முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழியாக்க சறுக்கல்கள்

காலச்சுவடு வெளியீடான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு” எனும் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளின் மொழியாக்க தொகுப்பில் “ஒரு சிறிய நல்ல காரியம்” கதை படித்தேன். அருமையான கதை. எம்.கோபாலகிருஷ்ணனின் நல்ல சரளமான மொழியாக்கம். ஒரே பிரச்சனை சில idiomகளை நேரடியாக மொழிபெயர்ப்பது.


உதாரணமாய் ” There's all the rolls in the world in here." என்றொரு வாக்கியம். அதை “இங்கு உலகிலுள்ள அத்தனை ரோல்களும் உண்டு” என்று மொழியாக்குகிறார். ஆனால் “all the..in the world” என்றால் நிறைய என்று பொருள். உலகிலுள்ள அத்தனையும் என்றல்ல. இங்கு நிறைய ரோல்கள் உள்ளன என எளிமையாக இருக்க வேண்டும். இந்த தவறை நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் செய்கிறார்கள். அறுபதுகளில் யாரோ மொழியாக்கிய தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்தேன். அதில் it is time என்கிற எளிமையான வாக்கியத்தை “இது தான் நேரம்” என மொழியாக்கியிருந்தார். அதன் பொருள் நேரம் ஆகி விட்டது என இன்று நமக்கு சாதாரணமாக தெரியும். அது தவிர அது மிக நல்ல மொழிபெயர்ப்பே. மொழிபெயர்க்கையில் ஓரளவுக்கு idioms, phrases குறித்த அறிவு நல்லது என நினைக்கிறேன்.
அப்புறம் நான் முதலில் சொன்ன கார்வரின் கதையில் இப்படி ஒரு வரி:"I'd like to shoot him and watch him kick," she said”. அதாவது நான் அவனை சுட அவன் கால்களை உதைத்து துடிப்பதை பார்க்க வேண்டும் என பொருள். இதை நான் அவனை சுட்டு, பின் அவனை உதைத்து, அதை பார்ப்பேன் என மொழியாக்கி இருக்கிறார். இது படிக்கும் போதே இடறலாக உள்ளது. ஏன் ஒருத்தரை சுட்டு விட்டு பின் உதைக்க வேறு செய்ய வேண்டும் என தோன்றுகிறது. இது ஒரு கவனப்பிழை தான். நான் ஹைக்கூ மொழிபெயர்க்கும் போது இது போல் சில பிழைகளை செய்து பின்னர் திருத்தியிருக்கிறேன். ஒரு வேடிக்கைக்காக இங்கே சுட்டிக் காட்டினேன். மற்றபடி இப்படியான சறுக்கல் எந்த மொழிபெயர்ப்பாளனுக்கும் நிகழும்.

மேற்சொன்ன அபாரமான கதை பற்றி தனியே பிறகு எழுதுகிறேன். பிரமாதம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.