Skip to main content

Posts

Showing posts from July, 2014

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கத்தாழக் கண்ணாலே

சமகால கவிதை மொழியில் ஸ்கூல் பெண்ணின் தலை ரிப்பன் போல் பளிச்சென தெரிவது உவமைகள். கவிதையில் உவமை ரொம்ப பழைய உதிரிபாகம். அதாவது மிகப்பழைய கவிதைகளான சங்கப்பாடல்களில் நீங்கள் குறியீடு படிமம் எல்லாம் பார்க்க முடியாது. ஆனால் உவமைகள் விரவிக் கிடக்கும். பள்ளியிலும் படித்திருப்போம். ”செம்புலப் பெயல் நீர் போல்” நினைவிருக்கும். நவீன கவிதை வந்ததும் குறியீடுகளும் படிமங்களும் மேற்சொன்ன ஸ்கூல் சீருடை போல் ஆயின. குறியீடு என்றால் இன்னதென அர்த்தமில்லாத, ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நிற்கிற ஒரு கவிதை உறுப்பு. சு.ராவின் “கதவைத் திற காற்று வரட்டும்” ஒரு குறியீடு. கதவு பல அர்த்தங்கள் கொண்டது. அதேவேளை அது “இறுக்கம்” எனும் ஒரு பொது அர்த்தம் கொண்டது. இதற்குள் மனதின் இறுக்கம், பண்பாட்டின் இறுக்கம், கோபித்த காதலியின் மன இறுக்கம் என எப்படியும் பொருள் கொள்ளலாம்.

தோனியுடன் ஒரு உரையாடல்

நிருபர்: இந்த தோல்வியை பத்தி என்ன நினைக்கிறீங்க? தோனி: நான் கேப்டன் ஆனதில இருந்து எத்தனையோ தோல்விகள் பார்த்திட்டேன். அதனால புதுசா ஒண்ணும் நெனக்கல நிருபர்: ஆனாலும் ரொம்ப கேவலமா தோத்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லியா? தோனி: நான் உலகப் பணக்காரர்களில் ஒருத்தன். எங்க அணியில் ஒவ்வொருத்தரும் கோடிஸ்வரர்கள். அவங்களும் சீக்கிரம் உலகப் பணக்காரர்கள் ஆகிடுவாங்க. நாங்க ஏன் அசிங்கப்படணும்? நீங்க இந்த கேள்வியை டாட்டா பிர்லாவை நோக்கி கேட்பீங்களா?

மொழியாக்க சறுக்கல்கள்

காலச்சுவடு வெளியீடான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு” எனும் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளின் மொழியாக்க தொகுப்பில் “ஒரு சிறிய நல்ல காரியம்” கதை படித்தேன். அருமையான கதை. எம்.கோபாலகிருஷ்ணனின் நல்ல சரளமான மொழியாக்கம். ஒரே பிரச்சனை சில idiom களை நேரடியாக மொழிபெயர்ப்பது.

பேய்களும் படைப்புலகமும்

முராகாமி மனோஜ் நைட் ஷியாமளனின் “சிக்ஸ்த் சென்ஸ்” படத்தில் ஒரு சின்ன பையனுக்கு பேய்கள் கண்ணுக்கு தெரிகிறார்கள். அவன் பெயர் கோல். அவர்கள் பேசுவது கேட்கிறது. பையன் பயந்து வீரிட்டலறுவது இல்லை. பேய்களும் அவனிடம் பழிவாங்க உதவி கேட்பதில்லை. பேய்களுக்கு “உன் உதவி தேவையுள்ளது, அவற்றை கவனித்து அதரவளிக்க யாருமில்லை” என்று அவனது உளவியலாளர் (அவரே ஒரு பேய் என்பது வேறு விசயம்) கூறுகிறார்.

கார்ப்பரேட் பிடியில் இருந்து திரையரங்கு, குறும்படம் மற்றும் தமிழ் சினிமா தப்புவது எப்படி?

தமிழில் வெற்றி பெற்ற சினிமாக்கள் மூன்று, ஆறு மாதங்கள் என்ன ஒரு வருடம் ஓடிய வரலாறு கூட உண்டு. இருபது முப்பது தடவை ஒரு படத்தை திரும்ப திரும்ப பார்ப்பது சாதாரணமாக இருந்ததுண்டு. இன்று 4 நாள் ஒரு படம் ஓடினால் அது வெற்றிப் படம். முதல் நாள் நல்ல கலக்‌ஷன் என்றாலே இயக்குநர்கள் குஷியாகி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒரு நல்ல திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதென்றால் டிக்கெட் செலவை விட தீனி செலவு இருமடங்காகிறது. ஒரு சமோசாவை அறுபது, என்பது ரூபாய்க்கு, சில திரையரங்குகளில் 120க்கு கூட விற்கிறார்கள். கொஞ்ச நாள் போனால் அங்கே சுவாசிக்கிற காற்றுக்கு கூட காசு பிடுங்குவார்கள் போல. சென்னையில் டிக்கெட் விலை குறைவு என்கிறோம். ஆனால் ஒரு பீனிக்ஸ் மால் போன்ற இடங்களில் படம் பார்க்க போனால் நீங்கள் இருசக்கர வாகன பார்க்கிங்குக்கு இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டி வருகிறது. அதாவது பட டிக்கெட்டை விட பார்க்கிங் டிக்கெட் இருமடங்கு விலை. காரில் போனால் பட டிக்கெட்டுக்கு நான்கு மடங்கு பார்க்கிங்கு ஆகலாம்.

இந்தியா ஆடும் டெஸ்ட் வெறும் சொப்பு மேட்ச்

வெளிநாட்டு கிரிக்கெட் நிபுணர்களுக்கு தம் அணி பற்றின பீதியுணர்வு அதிகம். போன வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 198 க்கு ஒரு விக்கெட் எனும் நிலையில் இருந்தோம். உடனே இந்தியா வெல்லப் போவதாக கூவினார்கள் தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்கள். ஸ்டெயின் அப்புறம் 6 விக்கெட் எடுக்க இந்தியா 334க்கு ஆட்டமிழந்தது. அப்போதும் இந்தியா தான் வெல்லப் போவதாய் கூறினார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா 500 அடித்து லீட் எடுத்து இந்தியாவை இரண்டாம் இன்னிங்ஸில் சுருட்டினாரகள். இந்தியா அப்போது தோற்றதற்கான முக்கிய காரணம் 500 அடிக்காதது. வெளிநாடுகளில் இந்தியா 400-500க்குள் முதல் இன்னிங்ஸில் அடிக்காத எல்லா டெஸ்டுகளிலும் தோற்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கற்றது தமிழ்: நகரமும் பண்பாட்டு தடுமாற்றமும் (மீள்பதிவு)

ரத்தம் என்னை கடவுளாக்கியது ... நான் சிவனாயிருக்கிறதினாலெ இத ( சிவபானம் -- கஞ்சா ) குடிக்க வேண்டியிருக்கு நைந்த பழைய ரூபா நோட்டுக்கு டிக்கெட் தர மறுத்த ஒரு ரயில்வே குமாஸ்தாவை கொன்ற ரத்தம் தோய்ந்த தன் கைகளை அலட்சிய புன்னகையுடன் பார்த்தவாறு நிமிரும் பிரபாகர் எனும் அந்த இளைஞன் தான் கடவுளாகி விட்டதாய் உணர்கிறான் . குருதி சுற்றி குழுமியுள்ள மக்களிடமும் , சகபயணிகளிடமும் அச்சம் கலந்த விலகலை அவன் பால் உருவாக்குகிறது . அவன் பயணம் அங்கிருந்து ஆரம்பமாகிறது .     பார்வையாளர்களிடையே ஒரு கனத்து உறைந்த மௌனம் . ஆணியில் தலை அறையப்பட்டு செத்த அப்பிராணி அரசு ஊழியனைக் கண்டு பொறியில் தட்டும் அதிர்ச்சியும் , உள்ளார்ந்த ஒவ்வாமையும் . பிரபாகரின் மேல் அனுதாபமோ , அவனது வன்முறையின் மேல் அபிமானமோ உருவாமல் போவதே இக்காட்சியை முக்கியமாக்குகிறது . தொடர்வண்டியில் சிகரெட் புகைத்ததனால் காவலாளியுடன் ஏற்படும் சச்சரவில் அவனை பிரபாகர் கொல்கிறான் . கடற்கரையில் சல்லாபிக்கும் ஜோடிகள் , உள்ளார்ந்த ஈடுபாடின்றி உரையாடும்...

நகுலன்: நேரடிக்கவிதைக்கும் குறியீட்டு கவிதைக்கும் நடுவே

குறியீடியக்கம் தமிழ்க் கவிதையை முப்பது வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இது மெல்ல மெல்ல தளர்ந்து வயோதிகத்தின் முதல் நோய்க்குறிகளை காண்பித்தது. மூன்று காரணங்களைச் சொல்ல்லாம். 1) பிரமிள் போன்ற குறியீட்டுக் கவிஞர்கள் இல்லாமல் போனது. 2) குறியீடு ஒரு இறுக்கமான, செயற்கையான வடிவமாக மாறியது. 3) கவிதை அகம் பற்றியது மட்டுமல்ல, புறமான, தகவல்பூர்வமான பொருண்மை உலகமும் கவிதைக்குள் பிரவேசிக்க வேண்டும் என கவிஞர்கள் நினைத்தது. குறிப்பாய், இதை சாத்தியப்படுத்திய பெண்ணிய, தலித் கவிஞர்களின் வருகை.

தீப்பந்தம் - ஹேரி கிராஸ்பை (1898-1929)

தீப்பந்தம் -     ஹேரி கிராஸ்பை (1898-1929) நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று? நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும். இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில் “பைத்திய ராணி” பிறப்பாள் தரிசனம் “பைத்திய ராணியும்” நானும் கண்களை பரிமாறுகிறோம் கண்ணாடி என் முகத்தில் பட்டு உடைந்து ஆயிரம் சூரியன்களாய் தெறிக்கிறது நகரம் முழுக்க கொடிகள் பட்பட்டென வெடித்து ஒன்றோடொன்று மோதுகின்றன மூடுபனி அபாய சங்குகள் துறைமுகத்தில் அலறுகின்றன புயல் ஜன்னல்வழி சீறி எழுகிறது குர்திய மேய்ப்பன்களுடன் நான் நடனமாட ஆரம்பிக்கிறேன் தரையில் உதைத்து ஒலியெழுப்பி சூபி ஞானிகள் போல் சுழல்கிறேன் நிறங்கள் ஆடைகளை அணிந்தும் துறந்தும் சுழல்கின்றன நான் வெஞ்சினத்தில் அவற்றை சொடுக்கி அடிக்கிறேன் தூய வெள்ளை இரும்பு கருமையுடன் கண்ணை எரிக்கும் சிவப...

காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம் - கென்னத் பியரிங்

சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம் பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம், உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம், உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம். ஒகெ., இருந்தாலும், திரும்ப வந்து விடு 

வணிக இதழும் தீவிர எழுத்தாளனும்

தபு சங்கர்: வணிக இதழ்களின் சமீபத்திய ஒரே கண்டுபிடிப்பு வணிக பத்திரிகைகள் ஒரு காலத்தில் தொடர்கதை மூலம் நிறைய எழுத்தாளர்களை ஊக்குவித்தன. நிறைய குப்பைகள் தோன்றின. ஆனால் அதில் இருந்து சுஜாதா, பாலகுமாரன் போன்ற நல்ல புனைவு எழுத்தாளர்களும் தோன்றினர். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களில் வணிக எழுத்தாளர்கள் கண்டுபிடித்த அல்லது உருவாக்கின எழுத்தாளர்கள் யார் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால் சிறுபத்திரிகை, நடுநிலை பத்திரிகைகளில் எழுதி பயின்றவர்களை அவ்வப்போது சில பத்திகள் எழுத வைத்து ஏதோ மகானுபாவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை இப்பத்திரிகைகள் தோற்றுவிக்கின்றன. இன்னொரு பக்கம் இலக்கிய எழுத்தாளர்கள் வீம்பினால் வணிக பத்திரிகைகள் எழுதாதிருந்தனர். இன்று எழுதுகிறார்கள் என்றொரு எண்ணமும் சிலருக்கு உள்ளது. இரண்டும் பொய்கள்.

பாலகுமாரன்

பாலகுமாரன் எழுதியது வணிக நாவல்கள் என்றாலும் அதில் ஒரு நிதானமும் வாழ்க்கை பற்றின நிறைய அவதானிப்புகளும் இருந்தன. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையை நெருக்கமாய் நின்று பார்க்கிற உணர்வை தரும். பாலகுமாரன் நாவல்களின் சிறப்பு அவை வெறுமனே விறுவிறுப்பாய் கதை சொல்லி நிற்பதில்லை என்பது. அவரது நாவல்களில் குட்டி அபத்தங்களும் பலவீனங்களும் ஒரு இலக்கிய வாசகனாய் படிக்கையில் புலப்படும். ஆனால் அவர் பொய்யை எழுதவில்லை என்பது தான் அந்நாவல்களின் வலிமை.

ஹெமிங்வேயின் தலைப்புகள்

குத்துச்சண்டை பழகும் ஹெமிங்வே ஹெமிங்வே மிக அழகான கவித்துவமான தலைப்புகள் இடக் கூடியவர். எனக்கு பிரியமானவை The Sun also Rises, Men without Women, For whom the Bell Tolls, Winner Take Nothing ஆகியவை. The Sun also Rises எனக்கு மிக மிக பிடித்தமான நாவல். வாழ்க்கையை ஒரு தனித்துவமான விதிகள் கொண்ட புதிரான விளையாட்டாக சித்தரித்திருப்பார். இந்த விளையாட்டை கற்று திறமையாக ஆடுகிறவன் வாழ்க்கையை கொண்டாடுகிறான், ரசிக்கிறான், ஒருவேளை வெல்கிறான். காளைச்சண்டை, காதல், செக்ஸ், எழுத்து எல்லாமே இந்த “தீராத விளையாட்டு” தான்.

கிரிக்கெட் இனி...

1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே.தீ அணி. பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா. இப்படி மேலாதிக்கம் மாறி மாறி இரு அணிகளிடம் இருந்தது.