முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பந்தம் - ஹேரி கிராஸ்பை (1898-1929)

தீப்பந்தம்
-    ஹேரி கிராஸ்பை (1898-1929)

நம் காலத்தின் புரட்சி உணர்வு பற்றின உங்கள் எண்ணம் என்ன, உதாரணமாய் கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் போன்ற இயக்கங்களில் வெளிப்படுவது போன்று?
நம் காலத்தின் புரட்சி உணர்வு என்பது (கம்யூனிஸம், சர்ரியலிசம், அராஜகவாதம் ஆகியவை வெளிப்படுத்துவது போல) ஒரு தகிக்கும் தீப்பந்தத்தை உலகின் இருட்டு லாந்தருக்குள் திணிப்பதை போல் ஆகும்.
இன்னும் ஒன்பது பத்தாண்டுகளில்
“பைத்திய ராணி” பிறப்பாள்
தரிசனம்
“பைத்திய ராணியும்” நானும் கண்களை பரிமாறுகிறோம்

கண்ணாடி என் முகத்தில் பட்டு உடைந்து
ஆயிரம் சூரியன்களாய் தெறிக்கிறது
நகரம் முழுக்க கொடிகள் பட்பட்டென வெடித்து ஒன்றோடொன்று மோதுகின்றன
மூடுபனி அபாய சங்குகள் துறைமுகத்தில் அலறுகின்றன
புயல் ஜன்னல்வழி சீறி எழுகிறது
குர்திய மேய்ப்பன்களுடன் நான் நடனமாட ஆரம்பிக்கிறேன்

தரையில் உதைத்து ஒலியெழுப்பி
சூபி ஞானிகள் போல் சுழல்கிறேன்

நிறங்கள் ஆடைகளை அணிந்தும் துறந்தும் சுழல்கின்றன
நான் வெஞ்சினத்தில் அவற்றை சொடுக்கி அடிக்கிறேன்
தூய வெள்ளை இரும்பு கருமையுடன்
கண்ணை எரிக்கும் சிவப்பு நீலத்துடன்
கடல் பச்சை பளீர் ஆரஞ்சுடன்
தங்க நிறம் மட்டுமே நிர்வாணமாய்

எழுந்து மூழ்கும் எக்கு தூண்கள்
தோன்றி மறைகின்றன
என் ஆத்மாவின் நதியை உந்துதண்டால்
மேல்நோக்கி குத்துகின்றன
கீழ்நோக்கி குத்துகின்றன
உள்நோக்கி குத்துகின்றன
வெளிநோக்கி குத்துகின்றன
துளைக்கின்றன

நான் வலியால் ஆர்ப்பரிக்கிறேன்
கருங்கால் பூனைகள் துளைகளுக்குள் மறைகின்றன

என் முதுகில் பச்சை குத்தப்பட்ட சூரியன்
சுழலத்தொடங்குகிறது
வேகமாய் இன்னும் வேகமாய்
சுழற்றியடிக்கிறது சுழற்றியடிக்கிறது
கம்பீரமாய் தீப்பொறிகளை பறக்க விடுகிறது
பொறிகள் அண்டத்துக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்களுக்குள் துளைத்தேறுகின்றன
எரிகற்கள் வால்நட்சத்திரங்களுடன் மோதுகின்றன

வெடிப்புகள்
நிர்வாண நிறங்கள்
சிவப்பு பேராபத்துகளாய்
வெடிக்கின்றன

நிர்வாணமாய் ஜன்னலை உடைத்து
தாவி
பற்றிப் பரவி நிற்கும்
ஒரு ஹிலியோஸரஸ் டைனோசரஸின் மீது நின்று
ஒரு சதுர கூம்பகத் தூணைப் பிழுது
கருங்கடலின் மைப்புட்டிக்குள் திணித்து எடுத்து
ஒரு சொல்லை எழுதுகிறேன்

“சூரியன்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.