முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பந்தம் - ஹேரி கிராஸ்பை (1898-1929)

தீப்பந்தம்
-    ஹேரி கிராஸ்பை (1898-1929)

நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று?
நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும்.
இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில்
“பைத்திய ராணி” பிறப்பாள்
தரிசனம்
“பைத்திய ராணியும்” நானும் கண்களை பரிமாறுகிறோம்

கண்ணாடி என் முகத்தில் பட்டு உடைந்து
ஆயிரம் சூரியன்களாய் தெறிக்கிறது
நகரம் முழுக்க கொடிகள் பட்பட்டென வெடித்து ஒன்றோடொன்று மோதுகின்றன
மூடுபனி அபாய சங்குகள் துறைமுகத்தில் அலறுகின்றன
புயல் ஜன்னல்வழி சீறி எழுகிறது
குர்திய மேய்ப்பன்களுடன் நான் நடனமாட ஆரம்பிக்கிறேன்

தரையில் உதைத்து ஒலியெழுப்பி
சூபி ஞானிகள் போல் சுழல்கிறேன்

நிறங்கள் ஆடைகளை அணிந்தும் துறந்தும் சுழல்கின்றன
நான் வெஞ்சினத்தில் அவற்றை சொடுக்கி அடிக்கிறேன்
தூய வெள்ளை இரும்பு கருமையுடன்
கண்ணை எரிக்கும் சிவப்பு நீலத்துடன்
கடல் பச்சை பளீர் ஆரஞ்சுடன்
தங்க நிறம் மட்டுமே நிர்வாணமாய்

எழுந்து மூழ்கும் எக்கு தூண்கள்
தோன்றி மறைகின்றன
என் ஆத்மாவின் நதியை உந்துதண்டால்
மேல்நோக்கி குத்துகின்றன
கீழ்நோக்கி குத்துகின்றன
உள்நோக்கி குத்துகின்றன
வெளிநோக்கி குத்துகின்றன
துளைக்கின்றன

நான் வலியால் ஆர்ப்பரிக்கிறேன்
கருங்கால் பூனைகள் துளைகளுக்குள் மறைகின்றன

என் முதுகில் பச்சை குத்தப்பட்ட சூரியன்
சுழலத்தொடங்குகிறது
வேகமாய் இன்னும் வேகமாய்
சுழற்றியடிக்கிறது சுழற்றியடிக்கிறது
கம்பீரமாய் தீப்பொறிகளை பறக்க விடுகிறது
பொறிகள் அண்டத்துக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்களுக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்கள் வால்நட்சத்திரங்களுடன் மோதுகின்றன

வெடிப்புகள்
நிர்வாண நிறங்கள்
சிவப்பு பேராபத்துகளாய்
வெடிக்கின்றன

நிர்வாணமாய் ஜன்னலை உடைத்து
தாவி
பற்றிப் பரவி நிற்கும்
ஒரு ஹிலியோஸரஸ் டைனோசரஸின் மீது நின்று
ஒரு சதுர கூம்பகத் தூணைப் பிழுது
கருங்கடலின் மைப்புட்டிக்குள் திணித்து எடுத்து
ஒரு சொல்லை எழுதுகிறேன்

“சூரியன்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...