முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களைப் பற்றி மட்டுமான கதை (பகுதி 4)

இல்லை என் கணவர் ரொம்ப மென்மையானவர், கண்ணியமானவர். ஒழுக்கம் நியாயம் இதையெல்லாம் ஆழமாய் நம்பி செயல்படுகிற வகையறா அவர்
எனக்குத் தெரிந்த விவாகரத்து ஆகிறவர்கள் கணவனை பழிப்பார்கள். நீ ஏதோ சீரியலில் வரும் நல்ல மனைவி போல பேசுகிறாய்

அவள் க்ளுக்கென்று சிரித்து விட்டு தொடர்ந்தாள்நிஜமாகவே என் கணவர் ரொம்ப நல்லவர் தான்.”
சரி புரிகிறது. நீ என் வகை. உனக்கு கெட்டவர்கள், கெட்ட காரியங்கள் தான் முழுதிருப்தி தரும். ஸோ உன் கணவரின் அம்மாஞ்சித்தனம் நல்லபிள்ளைத்தனம் ஒரு கட்டத்தில் ரொம்ப போரடித்து விட்டது. பிரிந்து விட்டாய்
ஏன் சார் எங்கேயாவது மனைவிக்கு கணவன் நல்லவனாய் இருப்பது போரடிக்குமா?”
 “சரி புரியல, கிவ் அப்.” இருகைகளையும் சரணாகதியாய் தூக்கினேன்.
அனு சொன்னாள், “எனக்கு இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல அரிக்கிறது. ரொம்ப நாளாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரே பிரச்சனை கேட்கிற யாரும் என்னை நம்ப மாட்டார்கள், அறிவுரை கூறுவார்கள் என்பது. உங்களைப் பார்த்தால் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. விநோத் அந்த கதையை சொன்ன பிறகு எனக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டது
அதான் எனக்கு பெண்களைப் புரிந்து கொள்ளவே தெரியாது என்று விட்டாயே. இதை மட்டும் தமிழ்நாட்டில் என் வாசகர்கள் கேட்டார்கள் என்றால் அங்கே பெரும் கலவரமே வெடிக்கும். கொதித்து போய் விடுவார்கள். என் வாசகர்களைப் பற்றி உனக்குத் தெரியும் இல்லையா?”
இப்படியெல்லாம் எதுக்கெடுத்தாலும் என் வாசகர் படை ரசிகர் கூட்டம்ன்னு கட்டபொம்மன் வசனம் பேசுவீங்க என்று கூட விநோத் சொன்னான். உங்க ரசிகர்களில பாதி பேர் உங்களை திட்டி எதனாச்சும் எழுதுவாங்கன்னும், மிச்ச பாதி பேர் அவங்க எழுதிறத படிச்சுட்டு திரும்ப திட்டுவாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன். அதனாலத்தான் அவங்களே பொதுவா உங்க புக்ஸ் எதுவும் படிக்கிறதில்லியா?”
எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அழகான பெண்களை மட்டும் கொல்லத் தோன்றாது. குறிப்பாக ரொம்ப பக்கத்தில் கழுத்தை நெரிக்கிற வாகில் இருந்தாலும்.
சரி கூல் டவுன். ஆனாலும் உங்களால என்னை புரிஞ்சுக்க முடியும்னு தோணிச்சு
ஏன்?”
அதை கடைசியில சொல்றேன். ஏன் என் கணவனை விவாகரத்து பண்றேன்னு தெரியணுமில்ல?”
அவர் உங்களை விவாகரத்து பண்ணலையா?”
இல்லை நான் தான் initiator. என்னால தான் அவர் கூட தொடர்ந்து வாழ முடியல
ஒகெ. ஏன்?”
ஒரு சின்ன வளைவில் ஒடித்து திருப்பியதில் ஒரு சின்ன பையன் பயந்து சைக்கிளை கீழே போட்டு மறுபக்கமாய் சாய்ந்து விழுந்தான். கியர் மாற்றி முன்னே பாய ஒரு சோன்பப்பிடி தள்ளு வண்டிக்காரன் எதிரே வந்து விழுந்தான். இந்த குழப்படி எல்லாம் மாறி சற்று தூரம் வந்ததும் அவள் சொன்னாள்.
எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளாய் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. அவர் என் காரியத்தில் ரொம்ப புரிதலோடு நடந்து கொள்வார். நிறைய சுதந்திரம் தருவார். எனக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள பயம் இருந்தது. அதனாலே செக்ஸை தள்ளிப் போட்டுக் கொண்டு வருவேன். அவர் ரொம்ப இறங்கி வந்து கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த ஒத்துக் கொண்டார். ஆனால் எனக்கு அதிலும் குற்றவுணர்வு இருந்தது. விளைவாக நாங்கள் வருடத்துக்கு ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மீத நாட்கள் சகோதர சகோதரி போலத் தான் வாழ்ந்து வந்தோம். அந்த விதிவிலக்குகளினால் கூட நான் கருத்தரிக்க வில்லை
குழந்தை இல்லாதது உங்களுக்குள் கசப்பை ஏற்படுத்தியதா?”

ச்சே. அவர் குழந்தை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை என்றார். அந்தளவுக்கு நல்லவர். இது தான் எனக்கு சொல்லப்போனால் மனதுக்கு அதிக கஷ்டம் தந்தது. அப்புறம் நான் அவரை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்தேன். எங்களுக்குள் அதுவரை ஆவேசமான காதல் ஒன்றும் இல்லை தான். அவர் என்னை கல்யாணம் பண்ணும் போதே முப்பத்தைந்து தாண்டியிருந்தார். ஆனால் எங்களுக்குள் ஒரு அபாரமான ஒத்திசைவு, அணுக்கம், மென்மையான அன்பு கூட இருந்தது. நன்றாக ஓடும் எந்திரத்தின் இரு பாகங்கள் போல எனலாம். நான் ஒருவர் ஒருவருக்கு தேவையாக இருந்தோம். இச்சை கடந்த ஒரு பரிவும் ஈடுபாடும் ஒட்டுதலும் எங்களிடையே இருந்தது. குறிப்பாக அவருக்கு என் மீது அளவு கடந்த பாசம். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் இந்த தோற்றத்தை தக்க வைக்க முடியவில்லை. வெறுத்து விட்டது. இனியும் அவருடன் இருந்தால் என்னையே நான் வெறுக்க நேரிடும் எனத் தோன்றியது.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...