Skip to main content

தோனியுடன் ஒரு உரையாடல்


நிருபர்: இந்த தோல்வியை பத்தி என்ன நினைக்கிறீங்க?

தோனி: நான் கேப்டன் ஆனதில இருந்து எத்தனையோ தோல்விகள் பார்த்திட்டேன். அதனால புதுசா ஒண்ணும் நெனக்கல

நிருபர்: ஆனாலும் ரொம்ப கேவலமா தோத்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லியா?

தோனி: நான் உலகப் பணக்காரர்களில் ஒருத்தன். எங்க அணியில் ஒவ்வொருத்தரும் கோடிஸ்வரர்கள். அவங்களும் சீக்கிரம் உலகப் பணக்காரர்கள் ஆகிடுவாங்க. நாங்க ஏன் அசிங்கப்படணும்? நீங்க இந்த கேள்வியை டாட்டா பிர்லாவை நோக்கி கேட்பீங்களா?


நிருபர்: இந்த மேட்சில இஷாந்த் ஆடாதது தான் தோல்விக்கு காரணமா?
தோனி: ஆக்சுவலி அவர் ஆடினா எங்களுக்கு அனுகூலம். அவரை எல்லாரும் திட்டுவாங்க. இப்போ அவர் இல்லாததினால நாங்க எல்லாரும் திட்டு வாங்குறோம்

நிருபர்: நீங்க வெறும் மூணு பவுலர்ஸோட போனீங்க. ஆனா பவுலிங் வீக் ஏரியான்னா அதிகமான பவுலர்ஸ் தானே அணியில் எடுக்கணும்?

தோனி: அப்பிடீன்னா 8 பவுலர்ஸோட ஆட்டடுமா?

நிருபர்: அப்போ பேட்டிங்கை பலப்படுத்த நீங்க 11 பேட்ஸ்மெனோட ஆடுவீங்களா?

தோனி: நான் தான் குண்டக்காமண்டக்கான்னு பதில் சொல்லுவேன். நீங்க அப்பிடி கேள்வி கேட்கக் கூடாது. BCCI  விதிமுறைகளில் அப்பிடி இருக்கு.

நிருபர்: ரோஹித் ஷர்மா பத்தி சொல்லுங்க. அவர் ஏன் இப்பிடி கேனத்தனமா அவுட் ஆகுறாரு? நீங்க ஏன் அவரை விடாப்பிடியா சப்போர்ட் பண்றீங்க?

தோனி: ரோஹித் ரொம்ப நல்லா ஆடுனாரு. ஆனா அவுட் ஆகிட்டாரு.
நிருபர்: அதெப்டீங்க முடியும்? மோசமா ஆடுனா தானே அவுட் ஆவாங்க?

தோனி: ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்னு கேள்விப்பட்டதில்லையா அது மாதிரி

நிருபர்: இந்த மேட்சில இந்தியாவுக்கு சாதகமான அம்சம்னு, அதாவது நாம இன்னின்ன விசயங்களில நல்லா பண்ணி இருக்குமோன்னு எதை சொல்லுவீங்க?

தோனி: குக், பேலன்ஸ் ரெண்டு பேரும் பிரமாதமா பேட்டிங்க பண்ணுனாங்க. ஆண்டர்ஸன் வழக்கம் போல கலக்கிட்டாரு, அந்த மோயின் அலி குட்டிப்பையன் ரொம்ப அட்டகாசமா பவுலிங் போட்டு ஆறு விக்கெட் எடுத்தான். மொத்தத்தில நாம் ரொம்ப திருப்தியா இருக்கேன்.

நீருபர்: இவங்க எல்லாம் இங்கிலாந்து வீரர்கள்!

தோனி: கிரிக்கெட்டில எல்லாருமே ஒண்ணு தான். அவங்க ஒரு மோசமான பால் போட்டா தான் தான் நான் நாலு ரன் அடிக்க முடியும். அது மாதிரி நான் ஒரு கேட்ச் பிடிச்சா தான் அவுங்க அவுட்டாக முடியும். அதனால எல்லாருடைய சாதனைகளிலும் நமக்கு பங்கு இருக்கு. இப்பிடி பிரிச்சு பாக்காதீங்க. அது நல்லா இல்ல சொல்லீட்டேன்.

நிருபர்: சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?

தோனி: நாங்க எங்க தோத்தோம்? நாங்களும் நல்லா ஆடுனோம். இங்கிலாந்தும் நல்லா ஆடுனாங்க. இங்கிலாந்து ஜெயிச்சாலும் நாங்க ஜெயிச்சாலும் ஒண்ணு தான். என்னோட CSK அணிகிட்ட நான் அடிக்கடி ஒரு பழமொழி தமிழ்ல சொல்லுவேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லுவேன். அது ஸ்ரீனி மாமாக்கு ரொம்ப பிடிக்கும்.

நிருபர்: என்னது?


தோனி: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு!

Comments

//சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?//
போன டெஸ்டுல அவங்க தோத்தாங்க.அவங்களுக்கு மட்டும் என்ன ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு?.அவங்களால தோக்க முடிஞ்சா எங்களால தோக்க முடியாதா?.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...