,000 வேலையில் அல்லாடுகிறார்கள். நாம் இதைவிட கல்வியில் சிறந்த தமிழ்நாடு, பீகாரிகள் கேவலமானவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் எனத் திரும்பத் திரும்பப் பேசவே விரும்புகிறோம். சுயபரிசீலனைக்கான ஆற்றலோ பொறுமையோ சகிப்புத்தன்மையோ இன்று நமக்கு இல்லை. ஊன்றி கவனித்து அலசி ஆராயும் திறனையும் இழந்து வருகிறோம்.
என்னை ஆச்சரியப்படுத்தியது தனிமனிதர்களான நம் மனமும் நீயா நானா போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவின் மனமும் ஒரே அலைவரிசையில் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான். நாம் கடைசியில் தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியைப் போல யோசிக்கவும் செயல்படவும் தொடங்கிவிட்டோம் என நினைக்க சற்று பயங்கரமாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...