Skip to main content

ஏன் நாம் கிறித்துவர், இஸ்லாமியரை விமர்சிப்பதில்லை?

அடிக்கடி இந்துத்துவர்கள் கேட்கிற கேள்வி: “மதசார்பற்றவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இந்துக்களை விமர்சிப்பது போல நீங்கள் தைரியமாய் பிற மதத்தவரை விமர்சிக்க முடியுமா?”. பெருமாள் முருகன் சர்ச்சையிலும் அதையே கேட்கிறார்கள்.


பதில்: ஒரு மதசார்பற்றவர் இந்து மதத்தை விமர்சிக்கையிலும் இந்து மதத்தின் சார்பில் நின்றே விமர்சிக்கிறார். என்ன தான் மதசார்பற்றவர் என்றாலும் அவர் இந்து மதத்திற்கு வெளியே போவதில்லை. இதை ஒரு சுய மத விமர்சனமாகவே கொள்ள வேண்டும். அதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் பிற மதத்தவரை அவ்வாறு எந்த சார்பில் நின்று விமர்சிப்பது? மத சார்பற்றவர்கள் முழுக்க வெளியில் நிற்கும் பட்சத்தில் மட்டுமே கிறித்துவர்கள், இஸ்லாமியரை விமர்சிப்பது சாத்தியமாகும். அவ்வாறு முழுக்க மதத்திற்கு வெளியே நிற்பது சாத்தியமில்லை. விவாகரத்து பெற்ற பின் மனைவியை விமர்சிக்க முடியுமா? முடியாது. அது போல் தான் இதுவும். பெரியார் இந்து மதத்திற்கு உள்ளே நின்றே தான் அதை விமர்சித்தார். பெர்ண்ட்னெண்ட் ரஸனும் கிறித்துவத்திற்கு உள்ளே நின்று தான் Why I am not a Christian எழுதுனார்.


இந்த அடிப்படை லாஜிக் புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே கேட்காதீர்கள். குதிரை மீதிருந்து இறங்கி அதை ஓட்ட முடியாது. முட்டையை உடைக்காமல் குடிக்க முடியாது. ஒன்றை அதன் வெளியில் நின்று விமர்சிக்க முடியாது.

Comments

manjoorraja said…
உண்மை தான். இந்து மதத்திலிருந்துக்கொண்டு விமர்சிக்க முடியும். மற்ற மதங்களில் அப்படி செய்தால் பெரிய பாதிப்புகள் உண்டு.
you know that a person should have in depth knowledge before judge or critise his own religion.....most of the people now does not have basic knowledge.
poornam said…
கேள்வியை சிறிது மாற்றிக்கேட்டால் நீங்கள் இவ்வளவு வசதியாகக் குழப்ப முடியாது.
முற்போக்குவாதிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறார்கள்? மதச்சார்பற்றவர்களை ஹிந்து மதச்சார்பற்றவர் இஸ்லாமிய மதச்சார்பற்றவர் என்றுதான் பார்க்க முடியும் என்கிறீர்கள்
முற்போக்கு/ பகுத்தறிவுக்காரர்களையும் அப்படித்தான் வகைப்படுத்துவீர்களா?
அப்படி அடிப்படையில் தான் ஒரு இந்து/ இஸ்லாம் என்பதை நினைவு இல்லாமல் ஒருவர் முற்போக்காக இருக்க முடியாதென்றால் அது உண்மையான முற்போக்குதானா என்கிற கேள்வி எழுகிறதே?
மற்றொரு அபத்தம்:
ஒரு அமைப்புக்கு வெளியிலிருந்து அதை விமர்சிக்க முடியாதென்ற உங்கள் வாதம் அடிப்படை இல்லாதது. உதாரணமாக முடியாட்சியை உலகம் முழுக்க விமர்சித்துத் தூக்கியெறிந்தவர்களெல்லாம் முடியரசின் அங்கமானவர்களா? அதற்கு வெளியிலிருந்த சாமான்யர்களா? முதலாளித்துவத்தை எதிர்த்த கம்யூனிஸ்ட்களெல்லாம் முதாலாளி வர்க்கத்திலிருந்தே உருவானவர்கள்தானா? உழைப்பாளிகளா?

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...