முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம் - கென்னத் பியரிங்


சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம்
பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம்,
உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம்,
உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு
அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம்.
ஒகெ.,
இருந்தாலும், திரும்ப வந்து விடு 


வீட்டுக்கு வா. என்னைப் பற்றி சுற்றத்துக்கும் பத்திரிகைகளுக்கும் நீ
தாராளமாய் அள்ளி வழங்கிய அறிக்கைகளை மறந்திட நானும் ஒத்துக் கொள்கிறேன்,
நீ, உன் கற்பனையை, அந்த டெட்ரோயிட்டில் உள்ள பொன்வண்ண கூந்தல் கொண்ட பெண் இருக்கிறாளே, அவளை மறந்ததாய் கொள்,
நமக்கு மேல் மாடியில் வசிக்கும் உன் தோழி,
உன் பல கிராக்குத்தனமான தோழிகளைப் போலன்றி,
பைத்தியமல்ல, கொஞ்சம் புத்திசாலி தான் என நானும் ஏற்கிறேன்
அந்த பாவம் ஸ்டெயின்பெர்க் குடிகாரனோ ஏமாற்றுக்காரனோ அல்ல,
கொஞ்சம் கோணலான, ஏதோ தன் போக்கில் வாழ்ந்து போகிற எளிய மனிதன் என நீயும் ஏற்றுக் கொள்.
(கேட்கிறாயா மூதி, இது தெளிவாக புரிகிறதா உனக்கு?)

நான் உன்னை மன்னிக்கிறேன், ஆம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான், என்பதால்
அழகாகவும், தாராளமாகவும் விவேகமாகவும் இருப்பதற்கும் உன்னை மன்னிப்பதால்
இன்னும் எளிதாய் சொல்வதானால், நீ உயிருடன் இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்,
நீ நீயாக இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்
இன்றிரவு நீ என் முடியிலும் கண்களிலும் இருப்பதால்
இந்த டாக்ஸி கடந்து போகும் ஒவ்வொரு தெருவும் மீண்டும் உன்னை, இன்னும் உன்னையே காட்டுவதால்
இன்றிரவு எல்லா இரவுகளும் கறுப்பாய் உள்ளதாய், எல்லா நாழிகைகளும் கடுங்குளிராய் இருப்பதால்
வெகு தொலைவில், இப்போது, இந்த நிமிஷம், நட்சத்திரங்கள் மிக அருகில் பிரகாசமாய் இருப்பதால்

திரும்ப வா. எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து வைக்க ஒரு முறை கொண்டாடுவோம் வா.
நமக்கு கீழ் குடியிருப்பில் உள்ள சவ அடக்கம் செய்வோனையும், அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களையும், வேறு சில நண்பர்களையும் அழைப்போம்.
அதோடு குடியை நிறுத்தி விட்ட ஸ்டெயின்பெக்கையும், மேல்மாடியில் வசிக்கும்
அந்த பைத்தியக்கார பெண்ணையும்,
ஏதாவது புது செய்தி தோன்றப் போகிறதென்றால் சில செய்தியாளர்களையும் அழைப்போம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...