முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிரமம் எனும் கற்பனை


இன்று காலையில் ஆந்தெனி ரோபின்ஸின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சில வேலைகளை சிரமம் என எண்ணி தள்ளிப் போடுகிறோம். ஆனால் சிரமம் உண்மையில் அவ்வேலை மீது ஒரு எதிர்மறை உணர்ச்சியாக திணிக்கப்படுகிறதே அன்றி எந்த வேலையும் அதன் அடிப்படையில் சிரமம் அல்ல. ஒருவேலையை எளிது, சுவாரஸ்யம் என யோசிக்க பழகிக் கொள்ளலாம். பிறகு மெல்ல மெல்ல அதை செய்வதற்கான தயக்கம் போய் விடும் என்கிறார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. இந்த விளம்பரங்கள் தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை நமக்கு தேவை என நம்ப வைத்து நம் மேல் திணிக்கவில்லையா? அப்படி இருக்க நாமே ஏன் நம்மை நம்ப வைக்க முடியாது? அதுவும் நமக்கு உபயோகமான விசயங்களுக்கு.


அதற்காக பிடிக்காத வேலையை பிடிக்கிறது என நம்ப வைக்க முடியாது. பிடிக்காத மனைவி அல்லது கணவனை பிடிக்கிறது என பிடிவாதமாய் ஏற்க முடியாது. ஆனால் பிடிக்காத விசயங்களை ஏன் தொடர்ந்து செய்கிறோம் என யோசிக்கலாம். அந்த முடிவை எடுக்க ஏன் தள்ளிப் போடுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? முடிவெடுத்த பின் நம் நிலை இன்னும் மோசமாகாது, சிறப்பாகவே இருக்கும் என நம்மை நம்ப வைக்கலாம். அதன் மூலம் தயங்கி தயங்கி நரகத்தை அனுபவிக்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறலாம்.

ஆந்தொனி ரோபின்ஸின் வாதம் ஒருவித கருத்துமுதல் வாதம். அதாவது எல்லாம் மனமே, மனம் நினைத்தால் எதையும் மாற்றலாம் எனும் நம்பிக்கை. இதில் மிகை உள்ளது தான். ஆனால் ஓரளவு உண்மையும் உள்ளது.


என்னுடைய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை அதன் சிரமம் காரணமாய் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரது பேச்சை கேட்ட பின் இந்த “சிரமம்” ஒரு கற்பனை தான் எனப் புரிந்தது. உட்கார்ந்து எழுதி விட்டேன். இன்றைய காலைப் பொழுது உபயோகமாய் ஆனது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.