முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோனியுடன் ஒரு உரையாடல்


நிருபர்: இந்த தோல்வியை பத்தி என்ன நினைக்கிறீங்க?

தோனி: நான் கேப்டன் ஆனதில இருந்து எத்தனையோ தோல்விகள் பார்த்திட்டேன். அதனால புதுசா ஒண்ணும் நெனக்கல

நிருபர்: ஆனாலும் ரொம்ப கேவலமா தோத்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லியா?

தோனி: நான் உலகப் பணக்காரர்களில் ஒருத்தன். எங்க அணியில் ஒவ்வொருத்தரும் கோடிஸ்வரர்கள். அவங்களும் சீக்கிரம் உலகப் பணக்காரர்கள் ஆகிடுவாங்க. நாங்க ஏன் அசிங்கப்படணும்? நீங்க இந்த கேள்வியை டாட்டா பிர்லாவை நோக்கி கேட்பீங்களா?


நிருபர்: இந்த மேட்சில இஷாந்த் ஆடாதது தான் தோல்விக்கு காரணமா?
தோனி: ஆக்சுவலி அவர் ஆடினா எங்களுக்கு அனுகூலம். அவரை எல்லாரும் திட்டுவாங்க. இப்போ அவர் இல்லாததினால நாங்க எல்லாரும் திட்டு வாங்குறோம்

நிருபர்: நீங்க வெறும் மூணு பவுலர்ஸோட போனீங்க. ஆனா பவுலிங் வீக் ஏரியான்னா அதிகமான பவுலர்ஸ் தானே அணியில் எடுக்கணும்?

தோனி: அப்பிடீன்னா 8 பவுலர்ஸோட ஆட்டடுமா?

நிருபர்: அப்போ பேட்டிங்கை பலப்படுத்த நீங்க 11 பேட்ஸ்மெனோட ஆடுவீங்களா?

தோனி: நான் தான் குண்டக்காமண்டக்கான்னு பதில் சொல்லுவேன். நீங்க அப்பிடி கேள்வி கேட்கக் கூடாது. BCCI  விதிமுறைகளில் அப்பிடி இருக்கு.

நிருபர்: ரோஹித் ஷர்மா பத்தி சொல்லுங்க. அவர் ஏன் இப்பிடி கேனத்தனமா அவுட் ஆகுறாரு? நீங்க ஏன் அவரை விடாப்பிடியா சப்போர்ட் பண்றீங்க?

தோனி: ரோஹித் ரொம்ப நல்லா ஆடுனாரு. ஆனா அவுட் ஆகிட்டாரு.
நிருபர்: அதெப்டீங்க முடியும்? மோசமா ஆடுனா தானே அவுட் ஆவாங்க?

தோனி: ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்னு கேள்விப்பட்டதில்லையா அது மாதிரி

நிருபர்: இந்த மேட்சில இந்தியாவுக்கு சாதகமான அம்சம்னு, அதாவது நாம இன்னின்ன விசயங்களில நல்லா பண்ணி இருக்குமோன்னு எதை சொல்லுவீங்க?

தோனி: குக், பேலன்ஸ் ரெண்டு பேரும் பிரமாதமா பேட்டிங்க பண்ணுனாங்க. ஆண்டர்ஸன் வழக்கம் போல கலக்கிட்டாரு, அந்த மோயின் அலி குட்டிப்பையன் ரொம்ப அட்டகாசமா பவுலிங் போட்டு ஆறு விக்கெட் எடுத்தான். மொத்தத்தில நாம் ரொம்ப திருப்தியா இருக்கேன்.

நீருபர்: இவங்க எல்லாம் இங்கிலாந்து வீரர்கள்!

தோனி: கிரிக்கெட்டில எல்லாருமே ஒண்ணு தான். அவங்க ஒரு மோசமான பால் போட்டா தான் தான் நான் நாலு ரன் அடிக்க முடியும். அது மாதிரி நான் ஒரு கேட்ச் பிடிச்சா தான் அவுங்க அவுட்டாக முடியும். அதனால எல்லாருடைய சாதனைகளிலும் நமக்கு பங்கு இருக்கு. இப்பிடி பிரிச்சு பாக்காதீங்க. அது நல்லா இல்ல சொல்லீட்டேன்.

நிருபர்: சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?

தோனி: நாங்க எங்க தோத்தோம்? நாங்களும் நல்லா ஆடுனோம். இங்கிலாந்தும் நல்லா ஆடுனாங்க. இங்கிலாந்து ஜெயிச்சாலும் நாங்க ஜெயிச்சாலும் ஒண்ணு தான். என்னோட CSK அணிகிட்ட நான் அடிக்கடி ஒரு பழமொழி தமிழ்ல சொல்லுவேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லுவேன். அது ஸ்ரீனி மாமாக்கு ரொம்ப பிடிக்கும்.

நிருபர்: என்னது?


தோனி: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு!

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?//
போன டெஸ்டுல அவங்க தோத்தாங்க.அவங்களுக்கு மட்டும் என்ன ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு?.அவங்களால தோக்க முடிஞ்சா எங்களால தோக்க முடியாதா?.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...