முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் நாம் கிறித்துவர், இஸ்லாமியரை விமர்சிப்பதில்லை?

அடிக்கடி இந்துத்துவர்கள் கேட்கிற கேள்வி: “மதசார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இந்துக்களை விமர்சிப்பது போல நீங்கள் தைரியமாய் பிற மதத்தவரை விமர்சிக்க முடியுமா?”. பெருமாள் முருகன் சர்ச்சையிலும் அதையே கேட்கிறார்கள்.


பதில்: ஒரு மதசார்பற்றவர் இந்து மதத்தை விமர்சிக்கையிலும் இந்து மதத்தின் சார்பில் நின்றே விமர்சிக்கிறார். என்ன தான் மதசார்பற்றவர் என்றாலும் அவர் இந்து மதத்திற்கு வெளியே போவதில்லை. இதை ஒரு சுய மத விமர்சனமாகவே கொள்ள வேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பிற மதத்தவரை அவ்வாறு எந்த சார்பில் நின்று விமர்சிப்பது? மத சார்பற்றவர்கள் முழுக்க வெளியில் நிற்கும் பட்சத்தில் மட்டுமே கிறித்துவர்கள், இஸ்லாமியரை விமர்சிப்பது சாத்தியமாகும். அவ்வாறு முழுக்க மதத்திற்கு வெளியே நிற்பது சாத்தியமில்லை. விவாகரத்து பெற்ற பின் மனைவியை விமர்சிக்க முடியுமா? முடியாது. அது போல் தான் இதுவும். பெரியார் இந்து மதத்திற்கு உள்ளே நின்றே தான் அதை விமர்சித்தார். பெர்ண்ட்னெண்ட் ரஸனும் கிறித்துவத்திற்கு உள்ளே நின்று தான் Why I am not a Christian எழுதுனார்.


இந்த அடிப்படை லாஜிக் புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே கேட்காதீர்கள். குதிரை மீதிருந்து இறங்கி அதை ஓட்ட முடியாது. முட்டையை உடைக்காமல் குடிக்க முடியாது. ஒன்றை அதன் வெளியில் நின்று விமர்சிக்க முடியாது.

கருத்துகள்

manjoorraja இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை தான். இந்து மதத்திலிருந்துக்கொண்டு விமர்சிக்க முடியும். மற்ற மதங்களில் அப்படி செய்தால் பெரிய பாதிப்புகள் உண்டு.
ஸ்ரீகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
you know that a person should have in depth knowledge before judge or critise his own religion.....most of the people now does not have basic knowledge.
poornam இவ்வாறு கூறியுள்ளார்…
கேள்வியை சிறிது மாற்றிக்கேட்டால் நீங்கள் இவ்வளவு வசதியாகக் குழப்ப முடியாது.
முற்போக்குவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள்? மதச்சார்பற்றவர்களை ஹிந்து மதச்சார்பற்றவர் இஸ்லாமிய மதச்சார்பற்றவர் என்றுதான் பார்க்க முடியும் என்கிறீர்கள்
முற்போக்கு/ பகுத்தறிவுக்காரர்களையும் அப்படித்தான் வகைப்படுத்துவீர்களா?
அப்படி அடிப்படையில் தான் ஒரு இந்து/ இஸ்லாம் என்பதை நினைவு இல்லாமல் ஒருவர் முற்போக்காக இருக்க முடியாதென்றால் அது உண்மையான முற்போக்குதானா என்கிற கேள்வி எழுகிறதே?
மற்றொரு அபத்தம்:
ஒரு அமைப்புக்கு வெளியிலிருந்து அதை விமர்சிக்க முடியாதென்ற உங்கள் வாதம் அடிப்படை இல்லாதது. உதாரணமாக முடியாட்சியை உலகம் முழுக்க விமர்சித்துத் தூக்கியெறிந்தவர்களெல்லாம் முடியரசின் அங்கமானவர்களா? அதற்கு வெளியிலிருந்த சாமான்யர்களா? முதலாளித்துவத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட்களெல்லாம் முதாலாளி வர்க்கத்திலிருந்தே உருவானவர்கள்தானா? உழைப்பாளிகளா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...