முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம் - கென்னத் பியரிங்


சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம்
பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம்,
உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம்,
உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு
அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம்.
ஒகெ.,
இருந்தாலும், திரும்ப வந்து விடு 


வீட்டுக்கு வா. என்னைப் பற்றி சுற்றத்துக்கும் பத்திரிகைகளுக்கும் நீ
தாராளமாய் அள்ளி வழங்கிய அறிக்கைகளை மறந்திட நானும் ஒத்துக் கொள்கிறேன்,
நீ, உன் கற்பனையை, அந்த டெட்ரோயிட்டில் உள்ள பொன்வண்ண கூந்தல் கொண்ட பெண் இருக்கிறாளே, அவளை மறந்ததாய் கொள்,
நமக்கு மேல் மாடியில் வசிக்கும் உன் தோழி,
உன் பல கிராக்குத்தனமான தோழிகளைப் போலன்றி,
பைத்தியமல்ல, கொஞ்சம் புத்திசாலி தான் என நானும் ஏற்கிறேன்
அந்த பாவம் ஸ்டெயின்பெர்க் குடிகாரனோ ஏமாற்றுக்காரனோ அல்ல,
கொஞ்சம் கோணலான, ஏதோ தன் போக்கில் வாழ்ந்து போகிற எளிய மனிதன் என நீயும் ஏற்றுக் கொள்.
(கேட்கிறாயா மூதி, இது தெளிவாக புரிகிறதா உனக்கு?)

நான் உன்னை மன்னிக்கிறேன், ஆம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான், என்பதால்
அழகாகவும், தாராளமாகவும் விவேகமாகவும் இருப்பதற்கும் உன்னை மன்னிப்பதால்
இன்னும் எளிதாய் சொல்வதானால், நீ உயிருடன் இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்,
நீ நீயாக இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்
இன்றிரவு நீ என் முடியிலும் கண்களிலும் இருப்பதால்
இந்த டாக்ஸி கடந்து போகும் ஒவ்வொரு தெருவும் மீண்டும் உன்னை, இன்னும் உன்னையே காட்டுவதால்
இன்றிரவு எல்லா இரவுகளும் கறுப்பாய் உள்ளதாய், எல்லா நாழிகைகளும் கடுங்குளிராய் இருப்பதால்
வெகு தொலைவில், இப்போது, இந்த நிமிஷம், நட்சத்திரங்கள் மிக அருகில் பிரகாசமாய் இருப்பதால்

திரும்ப வா. எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து வைக்க ஒரு முறை கொண்டாடுவோம் வா.
நமக்கு கீழ் குடியிருப்பில் உள்ள சவ அடக்கம் செய்வோனையும், அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களையும், வேறு சில நண்பர்களையும் அழைப்போம்.
அதோடு குடியை நிறுத்தி விட்ட ஸ்டெயின்பெக்கையும், மேல்மாடியில் வசிக்கும்
அந்த பைத்தியக்கார பெண்ணையும்,
ஏதாவது புது செய்தி தோன்றப் போகிறதென்றால் சில செய்தியாளர்களையும் அழைப்போம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...