Skip to main content

Posts

Showing posts from January, 2015

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சுந்தர ராமசாமி கவிதைகள்: பிரக்ஞையின் ஒளிக்கற்றைகள்

இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி நிற்கும்போது நிழல் மேல் தான் நிற்கிறோமா? காலைத் தூக்கி பார்க்கலாம் தான். இந்த யோசனையை நான் ஏற்கவில்லை. பூமியில் நிற்கும் போது எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல் என்பது தான் எனக்குத் தெரிய வேண்டும். (சுந்தர ராமசாமி கவிதைகள், பக். 78) சு.ராவின் இந்த கவிதை ஒருவிதத்தில் அவரது அரசியல் அல்லது தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைக்கிறது. சு.ரா ஒரு நவீனத்துவவாதி. பொதுவாக தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களை இரண்டாக பிரிக்கலாம்: 1) பொருள்முதல்வாதிகள் 2) கருத்துமுதல்வாதிகள். அல்லது இப்படியும் பிரிக்கலாம். 1) அரசியலுணர்வு கொண்டவர்கள் 2) அரசியலற்றவர்கள். 

வாத்தின் கால்களும் கொக்கின் கால்களும் - அபிலாஷ் சந்திரனின் ‘கால்கள்’ நாவல் குறித்து – ஸ்ரீபதி பத்மநாபா

இ ன்றைய நாவல்களில் , ஆண் – பெண் , மேல்வர்க்கம் – ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று பல எதிர்நிலைகளுக்கிடயேயான உணர்வுப் போராட்டங்கள் , எதிர்நிலைகளுக்கிடையான சமூக அரசியல் ஆகியவற்றை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம் . சமீபத்தில் வாசித்த அபிலாஷ் சந்திரனின் ‘ கால்கள் ’ நாவல் இவற்றிலிருந்தெல்லாம் விலகி , அல்லது இவற்றோடு சேர்த்து , ஆரோக்கியமான உடல் – உபாதையுள்ள உடல் என்ற எதிர்நிலைகளுக்கிடையேயான சமூக அரசியலைப் பேசுகிறது .

சங்கர் படங்களின் பொதுவான களன் சமூக நோக்குக்காக பழிவாங்கும் ஒரு நாயகன் என்பதாக இருக்கும். “ஐ”யில் அவர் அதில் இருந்து ஆச்சரியமாக விலகி தனிப்பட்ட காரணத்துக்காக தண்டிக்கப்படும் ஒரு நாயகன் வில்லனை பழிவாங்குவதாக காட்டி இருக்கிறார். இந்த புதுவித கதையை சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார் என்பது அதை விட ஆச்சரியம். “ஐ” சங்கர் படம் போலவே இல்லை. பினாமி தொழிலதிபர் போல பினாமி இயக்குநர் வைத்து எடுத்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. அந்தளவுக்கு அவர் வழக்கமாய் ஸ்கோர் பண்ணுகிற இடங்களில் கூட அசட்டுத்தனமாக வழுக்குகிறார்.

"அலை பாயுதே”: காதல் திருமணமும் குற்றவுணர்வும்

“அலை பாயுதே ” நம் ஊரின் காதல் திருமணங்கள் ஏன் எளிதில் முறிகின்றன என்ற கேள்விக்கு ஒரு ஆழமான பதிலை அளிக்கிறது. அது தான் அப்படத்தின் முக்கியத்துவம்.

மதசார்பின்மை: மேலும் ஒரு விவாதம்

அன்புள்ள அபிலாஷ் , உங்களது மேல்கண்ட பதிவைப் படித்தேன் .  ஒரு வித்தியாசமான நோக்கு .  இந்தியாவில் பெரும்பாண்மையான மதச்சாற்பற்ற விமரிசர்கள் / அறிவுஜீவிகள் பிறப்பால் அல்லது கலாசார ரீதியில் இந்துக்களாக இருப்பதால் , உங்கள் வாதம் இந்தியச் சூழலுக்கு பெரும்பாலும் ஒத்ததாக இருக்கலாம் . ஆனால் , அடிப்படையில் உங்கள் வாதப்படி , ஒரு மதத்தைச் சார்ந்தவன் தான் அந்த மதத்தைப் பற்றி விமரிசிக்க முடியும் என்பது ஒரு குறுகலான பார்வை என்றே படுகிறது .  

ஏன் நாம் கிறித்துவர், இஸ்லாமியரை விமர்சிப்பதில்லை?

அடிக்கடி இந்துத்துவர்கள் கேட்கிற கேள்வி : “மதசார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள்  இந்துக்களை விமர்சிப்பது போல நீங்கள் தைரியமாய் பிற மதத்தவரை விமர்சிக்க முடியுமா ?”. பெருமாள் முருகன் சர்ச்சையிலும்   அதையே கேட்கிறார்கள் .

“மாதொரு பாகன்” சர்ச்சை: புனைவும் நிஜமும்

நேற்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடையில் பேசின டான் அசோக்கிடமும் இன்னும் சிலரிடமும் “மாதொரு பாகன்” அபுனைவு என்கிற மாதிரியான குழப்பத்தை பார்க்க முடிந்தது. அது திருச்செங்கோட்டின் பெயரை பயன்படுத்துகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு நம்பிக்கையை, சடங்கை பற்றினது என நாவலின் முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் ஆய்வை நாவலாக எழுதுவதற்காய் நிதி வாங்கி உருவாக்கப்பட்டது என்பது, ஆகையால் அது அபுனைவு, கட்டுரை நூலில் பெண்களை ஆதாரமின்றி இழிவுபடுத்திவிட்டார் இவர்களின் வாதங்கள்

பெருமாள் முருகன் சர்ச்சை: யார் துரோகி?

இன்று நான் பங்கேற்ற சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் சினிமா தணிக்கை, சர்ச்சை, பெருமாள் முருகன் பிரச்சனை ஆகியவை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பெருமாள் முருகன் ஏன் தனக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தும் தொடர்ந்து போராடாமல் பின்வாங்கினார் எனக் கேட்டார். இது குறித்து ஒரு விவாதம் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தஸ்லிமா நஸ்ரின் வேறு பெருமாள் முருகன் தேவையில்லாமல் பயந்து பின்வாங்கியதை கண்டித்து டிவிட்டரில் எழுதியதாக ஒரு சேதி பரவி உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எழுதப் போவதில்லை எனும் அவரது அறிக்கை தோல்வியை ஒப்புக் கொள்ளும் செயல்பாடா? அது தன் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் செய்த துரோகமா? மேலோட்டமாய் இந்த பின்வாங்கல் ஒரு துரோகம் போல் தோன்றினாலும் அடிப்படையில் பிழையான வாதம் இது.

பெருமாள் முருகனின் சர்ச்சை பற்றிய சர்ச்சைகள்

தான் எழுதுவதை நிறுத்தப் போவதாகவும், தன் புத்தகங்களை பின்வாங்குவதாகவும் பெருமாள் முருகனின் அறிக்கை வெளியிட்ட போது மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த சூழல் மீது சட்டென ஒரு கடும் வெறுப்பு தோன்றியது. பெருமாள் முருகனின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும் போது நீங்கள் பெரிய வெகுமதி இன்றி சமூக நோக்குக்காய், தனிப்பட்ட விருப்பத்துக்காய் செய்கிற ஒன்றை நிறுத்தி விடலாம் எனத் தோன்றும். இனி உன்னிடம் ஒரு போதும் பேச மாட்டேன் என ஒரு காதலி போனை துண்டிப்பது போலத் தான் இது. ஒரு உணர்ச்சிகரமான எழுத்தாளன் இப்படித் தான் இருப்பான்.

ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்

ஈச்சர வாரியாரின் “ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள்” என்னை மிகவும் நெகிழச் செய்த புத்தகம். தமிழில் குளச்சல். மு யூசுப் மொழியாக்கியிருக்கிறார். காலச்சுவடு பிரசுரித்திருக்கிறது. ஒரு சிறப்பான முன்னுரையை சுகுமாரன் எழுதியிருக்கிறார். கேரளாவில் கடந்த முப்பது வருடங்களில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய, கருணாகரனின் ஆட்சி கலைய செய்த ராஜன் கொலை வழக்கை பற்றிய புத்தகம் இது. பி.கிருஷ்ணனின் “புலிநகக்கொன்றை” நாவல் படித்தவர்களுக்கு ராஜன் பரிச்சயமானவராக இருப்பார். ராஜன் எனும் பொறியியல் கல்லூரி மாணவர் 1976இல் நெருக்கடி நிலை பிரகடனமாகியிருந்த வேளையில் காவல் துறையால் நக்சலைட் என தவறாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் கொல்லப்படுகிறார். பி.கிருஷ்ணனின் நாவலில் ஒரு பாத்திரம் இது போல் நல்சலைட் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு போலிசால் என்கவுண்டர் செய்யப்படும். அதனால் ஒரு குடும்பம் சிதைந்து போகும்

வெள்ளை

-     முழுங்குவது போல் சில குழந்தைகள் பார்க்குமே அப்படி ஒரு வெண்மை. வெள்ளை வெள்ளையான ஒரு பனிப்பிரதேசம். அறையில் குறைவான வெளிச்சம் வரும்படி விளக்கணைத்து ஜன்னல்களின் திரைகளை அங்கங்கே அட்ஜஸ்ட் செய்து கொஞ்சம் தொலைவில் இருந்து அந்த ஓவியத்தை பார்த்தேன். எனக்கு வெள்ளை, அதுவும் தூய வெள்ளையை, வரையப் பிடிக்கும். பனிப்பிரதேசங்கள், பனிக்கட்டி, காற்றில் பறக்கும் பிரம்மாண்டவெண்துகில், வெள்ளையான ஒரு பாப்பாவின் புஷ்டியான கன்னம் என அதை மட்டுமே வரைந்து கொண்டிருப்பேன்.

சிரமம் எனும் கற்பனை

இன்று காலையில் ஆந்தெனி ரோபின்ஸின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சில வேலைகளை சிரமம் என எண்ணி தள்ளிப் போடுகிறோம். ஆனால் சிரமம் உண்மையில் அவ்வேலை மீது ஒரு எதிர்மறை உணர்ச்சியாக திணிக்கப்படுகிறதே அன்றி எந்த வேலையும் அதன் அடிப்படையில் சிரமம் அல்ல. ஒருவேலையை எளிது, சுவாரஸ்யம் என யோசிக்க பழகிக் கொள்ளலாம். பிறகு மெல்ல மெல்ல அதை செய்வதற்கான தயக்கம் போய் விடும் என்கிறார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. இந்த விளம்பரங்கள் தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை நமக்கு தேவை என நம்ப வைத்து நம் மேல் திணிக்கவில்லையா? அப்படி இருக்க நாமே ஏன் நம்மை நம்ப வைக்க முடியாது? அதுவும் நமக்கு உபயோகமான விசயங்களுக்கு.

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 6)

அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னாள் “ அன்பு காட்டுவது கூட ஒரு குற்றம் தானே . ரொம்ப அன்பிருந்தால் அப்படியே அழிந்து போக வேண்டும் . இல்லாவிட்டால் பாதியிலே தப்பிக்க வேண்டும் . என்னைப் போல் ”.

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 5)

“ ஒருமுறை அவருக்கு உடம்பு முடியாமல் போய் படுத்த படுக்கையானார் . நான் அப்போது உள்ளூர அவர் இறந்து போவதை விரும்பினேன் . அவருக்காக ஓடியாடி கவனித்து பார்த்துக் கொண்டிருந்தாலும் உள்ளூர இதயம் அவரது மரணத்தை எதிர்பார்ப்பதை உணர்ந்தேன் . அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை . ரொம்ப கொடுமையான விசயம் இது . ஒருவரை ரொம்ப நேசிக்கிறோம் , மதிக்கிறோம் , ஆனால் அவர் செத்துப் போக வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகிறோம் . இந்த எண்ணம் தோன்றிய பின் அவரை பழைய படி அணுக உறவு கொள்ள என்னால் சுத்தமாக இயலவில்லை . இயல்பாக ஒரு பார்வை பார்க்கும் போதே இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றும் .”

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 4)

“ இல்லை என் கணவர் ரொம்ப மென்மையானவர் , கண்ணியமானவர் . ஒழுக்கம் நியாயம் இதையெல்லாம் ஆழமாய் நம்பி செயல்படுகிற வகையறா அவர் ” “ எனக்குத் தெரிந்த விவாகரத்து ஆகிறவர்கள் கணவனை பழிப்பார்கள் . நீ ஏதோ சீரியலில் வரும் நல்ல மனைவி போல பேசுகிறாய் ”

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 3)

விநோத் இருந்தால் வீட்டைச் சுற்றி நாலு தெருக்கள் , கண்டோண்ட்மெண்ட் சாலை அங்கிருந்து டிரங்க் ரோடு இப்படி வந்து திரும்பி விடுவார்கள் . ஆனால் அதற்கே சாலை ஏதோ மந்திரக் கம்பளம் போல பறக்கும் . ஒருநாள் விநோத் அனுவின் சின்ன வயது பற்றி சொன்னான் . அவளுக்கு சின்ன வயதில் ஆண்களின் முரட்டுத்தனமான விளையாட்டுகள் தான் பிடிக்கும் . கௌபாய் வேடமணிந்து குதிரை மீது போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது . ஒருநாள் விநோத்துடன் தகராறு செய்த மேல்வகுப்பு பையனை ஸ்கூல் வேனில் இருந்து கீழே தள்ளி விட்டு அப்பையனுக்கு மண்டை உடைந்து போனது . இதையெல்லாம் அவனுக்கு எதோ கிண்டல் என்று தான் பேசி வந்தாலும் அவளது விவாகாரத்து மீதான புகாராகத் தான் எனக்குப் பட்டது . விநோத் தான் தன் அக்காவைப் போன்றும் அக்கா தன்னைப் போன்றும் இருந்திருக்கலாம் எனவும் ஆசைப்பட்டிருக்கக் கூடும் . அந்த விசனமாகவும் இருக்கலாம் .